சென்னை: முதலமைச்சர் மு.க ஸ்டாலினுடன் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்து போக்குவரத்து சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா குறைந்து வரும் நிலையில் பேருந்து சேவைகளுக்கு தளர்வுகள் வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.
ஆந்திராவில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள கிருஷ்ணா நீர், இன்று காலை ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டுக்கு வந்தடைந்தது. எம்எல்ஏக்கள் ஆ.கிருஷ்ணசாமி, வி.ஜி.ராஜேந்திரன், டி.ஜெ.கோவிந்தராஜன், திருத்தணி எஸ்.சந்திரன், காரம்பாக்கம் கணபதி மற்றும் கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ், நீர்வளத்துறை அதிகாரிகள் ஆகியோர் மலர்தூவி வரவேற்றனர்
0 Response to "பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை செய்திகள்"
Post a Comment