இயக்குநர்கள் , இணை இயக்குநர்கள் பள்ளிகளை ஆய்வு செய்தல் சார்ந்து பள்ளிக்கல்வித்துறை ஆணையாளரின் செயல் முறைகள்... இணைப்பு ( உத்தேச கால அட்டவணை


மாநிலம் முழுவதும் டிசம்பர் 15 முதல் பிப்ரவரி 24 வரை பள்ளிக்கல்வித்துறை ஆய்வு.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக
செயல்படுத்தப்பட்டு வரும் கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகளை மேலும் மேம்படுத்தும்
விதமாக , அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும்
மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு , மண்டல வாரியான ஆய்வுக் கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது .
இக்கூட்டத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்கள் மற்றும் பள்ளிக்
கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களும் கலந்து கொண்டு ஆய்வு செய்ய
இருக்கின்றனர்.
மேலும் , இவ்வாய்வுக்கூட்டம் 7 மண்டலங்களாக
பிரிக்கப்பட்டு நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது . ஒரு மண்டலத்தில் இரண்டு நாட்கள்
ஆய்வுக்கூட்டம் நடைபெறும் . அக்கூட்டத்தின் முதல் நாளில் சார்ந்த இயக்குநர்கள்
மற்றும் இணை இயக்குநர்கள் பள்ளி பார்வை மேற்கொள்வர்.
இரண்டாம் நாள் மாண்புமிகு
பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில் தொடர்புடைய கள அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம்
நடைபெறும் . இக்கூட்டங்களுக்கான அட்டவணை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது .
கூட்டப்பொருள் விரைவில் அனுப்பி வைக்கப்படும் .
0 Response to "இயக்குநர்கள் , இணை இயக்குநர்கள் பள்ளிகளை ஆய்வு செய்தல் சார்ந்து பள்ளிக்கல்வித்துறை ஆணையாளரின் செயல் முறைகள்... இணைப்பு ( உத்தேச கால அட்டவணை"
Post a Comment