டெல்லியில் முதல்வர் ஸ்டாலின்

Trending

Breaking News
Loading...

டெல்லியில் முதல்வர் ஸ்டாலின்

டெல்லியில்  முதல்வர் ஸ்டாலின்

 


சென்னை: நேற்று பிரதமர் மோடியை சந்தித்த தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்
22 கோரிக்கைகளை வைத்தார். இதில் சென்னை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கை ஒன்று அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
 
நேற்று பிரதமர் மோடிக்கும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. 25 நிமிடங்கள் இவர்கள் இருவரும் ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனையில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டது.
 
தமிழ்நாடு முதல்வராக பதவி ஏற்றபின் முதல்முறை ஸ்டாலின் பிரதமருடன் சந்திப்பு நடத்தி உள்ளார். 25 முக்கியமான கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் இந்த ஆலோசனையில் பிரதமரிடம் வைத்தார்.
 
இந்த சந்திப்பில் நீட் தேர்வு ரத்து, செங்கல்பட்டில் வேக்சின் தயாரிப்பு, ஆறுகள் இணைப்பு, மூன்று வேளாண் சட்ட ரத்து, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை வேகமாக அமைப்பது, கோவையிலும் புதிய எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பது என்று பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் இதில் வைத்தார்.
 
இதில் சென்னையில் உச்ச நீதிமன்ற கிளையை அமைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். டெல்லியில் உச்ச நீதிமன்றம் இருக்கும் நிலையில் சென்னையில் இதன் கிளையை அமைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். 2009ல் அமைக்கப்பட்ட முக்கியமான கமிஷன் ஒன்றின் அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் இந்த கோரிக்கை வைத்துள்ளார்.
 
18வது சட்ட கமிஷன் 2009ல் வைத்த பரிந்துரையின் அடிப்படையில் இந்தியாவில் சென்னை (அல்லது ஹைதராபாத்), கொல்கத்தா, மும்பை ஆகிய மூன்று மாநிலங்களில் கூடுதலாக உச்ச நீதிமன்ற கிளை அமைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை வழங்கியது. இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் முதல் நபராக இந்த கோரிக்கையை பிரதமரிடம் வைத்துள்ளார்.
 
சட்ட கமிஷன் செய்த பரிந்துரையை செயல்படுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார். இது ஒரு வகையில் சென்னைக்கு பெரிய அளவில் முக்கியத்துவத்தை கொடுக்கும். சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை அமைக்கப்பட்டால் தென் மாநில வழக்குகள் அனைத்தும் இங்கேயே விசாரிக்கப்படும். இது தென் மாநிலங்களுக்கு இடையில் சென்னையை அதிக முக்கியத்துவம் பெற வைக்கும்.
 
தெலுங்கானா, கர்நாடகா, கோவா, ஆந்திர பிரதேசம், கேரளா ஆகிய மாநிலத்தின் உச்ச நீதிமன்ற வழக்குகள் சென்னையில் நடக்கும். இது சென்னையை தென்னிந்தியாவின் "லீகல் தலைநகராக" மாற்றும். உச்ச நீதிமன்ற கிளையை தென்னிந்தியாவில் சென்னை அல்லது ஹைதராபாத்தில் அமைக்கலாம் என்று 18வது கமிஷன் பரிந்துரைத்த நிலையில் சென்னையில் அமைக்க வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இது சென்னைக்கு சட்ட ரீதியான முக்கியத்துவத்தை கொடுக்கும். ஆனால் இப்போதைக்கு உச்ச நீதிமன்றத்தை விரிவாக்கும் முயற்சிகள் எதுவும் செய்யப்படவில்லை. ஒருவேளை உச்ச நீதிமன்றம் விரிவாக்கப்பட்டால், சென்னையில் அதன் கிளை அமைக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
 
 
*சோனியா, ராகுலுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு: இன்று சென்னை திரும்புகிறார்*
 
டெல்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், நேற்று பிரதமரை சந்தித்து கோரிக்கைகளை அளித்து பேசிய நிலையில் இன்று காலை காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
 
திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், கரோனா தொற்று பரவல் காரணமாக பிரதமரை சந்திக்க செல்லவில்லை, தொற்று குறைந்த நிலையில் பிரதமரை சந்திக்க அனுமதி கிடைத்ததால் முதன்முறையாக மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியை நேற்று சந்தித்தார்.
 
நேற்று காலை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், உதவியாளர் தினேஷ், தனிச் செயலர்கள் உதயச்சந்திரன், உமாநாத், செல்வராஜ் உள்ளிட்டோர் சென்றனர்.
 
டெல்லியில் முதல்வரை டி.ஆர்.பாலு, கனிமொழி, டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர். டெல்லி தமிழக இல்லத்தில் அவரைத் தலைமைச் செயலர் இறையன்பு உள்ளிட்ட தமிழகத்தின் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் கார்டு ஆஃப் ஹானர் எனப்படும் டெல்லி பட்டாலியன் போலீஸார் அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
 
நேற்று மாலை 5 மணி அளவில் பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். பிரதமருடன் 25 நிமிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின் தமிழகம் சார்பில் 25 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் உறவுக்கு கைகொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்கிற அடிப்படையில் மத்திய அரசுடனான உறவு இருக்கும் என்று தெரிவித்தார். தாம் வைத்த கோரிக்கைகள் குறித்தும் விளக்கி கூறினார்.
 
டெல்லியில் தங்கியிருந்த அவரை மாலை 7 மணி அளவில் இடதுசாரிக்கட்சித் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்டோர் சந்தித்தனர், சோனியாவை சந்திக்கும் திட்டம் அவரது பயணத்தில் இருந்தது. நேற்றிரவு டெல்லியில் தங்கிய முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 10 மணி அளவில் சோனியாவின் இல்லத்துக்கு சென்றார். அவருடன் அவரது மனைவி துர்காவும் உடன் சென்றனர்.
 
அவர்கள் இருவரையும் சோனியாவும், ராகுலும் வரவேற்றனர். சோனியாவுக்கு புத்தகம் ஒன்றை ஸ்டாலின் பரிசளித்தார். சோனியா முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
 
ராகுலும் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார். முதல்வராக பொறுப்பேற்றப்பின் முதன் முறையாக சோனியா மற்றும் ராகுலை ஸ்டாலின் சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சோனியாவை சந்தித்தப்பின் தமிழ்நாடு இல்லம் திரும்பும் ஸ்டாலின் இன்று சென்னை திரும்புகிறார்.

0 Response to "டெல்லியில் முதல்வர் ஸ்டாலின்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel