ஆனி 01_* *_15.06.2021 ஜூன்_* *_செவ்வாய் கிழமை
*_வரலாற்றில்
இன்று_*
*நிகழ்வுகள்*
கிமு 763 – மெசொப்பொத்தேமியாவின்
வரலாற்றுக் காலக்கோட்டைக் கண்டறிய உதவிய சூரிய கிரகணம் ஒன்றை அசிரியர்கள் பதிந்தார்கள்.
844 – இத்தாலியின்
மன்னராக இரண்டாம் லூயிசு உரோம் நகரில் இரண்டாம் செர்கியசினால் முடிசூடி
வைக்கப்பட்டார்.
923 – சோயிசன்சு
என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரான்சின் முதலாம் இராபர்ட் மன்னர்
கொல்லப்பட்டார்,
1184 – பிம்ரைட் என்ற
இடத்தில் நடந்த போரில் நோர்வே மன்னர் ஐந்தாம் மாக்னசு கொல்லப்பட்டார்.
1215 – இங்கிலாந்தின்
ஜோன் மன்னர் மாக்னா கார்ட்டாவில் தனது இலச்சினையைப் பதிந்தார்.
1219 – வடக்கு
சிலுவைப் போர்கள்: லிந்தானீசு சமரை அடுத்து தானிய எசுத்தோனிய இராச்சியம்
அமைக்கப்பட்டது.
1246 – ஆஸ்திரியாவின்
இரண்டாம் பிரெடெரிக்கின் இறப்புடன் பாபன்பேர்க் அரச வம்சம் அழிந்தது.
1300 – பில்போ நகரம்
அமைக்கப்பட்டது.
1389 – கொசோவோவில்
நடந்த போரில் உதுமானியர்கள் செர்பியர்களையும் பொசுனியர்களையும் தோற்கடித்தனர்.
1502 – கிறித்தோபர்
கொலம்பசு தனது நான்காவது கடற் பயணத்தின் போது மர்தினிக்கு தீவில் கால் வைத்தார்.
1520 – திருத்தந்தை
பத்தாம் லியோ மார்ட்டின் லூதரை உறவு ஒன்றிப்பிலிருந்து நீக்கப்போவதாக எச்சரித்தார்.
1667 – முதலாவது மனித
குருதி மாற்றீடு மருத்துவர் சான் பாப்டிஸ்ட் டெனிஸ் என்பவரால் மேற்கொள்ளப்பட்டது.
1752 – பெஞ்சமின்
பிராங்கிளின் மின்னல் ஒரு மின்சாரம் என்பதை நிறுவினார்.
1775 – அமெரிக்கப்
புரட்சிப் போர்: சியார்ச் வாசிங்டன் அமெரிக்க இராணுவத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
1776 – டெலவெயர்
பென்சில்வேனியாவில் இருந்து பிரிவதற்கு ஆதரவாக வாக்களித்தது.
1785 – ஆங்கிலக்
கால்வாயை ழீன்-பிரான்சுவா பிலாத்ரே டி ரோசியர், பியேர்
ரொமாயின் ஆகியோர் வெப்பக் காற்றுக் குடுவையில் பறக்க முயன்றபோது குடுவை
வெடித்ததில் உயிரிழந்தனர். இதுவே முதலாவது வான விபத்து ஆகும்.
1808 – யோசப்
பொனபார்ட் எசுப்பானியாவின் மன்னராக முடிசூடினார்.
1836 – ஆர்கன்சா 25வது அமெரிக்க மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1844 – இயற்கை
இறப்பர் பதப்படுத்தும் முறை சார்லசு கூடியர் என்பவரால் காப்புரிமம் பெறப்பட்டது.
1846 – அமெரிக்கா, கனடா ஆகியவற்றின் எல்லைக்கோடு ராக்கி
மலைத்தொடர் முதல் உவான் டெ பூக்கா நீரிணை வழியாக வரையப்பட்டது.
