08.06.2021 செவ்வாய்க்கிழமை - முக்கியச் செய்திகள்

Trending

Breaking News
Loading...
08.06.2021 செவ்வாய்க்கிழமை -  முக்கியச் செய்திகள்

 

08.06.2021 ஜூன் , செவ்வாய்க்கிழமை

 

*_வரலாற்றில் இன்று_*

 

*நிகழ்வுகள்*

 

913 - பைசாந்தியப் பேரரசர் மூன்றாம் அலெக்சாந்தர் போலோ விளையாடும் போது இறந்தார்.

1523 - குசுத்தாவ் வாசா சுவீடனின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். டென்மார்க்கு, சுவீடன், நோர்வே இணைந்த கல்மார் ஒன்றியம் முடிவுக்கு வந்தது. இது சுவீடனின் தேசிய நாளாகக் கொண்டாடப்படுகிறது.

1644 - சிங் மஞ்சு படைகள் பெய்ஜிங் நகரைக் கைப்பற்றின. மிங் வம்சம் வீழ்ச்சியடைந்தது.

1674 - சிவாஜி மராட்டியப் பேரரசராக முடிசூடினார்.

1711 - யாழ்ப்பாணத்தில் இந்து மதச் சடங்குகளுக்கு ஒல்லாந்து அரசினால் தடை விதிக்கப்பட்டது.

1762 - ஏழாண்டுப் போர்: பிரித்தானியப் படைகள் கியூபாவின் அவானா நகரை முற்றுகையிட்டுக் கைப்பற்றின.

1761 - சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வீனஸ் கோளின் நகர்வு பூமியின் பல இடங்களிலும் அவதானிக்கப்பட்டது.

1808 - பிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியனின் சகோதரன் யோசப் பொனபார்ட் எசுப்பானியாவின் மன்னராக முடிசூடினார்.

1809 - சுவீடன் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது. 20 ஆண்டுகள் முழுமையான முடியாட்சியின் பின்னர் அரசியல் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டது. பதின்மூன்றாம் சார்லசு புதிய மன்னராகப் பதவியேற்றார்.

1832 - பாரிசில் மாணவர் எழுச்சி முறியடிக்கப்பட்டது.

1844 - கிறித்தவ இளையோர் அமைப்பு (YMCA) லண்டனில் அமைக்கப்பட்டது.

1859 - ஆத்திரேலியா: குயின்ஸ்லாந்து என்ற பெயரில் புதிய குடியேற்ற நாடு நியூ சவுத் வேல்ஸ் இலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது.

1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க ஒன்றியப் படைகள் டென்னிசி, மெம்பிசு நகரை கூட்டமைப்பினரிடம் இருந்து கைப்பற்றின.

1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் டென்னசியில் மெம்ஃபிசு நகரை கூட்டமைப்புப் படைகளிடம் இருந்து கைப்பற்றின.

1882 - அரபிக் கடலில் இடம்பெற்ற புயலால் பம்பாயில் 100,000 பேர்களுக்கு மேல் கொல்லப்பட்டனர்.ஆனாலும் இந்தச் செய்தி பொய்யானது என பின்னர் நிரூபிக்கப்பட்டது.

1889 - அமெரிக்கா, சியாட்டில் நகரில் ஏற்பட்ட தீயில் நகர மையம் முழுவதும் அழிந்தது.

1912 - அலாஸ்காவில் நொவரப்டா எரிமலை வெடித்தது.

1930 - இலங்கையில் வீரகேசரி நாளிதழ் தொடங்கப்பட்டது.

1932 - அமெரிக்காவில் எரிவாயுவிற்கு முதன் முதலாக கலனிற்கு ஒரு சதம் என்ற அளவில் வரி அறவிடப்பட்டது.

1942 - இரண்டாம் உலகப் போர்: மிட்வே சமரில் அமெரிக்கக் கடற்படை மிக்குமா என்ற சப்பானியப் போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.

1944 - இரண்டாம் உலகப் போர்: ஓவர்லார்ட் நடவடிக்கை எனப் பெயரிடப்பட்ட நோமண்டி சண்டை ஆரம்பமானது. 155,000 கூட்டுப் படையினர் பிரான்சின் நோர்மண்டிக் கடற்கரைகளில் தரையிறங்கி, அத்திலாந்திக் சுவரைத் தகர்த்து முன்னேறினர்.

1958 - தமிழருக்கு எதிரான இனவன்முறை, 1958: இலங்கையில் மேலும் 5,029 தமிழ் அகதிகள் கொழும்பில் இருந்து கப்பல் மூலம் யாழ்ப்பாணம் அனுப்பப்பட்டனர்.

1968 - அமெரிக்க அரசியல்வாதி இராபர்ட் எஃப் கென்னடி லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உணவு விடுதி ஒன்றில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1971 - சோவியத் ஒன்றியத்தின் சோயூசு 11 விண்கலம் ஏவப்பட்டது.

1971 - கலிபோர்னியாவில் அமெரிக்க வான்படையின் எப்-4 பன்டெம் II போர் வானூர்தி பயணிகள் வானூர்தியுடன் வானில் மோதியதில் 50 பேர் உயிரிழந்தனர்.

1971 - சோயுஸ் 11 விண்ணுக்கு ஏவப்பட்டது.

1974 - சுவீடனில் நாடாளுமன்ற முடியாட்சி அமைக்கப்பட்டது.

1981 - பீகார் தொடருந்து விபத்து: இந்தியாவில் தொடருந்து ஒன்று பாக்மதி ஆறு பாலம் ஒன்றில் தடம் புரண்டு வீழ்ந்ததில் 268 பேர் உயிரிழந்தனர், 300 பேர் காணாமல் போயினர்.

1982 - லெபனான் போர் ஆரம்பமானது. இசுரேலியப் படையினர் தெற்கு லெபனானை ஊடுருவினர்.

1984 - இந்திய இராணுவத்தினர் அம்ரித்சரில் உள்ள பொற்கோயிலில் தாக்குதல் நடத்தியதில் 576 பேர் கொல்லப்பட்டு 335 பேர் காயமுற்றனர்.

1993 - மங்கோலியாவில் முதலாவது நேரடியான அரசுத்தலைவர் தேர்தல் நடைபெற்றது.

2002 - 10 மீட்டர் விட்டமுள்ள புவியருகு விண்பொருள் ஒன்று நடுநிலக் கடலில் கிரேக்கத்திற்கும் லிபியாவிற்கும் இடையில் வீழ்ந்து வெடித்தது.

2004 - இந்தியாவில் தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

 

*பிறப்புகள்*

 

1436 - இரெகியோமோண்டேனசு, செருமானியக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1476)

1599 - டியேகோ வெலாஸ்க்குவெஸ், எசுப்பானிய ஓவியர் (இ. 1660)

1799 - அலெக்சாந்தர் பூஷ்கின், உருசிய எழுத்தாளர், கவிஞர் (இ. 1837)

1850 - கார்ல் பெர்டினாண்ட் பிரவுன், நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1918)

1875 - தாமசு மாண், நோபல் பரிசு பெற்ற செருமானிய எழுத்தாளர் (இ. 1955)

1877 - உள்ளூர் எஸ். பரமேசுவர அய்யர், மலையாளக் கவிஞர், எழுத்தாளர் (இ. 1949)

1890 - கோபிநாத் பர்தலை, அசாம் மாநிலத்தின் 1வது முதலமைச்சர் (இ. 1950)

1891 - மாஸ்தி வெங்கடேச ஐயங்கார், இந்திய எழுத்தாளர் (இ. 1986)

1901 - சுகர்ணோ, இந்தோவேசியாவின் 1வது அரசுத்தலைவர் (இ. 1970)

1905 - என். எம். பெரேரா, இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (இ. 1979)

1908 - பி. எஸ். பி. பொன்னுசாமி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1998)

1908 - சா. கணேசன், தமிழக இலக்கியவாதி; காந்தியவாதி, சிற்பக்கலைஞர், கல்வெட்டாய்வாளர், அரசியல்வாதி (இ. 1982)

1926 - அருள் செல்வநாயகம், ஈழத்து எழுத்தாளர் (இ. 1973)

1929 - சுனில் தத், இந்திய நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், அரசியல்வாதி (இ. 2005)

1933 - ஹைன்றிக் ரோரர், நோபல் பரிசு பெற்ற சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் (இ. 2013)

1936 - டி. ராமா நாயுடு, இந்திய நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 2015)

1949 - ஜி. ராமகிருஷ்ணன், தமிழக இடதுசாரி அரசியல்வாதி

1968 - அலீம் தர், பாக்கித்தானியத் துடுப்பாட்ட வீரர், நடுவர்

1986 - பாவனா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

1988 - அஜின்கியா ரகானே, இந்தியத் துடுப்பாட்டக்காரர்.

 

*இறப்புகள்*

 

1832 - ஜெரமி பெந்தாம், ஆங்கிலேய மெய்யியலாளர் (பி. 1748)

1916 - யுவான் ஷிக்காய், சீனக் குடியரசின் 2வது அரசுத்தலைவர் (பி. 1859)

1920 - வா. கோபாலசாமி இரகுநாத இராசாளியார், தமிழகப் புரவலர், தமிழறிஞர் (பி. 1870)

1947 - மு. சி. பூரணலிங்கம் பிள்ளை, தமிழகத் தமிழறிஞர் (பி. 1866)

1948 - லூயி லூமியேர், பிரான்சிய இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1864)

1961 - கார்ல் யுங்கு, சுவிட்சர்லாந்து உளவியலாளர், மருத்துவர் (பி. 1875)

1968 - இராபர்ட் எஃப் கென்னடி, அமெரிக்க அரசியல்வாதி (பி. 1925)

1990 - ஆலங்குடி சோமு, தமிழகத் திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர் (பி. 1932)

2007 - வீ. கே. சமரநாயக்க, இலங்கை அறிவியலாளர், கல்வியாளர் (பி. 1939)

2008 - ஜோர்ஜ் சந்திரசேகரன், இலங்கை வானொலி ஒலிபரப்பாளர் (பி. 1940)

2009 - ராஜமார்த்தாண்டன், தமிழகக் கவிஞர், எழுத்தாளர்

2015 - ஆர்த்தி அகர்வால், இந்தியத் திரைப்பட நடிகை (பி. 1984)

2016 - எஸ். ஏ. ஐ. மத்தியு, இலங்கைத் தமிழ்ப் பன்னூலாசிரியர் (பி. 1939)

2021 - எஸ். இளையராஜா, தமிழக ஓவியர்

 

 

*ஆசிரியர் நாள் (பொலிவியா)*

 

*உருசிய மொழி நாள் (ஐநா)*

 

*தமிழீழ மாணவர் எழுச்சி நாள்*

 

*🔷🔶இன்றைய சிந்தனை*

…………………………......

*🧿‘’சுய சிந்தனை...!*

...............................

*🏵நம்மில் பெரும்பாலோனோர் எதற்கெடுத்தாலும் அடுத்தவரிடம் ஆலோசனை கேட்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்...*

 

*🏵அப்படி அடிக்கடி ஆலோசனை கேட்பதால் அவர்களின் சுயமாக சிந்திக்கும் திறன் குறைந்து விடுகிறது. அதுமட்டுமில்லாமல் தன்னம்பிக்கை குறையவும் வாய்ப்பு இருக்கிறது...*

 

*🏵முன்னேற்றம் என்பது சுயமாக இருக்க வேண்டும். அதாவது சொந்தமாக ஆலோசிக்க வேண்டும். சொந்தக் காலில் நிற்க பழகவேண்டும்...*

 

*🏵அடுத்தவர்களிடம் ஆலோசனை கேட்கலாம். தவறில்லை. ஆனால்!, அதனை அப்படியே நகலெடுத்தது போல கடைப்பிடித்தல் கூடாது...*

 

*🏵அந்த ஆலோசனைகளை உங்கள் மனதில் ஊறப்போட வேண்டும். அதில் எதை எடுத்துக் கொள்ளலாம், எதை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று ஆலோசிக்க வேண்டும்...*

 

*🏵சில ஆலோசனைகள் உங்கள் வாழ்க்கைக்கும், உங்கள் மனநிலைக்கும், உங்கள் நடவடிக்கைக்கும், உங்கள் பழகும் விதத்திற்கும் ஏற்புடையதாக இருக்கும்...*

 

*🏵அவற்றைத் துணிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். வேறு சில ஆலோசனைகள் நல்லதாகவும், கடைப்பிடிக்க வேண்டியதாகவும் இருக்கலாம்...*

 

*🏵ஆனாலும்!, உங்கள் மனோபாவத்திற்கு பொருந்தாததாக இருக்கும். எனவே அவற்றை ஒதுக்கித் தள்ளிவிட வேண்டும்...*

 

*🏵எல்லோரையும் ஒரே நேரத்தில் நிறைவடையச் செய்தல் என்பது இயலாத செயல். 'எடுப்பார் கைப்பிள்ளையாக' இருக்காமல் நாமாகவே நல்லது எது, கெட்டது எது என்பதை சுயமாக சிந்தித்து ஒரு செயலில் இறங்க வேண்டும்...*

 

*😎ஆம் நண்பர்களே...!*

 

*🧿உங்கள் சுயத்தை தொலைக்காமல் நீங்கள், நீங்களாக இருங்கள். தைரியமாக உங்கள் கருத்தை சொல்லுங்கள். அல்லது கூற முயற்சி செய்யுங்கள்...!*

 

*🧿மற்றவர்கள் ஏதாவது நினைப்பார்களோ என்று நினைத்தால் நம் கருத்தை என்றுமே கூற முடியாது!, நம் கருத்தை முன்வைப்பதன் மூலமே மேலும் மாற்றுக் கருத்துகளை நம் தவறுகளை நாம் இனம் காண முடியும், அப்போது தான் நம் எண்ணங்களை, தவறுகளை சரி செய்து நம்மை மேம்படுத்திக்கொள்ள முடியும்...!!*

 

*🧿உங்கள் வாழ்க்கையை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். மற்றவர்கள் அல்ல மற்றவர்கள் சொல்லும் கருத்துக்களை கேட்டுக் கொள்ளுங்கள். ஆனால்!, முடிவு எடுப்பது என்னவோ நீங்களாகத்தான் இருக்க எண்டும்...!!!*

 

_*📌📌எதையும் சுயமாக சிந்தியுங்கள்...! ஆரோக்கியமாக வாழுங்கள்..!*_

 

*🌎🇮🇳 முக்கிய செய்திகள்🇮🇳🌎*

 

*1️🔷🔶சி பி எஸ் இ 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை மற்றும் அகமதிப்பீட்டு மதிப்பெண்களை பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் இம்மாதம் 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.*

 

 

*2️🔷🔶நாடு முழுவதும் இதுவரை 36 கோடிக்கும் அதிகமாக கோவிட்-19 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.*

 

 

*3️🔷🔶காஞ்சிபுரம்: குன்றத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாநில ஊரகத் தொழில் துறை அமைச்சர்  தா.மோ. அன்பரசன் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.*

 

*4️🔷🔶முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பது போன்றவற்றை நாட்டுக் மக்கள் எக்காரணத்தைப் கொண்டும் கைவிடக்கூடாது*. *கோவிட் நோய் தொற்றுக்கு எதிரான போரில் நாம் நிச்சயம் வெற்றிபெறுவோம்.* *பிரதமர் திரு நரேந்திர மோடி*

 

 

*5️🔷🔶75% தடுப்பூசியை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் பிரதமரின் அறிவிப்புக்கு முதலமைச்சர் திரு* *@mkstalin* *வரவேற்பு.* *@narendramodi*

 

*6️🔷🔶நாட்டில் ஏப்ரல் மே மாதங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆக்ஸிஜன் தேவை ஏற்பட்டதாகவும், அதனை போக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்ததாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.*

 

 

 

*7️🔷🔶மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்து, தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.*

 

*8️🔷🔶கோவிட் நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காகவும், பொதுமக்களின் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டும் கோவை மாவட்டக் காவல் துறை சார்பில் வாட்ஸ்அப் மூலம் புகார் தெரிவிக்கும் முறையை கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு செல்வ நாகரத்தினம் இன்று அறிமுகம் செய்தார்.*

 

 

*9️🔷🔶நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை இன்று திறந்து வைத்து, மாநில மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு மா. சுப்பிரமணியன் பேட்டி*

 

 

*1️0️🔷🔶திருவண்ணாமலை மாவட்டம் பெரியகிளாம்பாடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை சட்டபேரவை துணைத்தலைவர் திரு கு பிச்சாண்டி இன்று திறந்து வைத்தார்.*

 

 

*1️1️🔷🔶ரூர்கேலாவிலிருந்து 52 வது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ், 4 கொள்கலன்களில் 85.8 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் ஏற்றிக்கொண்டு இன்று சென்னை வந்தடைந்தது*.

 

 

*1️2️🔷🔶முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை சுமார் 280 கோடி ரூபாய் நன்கொடையாக பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது*.

 

 

*1️3️🔷🔶திருப்பூரில் தமிழக அரசின் விதிமுறைகளை மீறி 10% பணியாளர்களுக்கு அதிகமாக வைத்து செயல்பட்ட பின்னலாடை நிறுவனங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.*

 

 

*1️4️🔷🔶தமிழ்நாட்டுக்குத் தேவையான கோவிட்-19 தடுப்பூசி கொள்முதலுக்கான உலகளாவிய ஒப்பந்தத்தை யாரும் எடுக்க முன் வராததால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார்*  *மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு மா சுப்ரமணியன்*

 

 

 

*1️5️🔷🔶கோவிட்-19 சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில்  தெரிவித்துள்ளது.*

 

 

 

*1️6️🔷🔶கோவை மாவட்டத்தில் கோவிட்-19 நோய் தொற்று பரவல் தற்போது 60 சதவீதம் வரை குறைந்துள்ளதாக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு கே என் நேரு தெரிவித்துள்ளார்.*

 

 

 

*1️7️🔷🔶தமிழகத்தில் இ-பதிவு செய்வதில் உள்ள நடைமுறை குறைபாடுகள் இன்றைக்குள் சரி  செய்யப்பட்டுவிடும் என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.*

 

 

*1️8️🔷🔶சென்னை ஐ ஐ டி முன்னாள் மாணவர்கள் தலா பத்து லிட்டர் கொள்ளளவு கொண்ட 200 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை சென்னை மாநகராட்சிக்கு வழங்கியுள்ளனர்.*

 

 

*1️9️🔷🔶அசாதாரண சூழ்நிலைகள் தவிர ஞாயிற்றுக்கிழமைகளில் முதலமைச்சர் திரு மு க ஸ்டாலினை தொந்தரவு செய்யக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.*

 

 

*2️0️🔷🔶மாநில அரசு மேற்கொண்ட தீவிர வடிக்கை காரணமாக கோவிட்-19 தொற்று பாதிப்பு குறைந்து வருவதாக அமைச்சர் திரு மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.*

*2️1️🔷🔶நீதிமன்ற நடவடிக்கைகளை நேரலையாக ஒளிபரப்புவது மற்றும் பதிவு செய்வது தொடர்பான வரைவு மாதிரி விதிகளை உச்சநீதிமன்றத்தின் மின்னணு குழு வெளியிட்டு, அதுதொடர்பாக அனைத்து பங்குதாரர்களின் பின்னூட்டம் மற்றும் கருத்துக்களைக் கோரியுள்ளது.*

 

 

*2️2️🔷🔶சுமார் 1.49 கோடி கோவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.*

 

 

*2️3️🔷🔶வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் அமைச்சர் திரு துரைமுருகன்  484 பயனாளிகளுக்கு சுமார் ரூ 6 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.*

 

 

*2️4️🔷🔶நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவினை, மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு மா. சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார்.*

 

 

 

*2️5️🔷🔶நாகை மாவட்டம் நம்பியார்நகர் பகுதியில் 34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மீன்பிடி துறைமுக பணிகளை மாநில சுற்றுசூழல் துறை அமைச்சர் திரு மெய்யநாதன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.*

 

🔶சென்னை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஆணையர் திரு ககன்தீப் சிங் பேடி இன்று ஆய்வு செய்தார்.*

 

 

*🔶மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டம் குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.*

 

 

*🔶தமிழ்நாட்டில் கோவிட் தொற்று தடுக்கும் பணிகளில், மாநில அரசு முழுவீச்சில் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறது என்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை என்பதே கிடையாது என்றும் அமைச்சர் திரு மா. சுப்பிரமணியன் பேட்டி*

 

 

🔶கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்காக தேவைப்படும் அம்போடேரிசின் பி உள்ளிட்ட அனைத்து உயிர்காக்கும் மருந்துகளையும் வாங்குவதற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ 25 கோடி ஒதுக்கீடு செய்வதாக முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.*

 

 

 

🔷🔶தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரிலும் ப்ளஸ் டூ பொதுத் தேர்வுகள் ரத்து*  *அம்மாநில முதலமைச்சர் திரு ரங்கசாமி அறிவிப்பு.*

 

 

🔷🔶டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் 100 விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இவர்கள் 14 பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.*

 

 

🔷🔶தமிழகத்தில் ப்ளஸ் டூ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு எப்படி மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து முடிவு செய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.*

 

 

🔷🔶தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சுயதொழில் செய்பவர்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை இ-பதிவுடன் பணிபுரிந்து வருகின்றனர்.*

 

🔷🔶61* *நாட்களுக்குப் பிறகு, கோவிட்-19 தொற்றின் தினசரி பாதிப்பு சுமார் 1 லட்சமாகக் குறைந்துள்ளது*  *மத்திய சுகாதார அமைச்சகம்*

 

 

🔷🔶ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.*

 

*🔷🔶வரலாற்று நினைவுச்சின்னங்கள், கோயில்கள், சிலைகளை அடையாளம் காண, சரிசெய்ய, பராமரிக்க 17 பேர் கொண்ட 'பாரம்பரிய ஆணையம்' - 8 வாரங்களுக்குள் அமைக்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.*

 

*கோயில்களில் உள்ள சிலைகளின் இருப்பு கணினிமயமாக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவு*

 

🌎🇮🇳 செய்தி துளிகள் 🇮🇳🌎*

 

இ-பதிவு இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்ட சுயதொழில் என்ற பிரிவு மீண்டும் சேர்ப்பு..!*

 

பிரதமரின் இலவச கொரோனா தடுப்பூசி அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு*

 

இந்தியாவில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையை புனரமைக் ரூ. 3,600 கோடி கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல்.*

 

டெல்லியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு..! மெட்ரோ சேவை; மாநகரப் பேருந்துப் போக்குவரத்து மீண்டும் துவக்கம்*

 

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது..! நாளை முதல் ரேஷன் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு*

 

புனேவில் தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பெண்கள் உள்பட 17 பேர் பலி*

 

️"கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்துக் காட்ட வேண்டிய அவசியமில்லை" -அமைச்சர் மா.சுப்பிரமணியன்*

 

கோவிஷீல்டு தடுப்பூசி -அதிக எதிர்ப்பு சக்தி - இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தகவல்*

 

தி பேமிலி மேன் 2" தொடர் விவகாரம் "தொடரை மத்திய அரசு நிறுத்த வேண்டும்" - திரைப்பட இயக்குநர் பாரதிராஜா வலியுறுத்தல்*

 

நாடு முழுவதும் கருப்பு பூஞ்சை நோய்க்கு 28,252 பேர் பாதிப்பு*

 

️“இது டிரெய்லர்தான்...மெயின் பிக்சரை இனிதான் பார்ப்பீர்கள்“ - அமைச்சர் சேகர் பாபு*

 

️"தொற்று குறைய மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" - செங்கல்பட்டு ஆட்சியர் பிரத்யேக பேட்டி*

 

நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பணிகள் - அமைச்சர் வேலு தலைமையில் ஆய்வுகூட்டம்*

 

️“இந்தியாவில் ஆக்சிஜன் உற்பத்தி அதிகரிப்பு“ - பிரதமர் மோடி*

 

பேச்சிப்பாறை அணை நீர் திறப்பு நிறுத்தம் - உபரிநீர் வெளியேற்றம்*

 

வாட்ஸ் அப் வீடியோ காலில் புகார் தரலாம்.. கோவை மாவட்ட எஸ்.பி. தொடங்கிவைத்தார்*

 

 

*🔷🔶நோய் எதிர்ப்பு சக்தி உற்பத்தியில் கோவேக்சினை மிஞ்சிய கோவிஷீல்டு தடுப்பூசி - ஆய்வில் கண்டுபிடிப்பு*

 

இந்தியாவில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. கோவேக்சின் தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் செயல்திறன் 81 சதவீதம் ஆகும்.

 

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ராஜெனேகா கூட்டு கண்டுபிடிப்பான கோவிஷீல்டு தடுப்பூசியை புனேவில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் செயல்திறன் 70 சதவீதம்.

 

இந்தநிலையில், எந்த தடுப்பூசியால், நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் பொருள் (ஆன்டிபாடி) அதிகமாக உற்பத்தி ஆகிறது என்பது பற்றிய ஆய்வு நடத்தப்பட்டது. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள விஜய்ரத்னா டயாபடீஸ் சென்டர், கொல்கத்தாவில் உள்ள ஜி.டி. ஆஸ்பத்திரி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.

 

13 மாநிலங்களின் 22 நகரங்களை சேர்ந்த 515 சுகாதார பணியாளர்களை கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. இவர்களில் 210 போ் பெண்கள். 425 பேர் கோவிஷீல்டு தடுப்பூசி 2 தவணையும், 90 பேர் கோவேக்சின் தடுப்பூசி 2 தவணையும் போட்டுக்கொண்டனர்.

 

 

 *🔷🔶விவசாய நகை கடன்- முறையாக திரும்ப செலுத்தியவர்களுக்கு 3 சதவீதம்     

மானியம்*

 

*விவசாயிகளுக்காக, 7 சதவீத வட்டியில், விவசாய நகை கடன் வழங்கப்படுகிறது. இதில் முறையாக திரும்ப செலுத்துவோருக்கு மானியம் வழங்கப்படுகிறது. விவசாய நகை கடனுக்கான வட்டி விகிதத்தில் 5 சதவீதத்திற்கான வட்டி தொகையை வங்கிகளுக்கு மத்திய அரசு வழங்குகிறது. ஆனால் கடந்த 2019-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை.*

 

இதனால், விவசாய நகை கடன்களுக்கு வழங்கப்பட்ட மானியம் கடந்த 2019-ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது. கொரோனா 2-வது அலை காரணமாக விவசாய நகை கடன்களை முறையாக செலுத்த முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.

 

இதனால், கடந்த மார்ச் 1-ந் தேதி முதல் வருகிற 30-ந் தேதி வரையிலான தேதிகளில் நகை கடன்களுக்கான 7 சதவீத வட்டியில் 3 சதவீதம் மானியமாக வழங்க நபார்டு வங்கி சார்பில் அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

 

இதனால், நகை கடன் முறையாக செலுத்தியவர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் 3 சதவீத வட்டித்தொகை மானியமாக, அவர்களது வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்படும் என்று நபார்டு வங்கி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

 

 

🔷🔶28 மாநிலங்களில் 28,252 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு*

 

*கொரோனா விவகாரம் தொடர்பான மந்திரிகள் குழுவின் உயர்மட்ட கூட்டம் நேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில், மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் பேசியதாவது:-*

 

 

28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கருப்புபூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 28 ஆயிரத்து 252 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 86 சதவீதம் பேர் கொரோனாவால் தாக்கப்பட்டவர்கள். 62.3 சதவீதம் பேர் நீரிழிவு நோயாளிகள் ஆவர்.

 

அதிக அளவாக, மராட்டிய மாநிலத்தில் 6 ஆயிரத்து 339 பேரும், குஜராத்தில் 5 ஆயிரத்து 489 பேரும் கரும்பூஞ்சையால் தாக்கப்பட்டுள்ளனர்.

 

இந்தியா, 141 நாட்களில் மொத்தம் 23 கோடி டோஸ் தடுப்பூசி போட்டுள்ளது. வேகமாக தடுப்பூசி போடுவதில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது. உலக அளவில் மொத்தம் 88 கோடியே 70 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில், இந்தியாவில் மட்டும் 17 கோடியே 90 லட்சம் பேருக்கு போடப்பட்டுள்ளது. இது, உலக அளவில் 20.2 சதவீதமாகும். இவ்வாறு அவர் பேசினார்.

 

 

 

0 Response to "08.06.2021 செவ்வாய்க்கிழமை - முக்கியச் செய்திகள்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel