15.06.2021 பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை

Trending

Breaking News
Loading...
15.06.2021 பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை

 


*🔹🔸✍️தூத்துக்குடி*
61 நாட்களுக்குப் பின் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்... மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்ததால் உற்சாகம்... சுழற்சி முறையில் 160 படகுகளில் கடலுக்கு சென்றனர் தூத்துக்குடி மீனவர்கள்...
 
*🔹🔸✍️சென்னை* சைதாப்பேட்டையில் உள்ள ரேசன் கடையில் 14 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
மளிகை பொருட்களுடன் கொரோனா நிவாரண நிதியும் வழங்கப்பட்டது!
 
*🔹🔸✍️சேலம் மாவட்டம்* மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியம், ஏகாபுரம் ஊராட்சி தைலாம்பட்டி,மற்றும் கலியகவுண்டனூர் ரேசன்கடைகளில், இன்று இரண்டாம் கட்ட நிவாரண தொகை 2000 மற்றும் 14 மளிகை பொருட்கள் தொகுப்பு ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.
 
*🔹🔸✍️சேலம் மாவட்டத்தில்* மதுக்கடைகள் திறக்கப்படாததால் அங்கிருந்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைக்கு குவிந்து வரும் மது பிரியர்கள்.
 
*🔹🔸✍️நெல்லை* ️அம்பாசமுத்திரம் அருகே தெற்குபாப்பான்குளத்தில் முன்விரோதம் காரணமாக வேலு என்பவர் நள்ளிரவில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கொலைக்கு தொடர்புடையவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
 
*🔹🔸✍️திருப்பத்தூர்* ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி ரமேஷ் என்பவர் உயிரிழந்துள்ளார்.
கழிவுநீர் தொட்டி சுத்தம்  செய்த மேலும் 2 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துத்திப்பட்டிலுள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் இருந்த கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.
 
*🔹🔸✍️சென்னை* சேத்துப்பட்டில் உள்ள புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை.
மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
விசாரணைக்காக பள்ளி தாளாளர் ஜே.கே.பிரான்சிஸ், முதல்வர் மார்க் ஆகியோர் ஆணையத்தில் ஆஜர் ஆகியுள்ளனர்.
 
*🔹🔸✍️திண்டுக்கல்* பழனியில் தமிழ்ப் புலிகள் கட்சியின் சார்பாக, பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
*🔹🔸✍️திண்டுக்கல்* பழனி அருகே சாமிநாதபுரம் டாஸ்மாக் கடையில்  குவிந்த மதுப்பிரியர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த டிஎஸ்பி சிவா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
 
*🔹🔸✍️ஈரோடு:* கொரோனா தடுப்பூசிகள் இருப்பு இல்லாததால் ஈரோட்டில் தடுப்பூசிகள்  போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
 
*தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மட்டும் மது விற்பனை தொடங்கிய நிலையில் நேற்று ஒரே நாளில் 165 கோடிக்கு மது விற்பனை.*
 
முதலிடத்தில் மதுரை மண்டலம் 50 கோடிக்கு மது விற்பனை செய்துள்ளது.
 
அ. தி. மு. க. நட்சத்திர பேச்சாளர், நமது அம்மா உதவி ஆசிரியர் போளூர் ஜெய கோவிந்தன் எம்.ஜி.எம். மருத்துவமனையில் கொரோனா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..
 
 
 
*  கொரோனா தொற்றின் முன்றாம் அலைக்கு எந்த நேரமும் குழந்தைகள் மருத்துவர்கள் தயாராக இருக்க வேண்டும்.*
 
 
*ஒவ்வொரு குழந்தைகள் மருத்துவமனைகளிலும் 100 படுக்கைகள் தயார் நிலையிலும், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளும், ஐசியு படுக்கை வசதிகளும் ஏற்படுத்திட வேண்டும்*
 
 
*மருத்துவ கல்வி இயக்குனர்.*
 
 
*✅✅தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; இதர மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்  -வானிலை மையம்*
 
 
 
*🔴🔴தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி,
கோவை, மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு*
==
*மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில்
லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்*
==
*திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாக்குமரி, நெல்லை மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்*
==
*ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் - வானிலை மையம்*
==
*சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்*
==
*நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் சென்னை வானிலை ஆய்வு மையம்*
==
*அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்*
 
கொரோனா 3வது அலை - புதிய உத்தரவு.
 
ஒவ்வொரு குழந்தைகள் மருத்துவமனைகளிலும் 100 படுக்கைகள் தயாராக இருக்க வேண்டும்.
 
கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
 
குழந்தைகள் மருத்துவர், செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியில் அமர்த்தப்பட வேண்டும்.
 
குழந்தைகள் பிரிவில் 4ல் 1பகுதி செவிலியர்களை அவசர கால பணிக்காக தயார் படுத்திடவேண்டும்- தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநர்.
 
கொரோனா 3-வது அலையில் 18 வயதுக்குட்பட்டவர்கள் பாதிக்கப்படுவார்கள் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
 
*       100 கோடி லோன் வாங்கி தருவதாக கூறி கேரள தொழிலதிபர்களை ஏமாற்றியதாக ஹரிநாடார் மீது புகார்*
 
 
*       இஸ்மாயில் &  பஷீர் ஆகியோரிடம் 1.5கோடி பெற்று மோசடி செய்ததாக காவல் துறைக்கு ஆன்லைன் மூலம் புகார்*
 
 
 *           கொரொனா அல்லாத பிற நோய்களால் பாதிக்கப்பட்டு காத்திருப்போருக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தர முதல்வர் ஸ்டாலின் உத்தரவிடவேண்டும்*
 
 
*ஓபிஎஸ்*
 
 
6 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கான சோதனை இன்று முதல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடங்கியது.
 
 
கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் திரு மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 
இந்த நோயின் பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய குழு ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
 
 
முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் தமது முதல் அரசுமுறை பயணமாக பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்திக்க வருகின்ற வியாழக்கிழமை டெல்லி செல்கிறார்.
 
 
* ️ இந்தியாவும் - கென்யாவும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த முடிவு செய்துள்ளன!*
 
*மூன்று நாள் பயணமாக கென்யா சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் திரு ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபர் திரு உகுரு கென்யாட்டா மற்றும் அந்நாட்டு மூத்த அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.*
 
 
*   கொரானா 2ம் அலை தாக்கத்தை கட்டுப்படுத்த புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு 100 % சிறப்பாக பணியாற்றி  வருகிறது.*
 
*  - இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள் பாராட்டு...*
 
 
* ️ சென்னை இராயபுரம் குடியிருப்பு பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பொது கழிப்பிடத்தை அமைச்சர் திரு கே வி சேகர் பாபு இன்று ஆய்வு செய்தார்.*
 
புதுச்சேரி மாநில சபாநாயகர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மதியம் 12 மணியுடன் முடிவடைந்த நிலையில், பாஜக எம்எல்ஏ செல்வத்தை தவிர வேறு யாரும் சபாநாயகர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யாததால், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சட்டப்பேரவையில் நாளை பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. 
 
 
*  நோய் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் 21ம் தேதி வரை உணவுப்பொட்டலங்கள் வழங்க அமைச்சர் சேகர் பாபு உத்தரவு*
 
 
 
*✅✅பிரதமர் நரேந்திர மோடியை வரும் 17ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திக்க உள்ள நிலையில் திமுகவின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் டெல்லி விரைகின்றனர்.*
 
 
 
 *  கொரோனாவால் பெற்றோரை இழந்து ஆதரவற்ற குழந்தைகளுக்கான நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.*
 
 
 
 *  தமிழக முதல்வர் மேட்டூர் பயணத்தின்போது கொரோனா நிவாரண நிதிக்கு தன்னுடைய 2 பவுன் செயின் வழங்கி, உருக்கமான கடிதம் ஒன்றை எழுதிய இளம்பெண் சௌமியாவிற்கு வேலைக்கான ஆணையை வழங்கினார் அமைச்சர் செந்தில்பாலாஜி!*
 
 
 
🔴🔴சுஷில் ஹரி பள்ளி ஆசிரியைகள் 2 பேர் மீது போக்சோ*
==
*சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளி ஆசிரியைகள் இரண்டு பேர் மீது போக்சோ வழக்கு*
==
*ஆசிரியைகள் பாரதி மற்றும் தீபா மீது போக்சோ உள்ளிட்ட 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு*
==
*பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிவசங்கர் பாபா மீது ஏற்கனவே வழக்குப்பதிவு*
 
 
*       நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றி வளமிகுந்த தமிழ் நாட்டை உருவாக்குவோம்*
 
 
*       நகர்புற வளர்ச்சி & ஊரக வளர்ச்சியும்தான் நாட்டின் வளர்ச்சிக்கான அடையாளங்கள்*
 
 
*       மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் நீதிமன்ற உத்தரவை நடைமுறைபடுத்த வேண்டும்*
 
 
*ஆட்சியர்கள் உடனான காணொளியில் முதல்வர் முக.ஸ்டாலின்*
 
 
*       ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் தரமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்*
 
 
*       அனைவருக்கும் ரேஷன் அட்டை கிடைக்கவும் ,  போலி ரேஷன் அட்டைகளை ஒழிக்கவும் நடவடிக்கை தேவை*
 
 
*       பொது விநியோகத் திட்டத்தை முறையாக செயல்படுத்தவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்*
 
 
 
*      கொரொனா ஊரடங்கின்போது போது வரம்பு மீறிய வழக்கறிஞர்கள் மீதான நடவடிக்கை என்ன  ?*
 
 
*தமிழ்நாடு & புதுச்சேரி பார் கவுன்சில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு*
 
 
 
 *       சுஷில்ஹரி பள்ளி ஆசிரியர்கள் பாரதி & தீபா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு*
 
 
*       மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த சிவசங்கர் பாபாவுக்கு உதவியதாக ஆசிரியர்கள் மீது வழக்கு*
 
 
*       மாணவிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு*
 
  
*       சமயபுரம் அருகே மாடக்குடி கிராமத்தில் முன்விரோதம் காரணமாக பாலகிருஷ்ணன் என்பவரை குத்திக் கொலை செய்த தியாகு என்பவர் தப்பியோட்டம்    -     போலீசார் விசாரணை*
 
 
 
*      ராமநாதபுரம்  :   ராமேஸ்வரம் அருகே உச்சிப்புளியில் இலங்கைக்கு கடத்த முயன்ற ஒரு டன் மஞ்சள் பறிமுதல்*
 
 
*      இலங்கைக்கு மஞ்சள் கடத்த முயன்ற சரக்கு வாகன ஓட்டுநர் உட்பட 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை*
 
 
 
*       தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கும் வகையில் பிறப்பித்த அரசாணைக்கு தடை கோரி வழக்கு*
 
 
*மத்திய ,  மாநில அரசுகள் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் ஆணை*
 
 
*       தமிழகத்தில் இனி கோரானோ தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இருக்காது*
 
 
*  இறப்புகளை மறைக்கவில்லை  , ஐசிஎம்ஆர் வழிகாட்டுதலின்படி இறப்பு சான்றிதழ் கொடுக்கப்படுகிறது*
 
 
*       வசந்தகுமார் & எஸ்பிபி ஆகியோர் இறந்தபோது அவர்களுக்கு கொரொனா இல்லை*
 
 
*தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன்*
 
 
 
*✅✅பொது விநியோக திட்டத்தில் உணவுப் பொருட்கள் சுத்தமானதாகவும் - தரமானதாகவும் இருப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் -*
 
 *முதலமைச்சர்*
*mkstalin*
 
 *   கல்வி, வேலைவாய்ப்பு, சமூக பொறுப்புகளில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க மாவட்ட ஆட்சி தலைவர்கள் தங்களது அதிகாரத்தை, பதவியை பயன்படுத்தி தங்களது கடமையை ஆற்ற வேண்டும்.*
 
*புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் பேச்சு..!*
 
*   ஒரு சிலர் சுயநலத்திற்காகத் தொண்டர்களைப் பலிகடா ஆக்குவதா?”*
 
*- சசிகலா கேள்வி*
 
*   வெற்றி பெறுவேன் என்றார்கள், வெற்றி பெறட்டும் என ஒதுங்கியிருந்தேன்..!*
 
*இது தான் நான் அரசியலிலிருந்து ஒதுங்கியதற்கு காரணம்..!*
 
*- சசிகலா விளக்கம்*
 
*   போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞரின் முன்ஜாமின் மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வரம்பு மீறிய வழக்கறிஞர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பார் கவுன்சில் அறிக்கை அளிக்க உத்தரவு..!*
 
 தமிழக சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருந்த ஏ கே எஸ் விஜயன் இன்று இரவு டெல்லி வருகிறார்.*
 
*நாளை முறைப்படி அவர் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக பொறுப்பேற்றுக் கொள்கிறார்.*
: *   2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டால், டெல்டாவில் இருந்தும் பாதுகாப்பு..!*
 
*- இங்கிலாந்து பொது சுகாதாரத்துறை விஞ்ஞானிகள் தகவல்*
 
: *   டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் மழைக்காலத்திற்கான தயாரிப்பு குறித்து ஆலோசனை கூட்டம்..!*
 
*   வளமான தமிழ்நாடு, மகிழும் விவசாயி, அனைவருக்கும் அனைத்துமான தமிழகம், என 7 இலக்குகளை பத்தாண்டு காலத்தில் எட்டிட மாவட்ட ஆட்சித்தலைவர்களின் ஒத்துழைப்பு அரசுக்கு அவசியம்*
 
*- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்*
 
: *   சிவசங்கர் பாபா வழக்கில், அதே பள்ளியில் பணிபுரிந்த மேலும் 2 பெண் ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்..!*
 
*சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது மாணவிகளிடம் அத்துமீறியதாக வழக்கு*
 
*இந்த வழக்கில் பாரதி, தீபா என 2 பெண் ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்*
 
: *   மத்திய அரசுக்கு கோவாக்சின் தடுப்பூசி ஒரு டோஸ் ரூ.150 என விலை நிர்ணயம்..!*
 
*- பாரத் பயோடெக்*
 
 
மத்திய அரசுக்கு ரூ.150 விலையில் கோவாக்சின் தடுப்பூசியை தொடர்ந்து வழங்க முடியாது..!*
 
*- பாரத் பயோடெக்  நிறுவனம்*
 
*மத்திய அரசுக்கு போட்டியில்லாதா  விலையான ரூ.150-க்கு கோவாக்சின் வழங்கப்படுவதாக பாரத் பயோடெக் விளக்கம் கொடுத்துள்ளது.*
 
*இதர செலவுகளை ஈடுகட்ட தனியார் சந்தையில் கூடுதல் விலையில் கோவாக்சின் விற்பனை செய்யப்படுகிறது.*
 
*- பாரத் பயோடெக் நிறுவனம்*
 
*   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று திரும்பியதும் கரும்பூஞ்சை நோய்த்தடுப்பு நடவடிக்கை குறித்த திட்ட அறிக்கை அளிக்கப்படும்..!*
 
*- சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி*

மருத்துவமனையில் ஜூன் 18ஆம் தேதி முதல் வெளி நோயாளிகளின் சேவை தொடங்கும்..!*
 
*- அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்*
 
குத்திவிட்டனர் ; இப்போது என் முதுகில் யாரேனும் குத்த வேண்டுமென்றால் அதற்கு இடம் கூட இல்லை..!*
 
*- சசிகலா*
 
*   தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் இதுவரை 1736 பேர் பாதிப்பு ; 77 பேர் உயிரிழப்பு..!*
 
*- அமைச்சர் மா.சுப்பிரமணியன்*
 
*🔴🔴சிவசங்கர் பாபாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்*
==
*சென்னை கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்*
 
==
*வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் சிபிசிஐடி லுக் அவுட் நோட்டீஸ்*
 
லக்னோ: ராமர் கோயில் நில முறைகேடு விவகாரத்தில் அறிக்கை அளிக்க ராமஜென்மபூமி அறக்கட்டளைக்கு உ.பி. முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நிலம் வாங்கியதில் பலகோடி முறைகேடு என சமாஜ்வாதி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ரூ.2 கோடிக்கு வாங்கிய நிலத்தை சில நிமிடங்களிலேயே ரூ.18.5 கோடிக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்துள்ளனர்* ️ ️
 
  ️ஈரோடு: கொரோனா தடுப்பூசிகள் இருப்பு இல்லாததால் ஈரோட்டில் தடுப்பூசிகள்  போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன் ஈரோட்டிற்கு 13,400 தடுப்பூசிகள் பெறப்பட்ட நிலையில் இருப்பு இல்லாததால் மக்கள் தடுப்பூசி கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.* ️ ️
 
  ️கரூர்: தமிழகத்தில் இனி  மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். நோய் தோற்று படிப்படியாக குறைந்து வருவதால் இனி மின் கட்டணம் செலுத்த அவகாசம்  நீட்டிப்பு இல்லை என கரூரில்  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மின்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்* ️ ️
 
 *   மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 52,864 புள்ளிகளை தொட்டு புதிய சாதனை படைத்துள்ளது. தொடக்க நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 313 புள்ளிகள் அதிகரித்து 52,864 புள்ளிகளை எட்டியுள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு என நிஃப்டி 86 புள்ளிகள் அதிகரித்து 15,898 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது.* ️ ️
: *   வூகான்: சீனாவின் சோதனை சாலையில் இருந்து கொரோனா வைரஸ் வெளியேறவில்லை என்று பெண் விஞ்ஞானி கூறியுள்ளார். வூகான் ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் கசிந்ததாகக் கூறும் புகார்களுக்கு ஆதாரம் இல்லை என  பெண் விஞ்ஞானி ஷி ஜெங்லி தெரிவித்துள்ளார்.* ️ ️
 
: *   டெல்லி: இத்தாலி கடற்படை வீரர்கள் 2 பேர் மீதான இந்திய நீதிமன்றங்களில் நடக்கும் விசாரணைகள் முடித்து வைக்கப்பட்டது. மஸிமிலியானோ லாதோர், சல்வதோர் ஜிரோன் ஆகியோர் மீதான விசாரணையை முடித்துவைத்து இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2012-ல் கேரளா கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 2 பேரை இத்தாலி வீரர்கள் சுட்டுக்கொன்றனர். கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக இத்தாலி அரசு ரூ.10 கோடி வழங்கியுள்ளது.* ️ ️
 
: *   டெல்லி: ஒன்றிய அரசுக்கு ரூ.150 விலையில் கோவாக்சின் தடுப்பூசியை தொடர்ந்து வழங்க முடியாது என பாரத் பயோடெக்  நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசுக்கு போட்டியில்லாதா  விலையான ரூ.150-க்கு கோவாக்சின் வழங்கப்படுவதாக பாரத் பயோடெக் விளக்கம் கொடுத்துள்ளது. இதர  செலவுகளை ஈடுகட்ட தனியார் சந்தையில் கூடுதல் விலையில் கோவாக்சின் விற்பனை செய்யப்படுகிறது என பாரத் பயோடெக் நிறுவனம் கூறியுள்ளது.* ️ ️
 
*   சென்னை: மாணவிகளுக்கு பாலியல்  தொல்லை கொடுக்க சிவசங்கர் பாபாவுக்கு உதவிய பள்ளி ஆசிரியைகள் 2 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியைகள் பாரதி, தீபா ஆகிய இருவர் மீதும் 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது* ️ ️.
 
: *   சென்னை: கொரோனா பரவலை தடுக்க ஆட்சியர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து புதிய மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். கல்வி, வேலை வாய்ப்பு, சமூகப் பொறுப்புகளில்  அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க செய்ய வேண்டும் என புதிதாக பொறுப்பேற்கவுள்ள மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் முதல்வர்  முக.ஸ்டாலின் கூறியுள்ளார்.* ️ ️
 
*   மதுரை: மதுரை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் மோப்ப நாய்களுடன் போலீசார் சோதனை நடத்தினர். சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமையகத்திற்கு குறுந்தகவல் மூலம் குண்டு வெடிப்பு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலால் மதுரை ரயில் நிலையத்தில் போலீசார் மெட்டல் டிடெக்டர், மோப்பநாயுடன் அதிரடியாக ஸோதனை நடத்தினர்.* ️ ️
 
*   சென்னை: அதிமுக ஒரு சாதி ரீதியாக  செயல்படுவதாக தொண்டர்கள் புகார் கூறுகின்றனர் என சசிகலா குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக ஒரு பொதுவான கட்சி சாதி ரீதியாக செயல்பட கூடாது என்றும் சசிகலா குறிப்பிட்டுளளார். ஓ.பன்னீர்செல்வம் அவ்வாறு செய்யாதிருந்திருந்தால் அவரை தான் உட்கார வைத்திருப்பேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.* ️ ️
 
 
: *   சென்னை: கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை இணையத்தில் பதிவேற்ற கோரிய  வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசு பதில் தர உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மனுதார் கோரிக்கை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ஓப்புதலுக்காக காத்திருப்பதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 வாரத்திற்குள் மனுதாரர் கோரிக்கை குறித்த திட்ட செயல்முறை தொடங்கப்படும் என்று அரசு உறுதியளித்துள்ளது.* ️ ️
 
: *   மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 222 புள்ளிகள் உயர்ந்து 52,773 புள்ளிகளானது. தொடக்க நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 52,869 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தைத் தொட்டு கீழே இறங்கியது* ️ ️
 
 
*⭕இந்தியாவில் 2030-ஆம் ஆண்டுக்குள் இரண்டு கோடியே 60 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் திரு நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.*
 
*⭕கொரொனா அல்லாத பிற நோய்களால் பாதிக்கப்பட்டு காத்திருப்போருக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தர முதல்வர் ஸ்டாலின் உத்தரவிடவேண்டும்*
 
*ஓபிஎஸ்*
 
 
*⭕100 கோடி லோன் வாங்கி தருவதாக கூறி கேரள தொழிலதிபர்களை ஏமாற்றியதாக ஹரிநாடார் மீது புகார்*
 
*இஸ்மாயில் &  பஷீர் ஆகியோரிடம் 1.5கோடி பெற்று மோசடி செய்ததாக காவல் துறைக்கு ஆன்லைன் மூலம் புகார்*
 
*⭕கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோழிகமுத்தி யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த 28 யானைகளுக்கு மேற்கொள்ளபட்ட கொரோனோ பரிசோதனையில் 28 யானைகளுக்கும் கொரோனோ தொற்று இல்லை என்பது உறுதி செய்யபட்டுள்ளது.*
 
*⭕புதிய மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்!.*
 
 
*⭕கல்வி, வேலைவாய்ப்பு, சமூக பொறுப்புகளில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க மாவட்ட ஆட்சி தலைவர்கள் தங்களது அதிகாரத்தை, பதவியை பயன்படுத்தி தங்களது கடமையை ஆற்ற வேண்டும்- புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தல்*
 
 
*⭕பேராசிரியர் மனைவியின் சடலம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அழுகிய நிலையில் கிடந்த வழக்கு கொலை வழக்காக மாற்றம்! மருத்துவமனை ஒப்பந்த பெண் ஊழியர் பணம், செல்போனுக்காக கொலை செய்தது விசாரணையில் அம்பலம்!*
 
*⭕தமிழகம் முழுவதும் கொரானாவல் உயிரிழந்த 230 வழக்கறிஞர்கள் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள 64 ஆயிரம் வழக்கறிஞர்களுக்கும் நிவாரண உதவி வழங்க கோரி வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு*
 
 
*⭕அமைச்சர் செந்தில்பாலாஜியை அவதூறாக பேசிய வழக்கில் சாட்டை துரைமுருகனுக்கு மீண்டும் சிறை, மற்றவர்கள் ஜாமீனில் விடுவிப்பு.*
 
 ️⚡⭕⭕
 
 
 
*⭕திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் சிறைவைக்கப்பட்ட ஐசரி கணேஷ்*
 
*முருகன் கோயிலை சட்டத்திற்கு புறம்பாக கடந்த 8 நாட்களாக EO நாராயணன் மூலம் திறந்து குடும்பத்தோடு பூஜை நடத்தியதாக புகார்*
 
*இன்று கோயிலுக்குள் சென்றவரை கிராம மக்கள் பூட்டி சிறை வைத்துள்ளனர்.*
 
 வருமானவரி தாக்கல் செய்வதற்கு (www.incometaxindiaefiling.gov.in <http://www.incometaxindiaefiling.gov.in/>) என்ற ஒரு இணையதளம் பயன்பாட்டில் இருந்த நிலையில், புதிதாக (www.incometaxgov.in <http://www.incometaxgov.in/>) என்ற இணையத்தளத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வருமான வரித்துறை திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், வருமான வரித்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வருமானவரி சட்டம் 1961-ன் படி 15CA/15CB படிவங்களை மின்னணு முறையில் தாக்கல் செய்ய வேண்டும். தற்போது, வரிசெலுத்துவோர் 15CA படிவத்தை, 15CB படிவத்தில் பட்டய கணக்காளர் சான்றிதழுடன் மின்னணு-தாக்கல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்கின்றனர்.
 
 
 
அதன் பின்னர், வெளிநாட்டு வருமானம் இருந்தால் அதன் நகல் டீலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். புதிய மின்தாக்கல் இணையளத்தில் www.incometax.gov.in <http://www.incometax.gov.in/>, 15CA/15CB படிவங்களை தாக்கல் செய்வதில் வரிசெலுத்துவோர் சில சிரமங்களை சந்தித்ததால், இந்த படிவங்களை அங்கீகரிக்கப்பட்ட டீலரிடம் 2021 ஜூன் 30-ம் தேதிக்கு முன்பாக கைப்பட சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
 
: திண்டுக்கல் மாவட்டம் அரசு மதுப்பான கடைகளில் ஆதார்  ☂️ குடையுடன் வந்தால் மதுப்பாட்டில் காவல்துறை
 
குடிமகன்கள் கிராம பகுதிகளில் குடை இல்லாமல் சென்ற காரணத்தால் மதுபாட்டில்கள் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
 
: திண்டுக்கல் கிராமப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் குடிமகன்கள் பொறுப்பாக குடையுடன் சென்று மதுப் பாட்டில்கள் வாங்கி சென்றனர்.
 
: சென்னை, தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா சந்திப்பு
 
*துணிக்கடைகள், நகைக் கடைகள் மற்றும் நடைபாதை வியாபாரங்களுக்கு அனுமதி அளிக்ககோரிக்கை
 
பஞ்சாப் முதல்வர் உருவ பொம்மையுடன் விவசாயிகள் போராட்டம்
 
பயணிகள் வருகை குறைவால் 25 சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து
 
: தேசிய விருது பெற்ற கன்னட நடிகர் சஞ்சாரி விஜய் சாலை விபத்தில் பலி
 
: கொரோனா 3வது அலையை   எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
 
🔴குழந்தைகள் மருத்துவர், செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியில் அமர்த்தப்பட வேண்டும்;
 
🔴குழந்தைகள் பிரிவில் 4ல் 1பகுதி செவிலியர்களை அவசர கால பணிக்காக தயார் படுத்திடவேண்டும்!
 
- தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநர்
 
: ஸ்ரீவில்லிபுத்தூரில் கிணற்றில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு!
 
: *இந்தியன் ஓவர்சீஸ் வங்கியைத் தனியாருக்கு விற்கக் கூடாது*
 
*வைகோ அறிக்கை*
 
 
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, 10.02.1937 இல், சென்னையைத் தலைமை இடமாகக் கொண்டு, மு.சி.த.மு. சிதம்பரம் செட்டியார் அவர்களால் தொடங்கப்பட்டது. 1969 ஆம் ஆண்டு, நாட்டுடைமை ஆக்கப்பட்டது. தற்போது, தமிழ்நாட்டின் முன்னோடி வங்கியாகத் திகழ்கின்றது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்கள், குக்கிராமங்களில் 1500 கிளைகள் உள்ளன. 15 மண்டல அலுவலகங்களும்  உள்ளன.
 
பிற வங்கிகளை ஒப்பிடுகையில், ஐஓபி வங்கியில், பிற கிளைகளுக்குப் பணம் செலுத்துதல், புத்தகம் வரவு வைத்தல் போன்ற சேவைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன. எனவே, தமிழ்நாட்டில் ஐஓபி வங்கியில் கணக்கு வைத்துள்ள ஒருவர், இந்தியாவின் எந்த வங்கிக் கிளையிலும், சேவைக் கட்டணம் இல்லாமல், பணம் எடுக்க இயலும். பிற வங்கிகளில், இதற்குத் தனிக் கட்டணம் வாங்குகின்றார்கள்.
 
கிராமப்புற மக்களுக்கு, குறைந்த வட்டியில் விவசாய நகைக்கடன், பயிர்க்கடன், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு ஊதியம் முதலியவற்றை, ஐஓபி வழங்கி வருகின்றது. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களின் கணக்குகள் ஐஓபி வங்கியில் உள்ளன. மாவட்ட நீதிமன்றங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மருத்துவக் கல்லூரிகளிலும் கிளைகள் உள்ளன. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில், கடந்த 50 ஆண்டுகளாக ஐ.ஓ.பி. வங்கிக் கிளை செயல்பட்டு வருகின்றது.
 
கடந்த 2005 ஆம் ஆண்டு, ஐ.ஓ.பி. வங்கியை, வடமாநில வங்கியுடன் இணைக்கத் திட்டமிட்டபோது, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் கடும் எதிர்ப்புக் குரல் எழுப்பினார்கள். எனவே, அந்த முயற்சி அப்போது கைவிடப்பட்டது.
 
ஆனால், இரண்டு பொதுத்துறை வங்கிகளை, தனியாருக்கு விற்கப் போகின்றோம் என, நிதி அமைச்சர் நிர்மலா, பிப்ரவரி 1 அன்று, நாடாளுமன்றத்தில் வரவு செலவுக் கணக்கு தாக்கல் செய்து ஆற்றிய உரையில் குறிப்பிட்டார். அவை எந்த வங்கிகள் என்பது குறித்து ஆய்வு நடைபெற்றதாகவும், நான்கு வங்கிகளின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டதாகவும் ஏடுகளில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அவற்றுள் ஒன்றாக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பெயரும் இருப்பது, தமிழ்நாட்டு மக்களுக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
 
இதுவரை, ஒரு பொதுத்துறை நிறுவனத்தைக்கூட புதிதாகத் தோற்றுவிக்காத பாரதிய ஜனதா கட்சி அரசு, ஏற்கனவே இருக்கின்ற பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்கு விற்க முயற்சிப்பது, பெருங்கேடு ஆகும். தனியார் புதிய வங்கிகளைத் தொடங்குவற்கு எந்தத் தடையும் இல்லை.  அப்படி எத்தனையோ புதிய தனியார் வங்கிகள் தோன்றி இருக்கின்றன. அவர்களுடைய வங்கிகளில் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் கட்டணம் வாங்குகின்றார்கள்.   எந்தவிதமான, வட்டித் தள்ளுபடியும் தருவது இல்லை. மக்களைக் கசக்கிப் பிழிகின்றார்கள்
 
ஏற்கனவே, ‘பேங்க் ஆப் தமிழ்நாடு என்ற பெயரில் இயங்கி வந்த வங்கியை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன் இணைத்தார்கள். இப்போது, ஐஓபியைத் தனியாருக்கு விற்க முயற்சிக்கின்றார்கள்.
 
தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கின்ற, 85 ஆண்டுகளாக இயங்கி வருகின்ற பெருமை மிக்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கி என்ற பொதுத்துறை நிறுவனத்தை, தனியாரிடம் கொடுப்பதைத் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கின்றேன்.
 
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
தாயகம்
சென்னை - 8
15.06.2021
 
: புதுச்சேரியில் உணவகங்களில் 50 சதவீதம் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி
 
: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வங்கி கணக்கில் வைப்பு நிதியாக 5 லட்சம் செலுத்தும் திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
 
ஒசூர் அருகே துணைமின்நிலையத்தில் பழுதை சீர்செய்த  மின்பாதை ஆய்வாளர் மின்சாரம் தாக்கி அந்தரந்தில் தொங்கியவாறே உயிரிழப்பு
 

0 Response to "15.06.2021 பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel