
தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் 100 நாள் வேலைத்திட்ட ஊழியர்கள் மனசாட்சியுடன் பணியாற்ற வேண்டும் என அமைச்சர் பெரிய கருப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் இந்த திட்டத்தின் மூலமாக பணியாற்றுபவர்கள் முழுமையாக வேலையை செய்வதில்லை என்றும் வேலை செய்யாமலேயே சம்பளம் பெறுவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. இதனால் ஊழியர்களை கண்காணிக்க மொபைல் மானிட்டரிங் ஆப் பயன்படுத்தப்படுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்திலும் இதுகுறித்து பல புகார்கள் எழுந்துள்ளன. இதனால் அமைச்சர் பெரியகருப்பன் கூறுகையில், 100 நாள் வேலைத்திட்டத்தில் தங்கள் பகுதி நலனுக்காக மனசாட்சியுடன் பணியாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களின் ஊதியத்தை ரூ.273ல் இருந்து ரூ.300 ஆக உயர்த்த பரிசீலனை நடைபெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
0 Response to "தமிழகத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட சம்பள உயர்வு – அமைச்சர் தகவல்! "
Post a Comment