நாங்கள் நடந்து முடிந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 ல் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டோம். ஆசிரியர் தேர்வு வாரியமானது தேர்வு எழுதுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியினை 15.07.2019 க்குள் பெற்றிருக்க வேண்டும் என அறிவிப்பில் வெளியிடப்பட்டு இருந்தது. நாங்கள் பயின்ற பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தேர்வு முடிவுகள் 15.07.2019 க்கு முன்பாகவே வெளியிடப்பட்டு உள்ளதால் குறிப்பிட்ட கல்வித் தகுதியினை நாங்கள் அனைவரும் Cut off date 15.07.2019 க்கு முன்னரே பெற்றுள்ளோம். ஆசிரியர் தேர்வு வாரிய உத்தரவின்படி சான்றிதழ் பதிவேற்றம் செய்ய நிர்ணயிக்கப்பட்ட நாட்களான 29.10.2019 - 01.11.2019 க்குள் அனைத்து சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ததுடன் 08.11.2019 மற்றும் 09.11.2019 அன்று நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டு அனைத்து சான்றிதழ்களையும் சமர்ப்பித்தோம். ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியமானது முதுகலைப் படிப்பு Cutoff date 15.07.2019 க்கு பிறகு முடித்ததாகக் கூறி எங்களுக்கு பணி நியமன ஆணை வழங்கவில்லை.
0 Response to "PGTRB தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க கோரிக்கை!"
Post a Comment