1846 – இலங்கையின் அரச
ஆசியர் சமூகம் ஜேர்னல் என்ற தனது முதலாவது இதழை வெளியிட்டது.
1878 – குதிரை ஒன்று
ஓடுகையில் அதன் நான்கு கால்களும் தரையில் படுவதில்லை என்பதை நிறுவும்
புகைப்படங்களை எதுவார்து மைபிரிட்ச் என்பவர் எடுத்தார். இவ்வாய்வே பின்னர் அசையும்
திரைப்படம் உருவாக மூலமாக அமைந்தது.
1888 – முடிக்குரிய
இளவரசர் வில்லியம் செருமானியப் பேரரசின் கடைசி மன்னராக முடிசூடினார். 1888 இல் முதலாம் வில்லியம், மூன்றாம் பிரெடெரிக் ஆகிய மன்னர்கள் இறந்ததனால், இவ்வாண்டு செருமனியின் மூன்று பேரரசர்களின்
ஆட்சி ஆண்டு ஆகும்.
1896 – சப்பானில்
சன்ரிக்கு என்ற இடத்தில் இடம்பெற்ற நிலநடுக்கம், மற்றும் சுனாமியால் 22,000 பேருக்கு
மேல் உயிரிழந்தனர்.
1904 – நியூயோர்க்
நகரில் கிழக்கு ஆற்றில் ஜெனரல் சுலோக்கம் என்ற நீராவிப் படகு தீப்பற்றியதில் 1,000 பேர் வரை உயிரிழந்தனர்.
1909 – இங்கிலாந்து, ஆத்திரேலியா, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பிரதிநிதிகள் இலார்ட்சுவில் கூடி, இம்பீரியல் துடுப்பாட்ட மாநாட்டை ஆரம்பித்தனர்.
1937 – கார்ல் வியென்
தலைமையில் சென்ற செருமானியக் குழு நங்க பர்வதத்தில் பனிச்சரிவில் சிக்கி தனது 16 உறுப்பினர்களை இழந்தது.
1940 – இரண்டாம்
உலகப் போர்: செருமனி பாரிசு நகரைக் கைப்பற்றியதை அடுத்து நேச அணிப் படைகள்
பிரான்சில் இருந்து வெளியேற ஆரம்பித்தன.
1944 – இரண்டாம்
உலகப் போர்: சப்பானியரின் பிடியில் இருந்த சைப்பேனை ஐக்கிய அமெரிக்கா
கைப்பற்றியது.
1944 – சசுக்காச்சுவான்
பொதுத்தேர்தலில் டொம்மி டக்ளசு தலைமையில் வட அமெரிக்காவின் முதலாவது சோசலிச அரசு
பதவியேற்றது.
1954 – ஐரோப்பிய காற்பந்துச்
சங்கங்களின் ஒன்றியம் சுவிட்சர்லாந்தின் பேசெல் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
1977 – எசுப்பானியாவில்
முதல் தடவையாக மக்களாட்சி முறைத் தேர்தல் இடம்பெற்றது.
1978 – ஜோர்தான்
மன்னர் உசைன், லீசா அலபி
என்ர அமெரிக்கப் பெண்ணைத் திருமனம் புரிந்தார். இவர் நூர் மகாராணி என
அழைக்கப்பட்டார்.
1984 – யாழ்ப்பாணம்
காரைநகரில் இலங்கைக் கடற்படை ஒன்று விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
1991 – பிலிப்பீன்சில்
பினாடூபோ எரிமலை வெடித்ததில் 800 பேருக்கு
மேல் உயிரிழந்தனர்.
1994 – இசுரேலும், வத்திக்கானும் முழுமையான பண்ணுறவாண்மையை
ஏற்படுத்திக் கொண்டன.
1996 – ஐரியக்
குடியரசுப் படை (ஐஆர்ஏ) மான்செஸ்டர் நகரில் பலம் வாய்ந்த சுமையுந்துக் குண்டை
வெடிக்கவைத்ததில் பலர் காயமடைந்தனர்.
2014 – பாக்கித்தான்
வடக்கு வசீரித்த்தானில் தீவிரவாதிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது.
1594 – நிக்கோலா
போசின், பிரான்சிய ஓவியர் (இ. 1665)
1754 – யுவான் ஒசே
எலுயார், எசுப்பானிய வேதியியகாளர், கனிமவியலாளர் (இ. 1796)
1843 – எட்வர்டு கிரெய்கு, நோர்வே இசைக்கலைஞர். இசையமைப்பாளர் (இ. 1907)
1848 – பருமலா
திருமேனி, இந்திய ஆயர், புனிதர் (இ. 1902)
1863 – கிருஷ்ண
சுவாமி அய்யர், இந்திய
வழக்கறிஞர், சென்னை
உயர்நீதிமன்ற நீதியரசர் (இ. 1911)
1902 – எரிக்
எரிக்சன், செருமானிய-அமெரிக்க உளவியல் நிபுணர் (இ. 1994)
1921 – எம். எச்.
மொகம்மது, இலங்கை அரசியல்வாதி (இ. 2016)
1926 – அல்பிரட்
துரையப்பா, இலங்கை அரசியல்வாதி, வழக்கறிஞர் (இ. 1975)
1933 – வீரசிங்கம்
ஆனந்தசங்கரி, இலங்கைத்
தமிழ் அரசியல்வாதி
1934 – ஜவஹர் சு.
சுந்தரம், தமிழக எழுத்தாளர்
1935 – மணவை முஸ்தபா, தமிழகத் தமிழறிஞர் (இ. 2017)
1937 – ப. தங்கம், தமிழக ஓவியர்
1939 – உதுமாலெவ்வை
ஆதம் பாவா, இலங்கை எழுத்தாளர்
1941 – ஆகென்
கிலிநெர்டு, செருமனிய
இயற்பியலாளர்
1941 – டி. ஆர். பாலு, இந்திய அரசியல்வாதி
1941 – ஆகென்
கிலிநெர்டு, செருமனிய
இயற்பியலாளர்
1942 – ப. மு. அன்வர், மலேசியத் தமிழ்க் கவிஞர்
1944 – மலேசியா
வாசுதேவன், திரைப்படப் பாடகர், நடிகர் (இ. 2011)
1944 – க.
நெடுஞ்செழியன், தமிழக
எழுத்தாளர்
1953 – உமர் தம்பி, தமிழ்க் கணிமைக்கு சிறந்த பங்களிப்புக்களை
வழங்கியவர் (இ. 2006)
1950 – இலட்சுமி
மித்தல், இந்திய-ஆங்கிலேயத் தொழிலதிபர்
1953 – சீ சின்பிங், சீன அரசுத்தலைவர்
1959 – பசேலியோஸ்
கிளேமிஸ் பாவா, கேரள பேராயர்
1969 – ஐஸ் கியூப், அமெரிக்க ராப் கலைஞர், நடிகர்
1973 – நீல் பாட்ரிக்
ஹாரிஸ், அமெரிக்க நடிகர், பாடகர்
1984 – நகுல், தமிழ் நடிகர், பின்னணிப் பாடகர்
1948 – ராஜா சர்
அண்ணாமலை செட்டியார், தமிழிசை
ஆய்வாளர் (பி. 1881)
1849 – ஜேம்ஸ் போக், அமெரிக்காவின் 11வது அரசுத்தலைவர் (பி. 1795)
1952 – விளாதிமிர்
அலெக்சாந்திரோவிச் அல்பித்சுகி, உருசிய
வானியலாளர் (பி. 1891)
1971 – சத்தியன், தென்னிந்திய, மலையாளத் திரைப்பட நடிகர் (பி. 1912)
1975 – ஆலங்குடி
இராமச்சந்திரன், தமிழக கடம்
கலைஞர் (பி. 1912)
1975 – கே. ஏ.
நீலகண்ட சாஸ்திரி, இந்திய
வரலாற்றாளர், திராவிடவியலாளர்
(பி. 1892)
2006 – டி. எஸ்.
இராமஸ்வாமி பிள்ளை, தமிழக
அரசியல்வாதி (பி. 1918)
2008 – தங்கம்மா அப்பாக்குட்டி, இலங்கை ஆன்மிகவாதி (பி. 1925)
2013 – மணிவண்ணன், தமிழகத் திரைப்பட நடிகர், செயற்பாட்டாளர் (பி. 1954)
2016 – ஏ. சி.
திருலோகச்சந்தர், தமிழகத்
திரைப்பட இயக்குநர் (பி. 1930)
2016 – சோமவன்ச
அமரசிங்க, இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (பி. 1943)
2016 – அலவி மௌலானா, இலங்கை அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர் (பி. 1932)
*சிறப்பு நாள்*
*மர நாள் (கோஸ்ட்டா ரிக்கா)*
*உலகக் காற்று நாள்*
🔷🔶இன்றைய
சிந்தனை..*
*"எண்ணம்
எப்படியோ''.*
..................................
*🏵️நண்பகல் நேரம், மத்தியான வெயில் கொளுத்திக் கொண்டு இருந்தது. மரத்தடியில் ஒருவன் நன்றாக
உறங்கிக் கொண்டு இருந்தான்.*
*🏵️அந்த வழியாக வந்த விறகுவெட்டி அவனைப் பார்த்தான்.*
*கடுமையான
உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்த களைப்பால் தான் இந்த வெயிலிலும் இப்படி
உறங்குகிறான்.” என நினைத்துக்
கொண்டே சென்றான்.*
*🏵️அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக
வந்தான்.*
*இரவு
முழுவதும் கண் விழித்துத் திருடி இருப்பான் போலத் தெரிகிறது அதனால் தான் இந்த
சுட்டெரிக்கும் வெயிலிலும் அடித்துப் போட்டது போல் தூங்குகிறான் “ என நினைத்துக்
கொண்டே சென்றான்.*
*🏵️மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் அந்த வழியாக
வந்தான்*
*"காலையிலேயே
நன்றாகக் குடித்து விட்டான் போல இருக்கிறது .அதனால் தான் குடி மயக்கத்தில் இப்படி
விழுந்து கிடக்கிறான்” என நினைத்துக்
கொண்டே சென்றான்.*
*🏵️சிறிது நேரத்தில் அறிஞர் ஒருவர் வந்தார்.*
*இந்த
நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த ஞானியாகத் தான் இருக்க வேண்டும்.
வேறு யாரால் இத்தகையச் செயலை செய்ய முடியும்” என அவரை வணங்கி விட்டுச் சென்றார்.*
*🏵️கதையின் மையக் கருத்து.*
*'நாம் எப்படியோ
நம் எண்ணங்களும் அப்படியே.!!!''*
*😎ஆம், என் இனிய நண்பர்களே,*
*✍️நல்ல
எண்ணங்கள் கொண்ட மனிதர்கள் மட்டுமே என்றென்றும் நலமாக வாழ்கின்றார்கள்.*
*✍️அவர்களின்
முகத்தில் புன்னகையும், பொலிவும், கலகலப்பும்
மின்னும் மிளிரும்.*
*✍️நல்ல எண்ணம்
உடையவர்கள்* *வாழ்க்கையில்*
*ஒளிமயமாகப்
பவனி வருவார்கள்.*
*✍️ஏனெனில் தூய
எண்ணங்கள் நிறைந்த இதயத்தில் தீய சிந்தனைகள் உதயம் ஆவதில்லை.*
0 Response to "15.06.2021 வரலாற்றில் இன்று , இன்றைய சிந்தனை"
Post a Comment