ஏழாம் வகுப்பு - இயல் 4 - கவிதைப்பேழை - பெரும்பாணாற்றுப்படை (கலங்கரை விளக்கம்)

Trending

Breaking News
Loading...

ஏழாம் வகுப்பு - இயல் 4 - கவிதைப்பேழை - பெரும்பாணாற்றுப்படை (கலங்கரை விளக்கம்)

ஏழாம் வகுப்பு - இயல் 4 - கவிதைப்பேழை  - பெரும்பாணாற்றுப்படை  (கலங்கரை விளக்கம்)



கடலும் கடல்சார்ந்த இடமும் தமிழரின் வாழ்நிலங்களுள் ஒன்று. கடலோடு வாழ்ந்த தமிழர்
, தம் தொழில்நுட்ப அறிவால் கலம் படைத்து, மீன்பிடித்தும், வாணிகம் செய்தும் வாழ்ந்தனர். கடற்பயணத்தில் கரை திரும்பத் தமிழர் கண்ட தொழில்நுட்பமே கலங்கரை விளக்கம். அது குறித்துச் சங்கப் பாடல் விளக்குவதைக் காண்போம்.
 
வானம் ஊன்றிய மதலை போல
ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி
விண்பொர நிவந்த வேயா மாடத்து
இரவில் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி
உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும்
துறை…….                                                                  (346-351)
-          கடியலூர் உருத்திரங் கண்ணனார்.
 
கவிநடை  உரை

வானை விழாது தாங்கும்
தூண்  போலத் தோன்றும்
ஏணிகொண்டு ஏறினாலும் எட்டாத உச்சி
வைக்கோல் கொண்டு வேயவி்ல்லை
சாந்துகொண்டு பூசிய விண்முட்டும் மாடம்
இரவில் ஏற்றிய எரிசுடர்ஒளி
கடலில் துறையறியாது கலங்கும் கலங்களை
வா! வா! என அழைக்குமே...
 
 சொல்லும் பொருளும்

மதலை             -   தூண் 
வேயா மாடம் - வைக்கோல் போன்றவற்றால் வேயப்படாது,  திண்மையாகச் சாந்து பூசப்பட்ட மாடம்
மாட்டிய     -          ஏற்றிய                    
உரவுநீர்      -         பெருநீர்ப் பரப்பு  
கரையும்    -         அழைக்கும்
சென்னி               உச்சி
ஞெகிழி      -          தீச்சுடர்
 அழுவம்     -           கடல்

பாடலின் பொருள்

கலங்கரை விளக்கமானது வானம் கீழே விழுந்துவிடாமல் தாங்கிக் கொண்டிருக்கும் தூண் போலத் தோற்றமளிக்கிறது; ஏணி கொண்டு ஏறமுடியாத உயரத்தைக் கொண்டிருக்கிறது; வேயப்படாமல் சாந்து பூசப்பட்ட விண்ணை முட்டும் மாடத்தைக் கொண்டிருக்கிறது. அம்மாடத்தில் இரவில் ஏற்றப்பட்ட  எரியும் விளக்கு(நெருப்பு), கடலில் துறை அறியாமல் கலங்கும் மரக்கலங்களைத் தன்துறை நோக்கி அழைக்கிறது.

நூல்வெளி

கடியலூர் உருத்திரங்கண்ணனார் சங்ககாலப் புலவர். இவர் கடியலூர் என்ற ஊரில் வாழ்ந்தவர்.  இவர் தந்தையின் பெயர் உருத்திரன். சோழமரபைச் சேர்ந்தவர். இவர் தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னன் மீது பெரும்பாணாற்றுப்படை என்னும் நூலைப் பாடியுள்ளார். பட்டினப்பாலை என்னும் நூலும் இவர் பாடியதே.
பெரும்பாணாற்றுப்படை  என்னும் இந்நூலின் தலைவன் தொண்டைமான் இளந்திரையன். இவனிடம் ஒரு பெரும்பாணன் பரிசுபெற்று வந்தான். அவன் வரும் வழியில் எதிரில்  வந்த வேறு ஒரு பெரும்பாணனை இளந்திரையனிடம் சென்று பரிசுபெற வழிகாட்டுவதாக இந்நூல் அமைந்துள்ளது. ஒரு பெரும்பாணன் மற்றொரு பெரும்பாணனை ஆற்றுப்படுத்தியதால் இந்நூல் பெரும்பாணாற்றுப்படை என்னும் பெயர்பெற்றது.
 

0 Response to "ஏழாம் வகுப்பு - இயல் 4 - கவிதைப்பேழை - பெரும்பாணாற்றுப்படை (கலங்கரை விளக்கம்)"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel