பல்வேறு மாவட்டங்களில் நடந்த செய்திகள்

Trending

Breaking News
Loading...
பல்வேறு மாவட்டங்களில் நடந்த செய்திகள்

 

 

*
புதுக்கோட்டை:* ஆலங்காடு டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி காரில் கடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக விற்பனை செய்ய மதுபானங்களை கடத்திய காரையும் பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
__________________
 
 
 
*கோவை* வ.உ.சி பூங்காவில் 25 வயதுடைய முதலை 14 குட்டிகளை பொறித்துள்ளது.
__________________
 
 
 
*சேலம் மாவட்டத்தில்* 108 ஆம்புலன்சில் பயணித்த ஏற்காடு மலை கிராம பெண்ணுக்கு  பிரசவவலி அதிகமானதால் 108 மருத்துவ உதவியாளர் சிலம்பரசன் மற்றும் பைலட் பழனிச்சாமி ஆகியோர்  வனப்பகுதியில் ஆம்புலன்சில் வைத்தே  பெண்ணுக்கு பிரசவம் .  அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் செயல் பாராட்டை பெற்றுள்ளது.
__________________
 
 
*தூத்துக்குடி மாவட்டம்*
 உரிய அனுமதியின்றி குளத்தில் மண் திருடிய 3 பேர் கைது - ஜேசிபி இயந்திரம், டிப்பர் லாரி மற்றும் 2 யூனிட் மணல் பறிமுதல்
__________________
 
  
*தூத்துக்குடி மாவட்ட* காவல்துறையில் உள்ள நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ஆய்வு செய்து, அதில் பணியாற்றும் காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கினார்
__________________
 
  
*தூத்துக்குடி மாவட்டம்*
கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்
4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்தவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
__________________
 
 
*திருவாரூர்* மன்னார்குடி அருகில் உள்ள வடுவூரில் 316 ஏக்கர் பரப்பளவு கொண்ட வடுவூர் ஏரி காவிரி நீரால் நிரப்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
__________________
 
 
 
*கரூர் மாவட்டம்* கதவணையில் இருந்து பாசனத்திற்காக கட்டளை மேட்டு வாய்க்காலில் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் பாசன பகுதிகளை நோக்கி செல்கிறது. விவசாயிகள் மகிழ்ச்சி
__________________
 
 
 
*கரூர்* அரவக்குறிச்சியில் எங்கு நோக்கிலும் சீமை கருவேல முட்கள் காடு போல வளர்ந்துள்ளது. நங்காஞ்சி ஆற்றில் . நீராதாரத்தை அழிக்கும் கருவேல மரங்களை உடனடியாக அகற்ற சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
__________________
 
 
 
*கரூர் மாவட்டம்* தோகைமலை ஒன்றிய பகுதிகளில் பூசணிக்காய் சாகுபடி செய்த விவசாயிகள் கொரோனா ஊரடங்கால் விற்பனை இல்லாமல் பல லட்சம் மதிப்பிலான பூசணிக்காய் சேதம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் கவலை
__________________
 
 
*புதுச்சேரி* பாஜக அலுவலகத்தை எம்.எல்.ஏ. ஜான்குமார் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். பாஜக அலுவலக பேனரை கிழித்து எம்.எல்.ஏ. ஜான்குமார் ஆதரவாளர்கள் தங்களது ஆவேசத்தை தெரிவித்துள்ளனர். எம்.எல்.ஏ. ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க பாஜக மறுப்பு தெரிவித்ததால் ஆதரவாளர்கள் ஆவேசம் அடைந்துள்ளனர்
__________________
 
 
*சென்னையில்* அரும்பாக்கம் பகுதியில் பலத்த மழை பெய்தது
__________________
 
 
*திண்டுக்கல்* அருகே திருமணம் செய்வதாக கூறி 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் பாபு(32) என்பவரை திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பாபுவை கைது செய்தனர்.
__________________
 
 
*ஈரோடு*
கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் முத்துச்சாமி ஐபிஎஸ் வழிகாட்டுதலின்படி
ஈரோடு மாவட்டத்தில் லாட்டரி, கஞ்சா ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
__________________
 
*திண்டுக்கல்*
பழனி அரசு மருத்துவமனையில் முதல் முறையாக சத்தியா  நகர் பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் கருப்பு பூஞ்சை நோயால் அனுமதிக்கபட்டுள்ளார்.
__________________

0 Response to "பல்வேறு மாவட்டங்களில் நடந்த செய்திகள்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel