நீட் தேர்வு முறைகேடு வழக்கு - ஜாமீன் கோரி இடைத்தரகர் ரஷீத் மனு

Trending

Breaking News
Loading...
நீட் தேர்வு முறைகேடு வழக்கு - ஜாமீன் கோரி இடைத்தரகர் ரஷீத் மனு

 


நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக கைதான இடைத்தரகர்

ரஷீத்- இன் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.நீட் தேர்வுகளில் முறைகேடு செய்வதற்கு உடந்தையாக இருந்ததாக, கேரளாவை சேர்ந்த இடைத்தரகர் ரஷீத் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கோரி

அவர் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், தனக்கு ஜாமீன் வழங்கினால் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகர் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மேலும் சில வழக்குகளையும் இத்துடன் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

0 Response to "நீட் தேர்வு முறைகேடு வழக்கு - ஜாமீன் கோரி இடைத்தரகர் ரஷீத் மனு "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel