17.07.2021 மாலை - முக்கிய செய்திகள் மற்றும் சுவாரசியமான தகவல்கள் ஒரே பதிவில்

Trending

Breaking News
Loading...

17.07.2021 மாலை - முக்கிய செய்திகள் மற்றும் சுவாரசியமான தகவல்கள் ஒரே பதிவில்

17.07.2021  மாலை - முக்கிய செய்திகள்  மற்றும் சுவாரசியமான தகவல்கள் ஒரே பதிவில்


*1️
🔷🔶கேரளா: கருக்கிடக மாத பூஜைக்கு நடை திறக்கப்பட்ட நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா கட்டுப்பாடு தளர்வுகளால் சபரிமலை கோயிலில் ஐயப்பனை பக்தர்கள் நேரில் சாமி தரிசனம் செய்தனர்*
 
 
*2️🔷🔶நாமக்கல்: நாமக்கல் ராசிபுரம் அருகே மேம்பாலத்தில் கயிறு ஏற்றி வந்த லாரி மீது பைக் மோதி தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். ஆண்டகளூர்கேட் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பைக் தீப்பிடித்து எரிந்ததில் இளைஞர் ஒருவா் உயிரிழந்தார். கயிறு லாரியில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வாகனத்தில் வீரர்கள் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்*
 
 
*3️🔷🔶மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 72.16 அடியிலிரந்து 71.97 அடியாக அதிகரித்துள்ளது. காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 5,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.*
 
 
*4️🔷🔶தர்மபுரி: ஒகனேக்கல்லுக்கு வரும் காவிரி நீரின் அளவு வினாடிக்கு 5,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 3,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீர் அதிகரிப்பால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளது.*
 
 
*5️🔷🔶ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டத்தில் போதையில் ஒருவரின் காலில் விழுந்த தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். காட்டுப்பாக்கம் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் புவியரசனை சஸ்பெண்ட் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளாா்.*
 
 
*6️🔷🔶டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக அமைக்கப்பட்டுள்ள கிராமத்தில் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ள நிலையில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள அதிகாரி தனிமைப்படுத்திக் கொண்டார்*
 
 
*7️🔷🔶டெல்லி: வடமேற்கு வங்கக்கடலில் வரும் 21-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியில் கேரளா, கர்நாடகாவில் கனமழை பெய்யும் எனவும் கூறியுள்ளது*
 
 
*8️🔷🔶சென்னை: சிபிசிஐடி சம்மன் கொடுக்க சென்ற போது சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளி ஆசிரியைகள் தப்பியோடியதாக கூறப்படுகிறது. கேளம்பாக்கம் பழனி கார்டனில் உள்ள ஆசிரியைகள் 5 பேரின் இல்லங்களில் சம்மன் ஒட்டப்பட்டுள்ளது. பள்ளி மாவணவிகளுக்கு சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை தர உதவியதாக பள்ளி ஆசிரியைகள் 5 பேர் மீது புகார் அளிக்கப்பட்டது.*
 
 
*9️🔷🔶சென்னை: சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் சோமாலியாவைச் சேர்ந்தவரிடம் ரூ.3 லட்சம் பணம் பறித்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவளத்தில் பதுங்கியிருந்த ஈரான் நாட்டைச் சேர்ந்த 4 பேரை ஆயிரம் விளக்கு போலீஸ் கைது செய்தது*
 
 
*1️0️🔷🔶மதுரை: ஈவு விடுப்புக்கேட்டு சமூகவலைத்தளங்களில் கருத்து பதிவிட்ட மதுரை ஆயுதப்படை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். காவலர் அப்துல்காதர் இஸ்மாயிலை சஸ்பெண்ட் செய்து மாநகர காவல் ஆணையர் பிரேம்ஆனந்த் சின்ஹா ஆணையிட்டுள்ளார்*
 
 
*1️1️🔷🔶டெல்லி: வரும் டிசம்பர் மாதம் வரை 65.5 கோடி கொரோனா தடுப்பூசிகளை பெற மத்திய அரசு ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளது. சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறவனங்களுடன் புதிய ஒப்பந்தங்களை மத்திய அரசு இறுதி செய்துள்ளது.*
 
 
*🔷🔶நாமக்கல்: நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 10 காசு அதிகரித்து ரூ-5.05-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.*
 
*மேலும் 2 நாட்களில் 25 காசுகள் உயர்ந்துள்ளது.*
 
*சென்னையில் முட்டை விற்பனை விலை ரூ.5.20 ஆகவும்*
 
*நாக்கல்லில் ஒரு கிலோ கறிக்கோழி ரூ.125-க்கு விற்பனை செய்யப்படுகிறது.*
 
 
   *கேரளாவில் அனைத்து நாட்களிலும் கடைகளை திறப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும். தற்போது பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் 3 நாட்களுக்கு கூடுதல் தளர்வுகள் அனுமதிக்கப்பட்டு உள்ளது. இந்த நாட்களில் கொரோனா தொற்று விகிதம் 15 சதவீதத்திற்கும் குறைவான பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களான பலசரக்கு, பழம், காய்கறி, மீன், இறைச்சி, பேக்கரி கடைகளுடன் துணிக்கடைகள், செருப்பு, நகை கடைகள், எலக்ட்ரானிக்ஸ் கடைகளும் இரவு 8 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.*
   
 
   *ரஷியாவில் 17 பேருடன் சென்ற மாயமான விமானம் கண்டுபிடிப்பு*
 
 
*கொரோனா 2வது அலையில் நாட்டில் பாதிப்புகள் திடீர் உச்சம் அடைந்தது. இதனை தொடர்ந்து, கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும் எண்ணிக்கை உயர தொடங்கியநிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது* 
 
   *திருப்பதி,*
 
*திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 12,415 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர் என்றும் ஒரே நாளில் ரூ.2.20 கோடி காணிக்கையாக பெறப்பட்டுள்ளது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.*
 
 
 
   *புதுடெல்லி*
 
*இந்தியாவில் ஜனவரி 16-ம் தேதி முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுவருகிறது. கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டுவருகின்றன*
  
   *டோக்கியோ,*
 
*கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகள், கொரோனா பரவல் காரணமாகக் ஒத்தி போடப்பட்டன. இறுதியாக இன்னும் சில தினங்களில் ஜப்பானின் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவிருக்கின்றன*
 
    *மேகதாது அணை விவகாரம்; மத்திய நீர்வளத்துறை அமைச்சருடனான சந்திப்பு நம்பிக்கை அளிக்கிறது: திருமாவளவன்*
  
 
   *ஒப்பந்தங்கள் கோரும்போது நேரடியாக முன்வைப்பு தொகை பெறுவது கூடாது என்ற ஆணையை மீறிய செயற்பொறியாளர் கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளார்*
    
 
   *கோவிட் தடுப்பூசி; கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம்: சென்னை மாநகராட்சி*
 
 
 
*✍🏼வேலை வாங்கித்தருவதாக மோசடி; எஸ்.பி.,யிடம் மனு*
 
*கோவை : வேலை வாங்கித்தருவதாக பலரிடம், லட்சக்கணக்கில் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, எஸ்.பி., யிடம் புகார் அளிக்கப்பட்டது.*
 
*ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி, நொச்சிக்குட்டையை சேர்ந்தவர் மாரிச்சாமி. இவர் நேற்று மாவட்ட எஸ்.பி., செல்வ நாகரத்தினத்திடம் அளித்த புகார் மனு:கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் ஆத்மா சிவக்குமார். அவர் தனக்கு அ.தி.மு.க., அமைச்சர்கள் பலரையும் தெரியும் எனவும், அரசு வேலை வாங்கித்தருவதாகவும் கூறினார். அதற்காக, ரூ.10 லட்சம் செலவாகும் என தெரிவித்தார்.பல கட்டங்களாக, எட்டு லட்சம் ரூபாய் வரை வழங்கினேன். ஆனால், அவர் கூறியது போல், வேலை வாங்கித்தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. மாரிச்சாமி உட்பட, 15 பேர் மாவட்ட எஸ்.பி., யிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து ஆத்மா சிவக்குமாரிடம் கேட்க அவரது மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது, உபயோகத்தில் இல்லை எனவும், மற்றொரு எண்ணை தொடர்பு கொண்ட போது, தவறான எண் எனவும் தெரிவிக்கப்பட்டது.*
________________________
 
*✍🏼பெண்ணிடம் அத்துமீற முயன்றவர் மரணம் ; திருவள்ளூர் போலீசார் தொடர் விசாரணை*
 
*திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில், பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற நபர், உயிரிழந்த சம்பவம் குறித்து, மாவட்ட காவல் துறையினர் அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.*
 
*திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த, ஜானகிபுரத்தைச் சேர்ந்தவர் பூங்காவனம். இவர், தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன், மீஞ்சூர் அடுத்த வழுதிகைமேடில், மீன் பண்ணையில் தங்கி வேலை செய்து வருகிறார்.கடந்த, 11ம் தேதி, வீட்டில் தனியாக இருந்த பூங்காவனத்தின் மனைவியிடம், வட மாநிலத்தைச் சேர்ந்த, 30 வயது வாலிபர், தவறாக நடக்க முயன்றார்.*
 
*மனைவியின் கூச்சலை கேட்டு, பூங்காவனம் ஓடிவந்தார். இருவரும் சேர்ந்து விரட்டும்போது, அந்த வாலிபர் தவறி விழுந்ததில் இறந்து விட்டார். இறந்தவரின் உடலை, மீஞ்சூர் போலீசார் கைப்பற்றி, வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின்படி, பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கற்பழிப்பு முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண், இருளர் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், வன்கொடுமை தடுப்பு சட்டமும் சேர்க்கப் பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. அரசு வழக்கறிஞரின் அறிவுரை மற்றும் கருத்துரு பெற்று, மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.*
_______________________
 
*✍🏼தூத்துக்குடியில் ரூ.5 கோடி போதை பொருள் பறிமுதல்*
 
*துாத்துக்குடி--தூத்துக்குடி வண்ணார்தெருவில் டி.ஆர்.ஐ.,எனப்படும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் ஒரு டூவீலரை மறித்து சோதனையிட்டனர். அதில் இருந்த 5 கிலோ கஞ்சா எண்ணெய் ஹசீஷ் போதைபொருளை பறிமுதல் செய்தனர். இதன்மதிப்பு ரூ.5 கோடியாகும். கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து கொண்டு வந்து, கடல் வழியே வெளிநாட்டிற்கு கடத்த திட்டமிட்டிருந்தனர். கடத்தல்காரர்கள் யாரையும் கைது செய்ததாக தகவல் இல்லை.*
 
 *✍🏼எட்டு மாற்றுத் திறனாளிகளிடம் ரூ. 15.34 லட்சம் மோசடி: 2 பேர் கைது*
 
*கடலுார் : மாற்றுத் திறனாளிகளிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 15 லட்சத்து 34 ஆயிரம் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.*
 
*கடலுார் மாவட்டம் புவனகிரி, அழிச்சிகுடியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி ராதாகிருஷ்ணன். இவரது மனைவி மணிமொழி, 32; இவர், கடந்த 14ம் தேதி கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:கணவர் ராதாகிருஷ்ணனுக்கு, சிதம்பரம், மதுராந்தகநல்லுார் மாற்றுத் திறனாளி சரவணன், 33; என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரது நண்பர் கடலுார் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளி அலுவலகத்தில் தற்காலிக டிரைவராக பணிபுரிந்த கடலுார், வரக்கால்பட்டு பரந்தாமன், 35; என்பவரின்அறிமுகம் கிடைத்தது. எனக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக எனது கணவரிடம் கூறினர். இதனை நம்பி கடந்தாண்டு ரூ. 2 .50 லட்சம் வழங்கினோம். ஆனால் வேலை வாங்கித் தரவில்லை. இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறப்பட்டிருந்தது.*
 
*இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து சரவணன், பரந்தாமனை தேடி வந்தனர். குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் விக்ரமன், சைபர் கிரைம் சப் இன்ஸ்பெக்டர் சுதாகர் ஆகியோர் நேற்று கைது செய்து விசாரித்தனர். இதில், ராதாகிருஷ்ணன் மனைவிக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 2.50 லட்சம் மோசடி செய்ததை ஒப்புக் கொண்டனர்.இதேப் போல் கடந்த 2017ல் அரசு வேலை வாங்கித் தருவதாக மாற்றுத் திறனாளிகள் சிதம்பரத்தைச் சேர்ந்த கொளஞ்சிப்பனிடம் ரூ. 3.50 லட்சம், விருத்தாசலம் அய்யாசாமியிடம் ரூ. 3.20 லட்சம், முருகனிடம் ரூ. 5.10 லட்சம், மூன்று சக்கர சைக்கிள் வாங்கித் தருவதாக சிதம்பரம் முத்துக்குமாரசாமி, முத்துலட்சுமியிடம் தலா ரூ. 12 ஆயிரம், பண்ருட்டி புவனேஸ்வரியிடம் ரூ. 20 ஆயிரம், ஸ்ரீமுஷ்ணம் மைதிலியிடம் ரூ. 60 ஆயிரம் என ரூ. 12 லட்சத்து 84 ஆயிரம் மோசடி செய்தது தெரிந்தது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரிந்தது. 8 மாற்றுத் திறனாளிகளிடம் மொத்தம் ரூ. 15 லட்சத்து 34 ஆயிரம் மோசடி செய்தது குறிப்பிடத்தக்கது*.
_______________________
 
*✍🏼வீடு புகுந்து 18 சவரன் நகை கொள்ளை*
 
*திருக்கோவிலுார் : மணலுார்பேட்டை அடுத்த மேலந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி, 44; இவரது மனைவி ஜெயந்தி. இருவரும் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு, கூலி வேலைக்குச் சென்றனர். மதியம் 12:00 மணிக்கு ஜெயந்தி வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய போது, வீட்டின் முன்பக்க கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பிரிட்ஜில் வைத்திருந்த பீரோ சாவியை எடுத்து திறந்து அதில் இருந்த 18 சவரன் நகை, 50 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள்கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.தகவலறிந்த டி.எஸ்.பி., கங்காதரன், இன்ஸ்பெக்டர் பாபு, மணலுார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.*
________________________
 
*இந்தியாவில் குற்றங்கள்*
 
*பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை*
 
*✍🏼ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகளான பிலால் அகமது சோபி, இர்பான் அகமது பாட் ஆகியோரை, சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீசார் நேற்று சுற்றி வளைத்தனர். இருதரப்பினருக்குமான துப்பாக்கிச்சண்டையில், பயங்கரவாதிகள் இருவரும் கொல்லப்பட்டனர். காயமடைந்த இரு போலீசார், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.*
_______________________
 
*உலக நிகழ்வுகள்*
 
*✍🏼இந்திய புகைப்பட செய்தியாளர் ஆப்கன் போர்க்களத்தில் பலி*
 
*காபூல்:இந்தியாவைச் சேர்ந்த புகைப்பட செய்தியாளர் டேனிஷ் சித்திக், 42, ஆப்கனில் ராணுவத்துக்கும், தலிபான்களுக்கும் இடையே நடந்த சண்டையில் கொல்லப்பட்டார்.*
 
*'புலிட்ஸர்' விருது பெற்ற, இந்தியாவைச் சேர்ந்த புகைப்பட செய்தியாளர் டேனிஷ் சித்திக். 'ராய்டர்ஸ்' செய்தி நிறுவனத்திற்காக பணியாற்றி வந்த இவர், ஆப்கன் போர் தொடர்பான புகைப்படங்கள் எடுக்க, அந்நாட்டில் முகாமிட்டு இருந்தார். காந்தகாரில் உள்ள, ஸ்பின் போல்டக் மாவட்டத்தில் தலிபான் - ஆப்கன் படையினர் இடையே பயங்கர சண்டை நடந்தது.*
 
*இங்கு செய்தி சேகரிப்பு மற்றும் புகைப்படம் எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த டேனிஷ் சித்திக், போர் களத்தில் குண்டடிபட்டு பலியானார்.சித்திக் இறந்ததை, ஆப்கனுக்கான இந்திய துாதர் பரீத் உறுதி செய்துள்ளார். அவர் கூறுகையில்,''நெருங்கிய நண்பரும், புகைப்பட செய்தியாளருமான டேனிஷ் சித்திக்கின் மறைவு, கடும் அதிர்ச்சி அளிக்கிறது.இரண்டு வாரங்களுக்கு முன், காபூலில் இருந்து, காந்தகார் கிளம்பியபோது கடைசியாக அவரைச் சந்தித்தேன்,'' என்றார்.*
 
*ரோஹிங்கியா அகதிகள் படும் அவலங்களை படம் பிடித்து, வெளி உலகிற்கு அவற்றை தெரியப்படுத்தியதற்காக, 2018ல், புலிட்ஸர் விருது, டேனிஷ் சித்திக்கிற்கு கிடைத்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி தேவைதெற்காசிய நாடான ஆப்கனிஸ்தானில், பாதுகாப்புபணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ராணுவத்தினர் வாபஸ் பெறப்பட்டு வருகின்றனர். இதையடுத்து ஆப்கன் படைகள் - தலிபான்கள் இடையே பயங்கர போர் மூண்டுள்ளது. ஆப்கனின், 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.*
 
*போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கன் மக்களின் மறுவாழ்வுக்கு, ஐ.நா., நிதி திரட்டி வருகிறது. இது குறித்து, ஐ.நா., மனிதாபிமான குழு தலைவர் ரமீஸ் அலக்பரோவ் கூறியதாவது: ஆப்கானிஸ்தானில் எட்டு கோடி பேருக்கு நிவாரண உதவிகள் தேவைப்படுகின்றன. போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை மீட்டெடுக்க, 9,750 கோடி ரூபாய் நிதி அளிக்கும்படி ஐ.நா., முறையிட்டது. இதில், 3,375 கோடி நிதியை அமெரிக்கா அளித்துள்ளது. மேலும், 6,375 கோடி ரூபாய் தேவை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.*
 
 
*1️🔷🔶கேரளா: கருக்கிடக மாத பூஜைக்கு நடை திறக்கப்பட்ட நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா கட்டுப்பாடு தளர்வுகளால் சபரிமலை கோயிலில் ஐயப்பனை பக்தர்கள் நேரில் சாமி தரிசனம் செய்தனர்*
 
 
*2️🔷🔶நாமக்கல்: நாமக்கல் ராசிபுரம் அருகே மேம்பாலத்தில் கயிறு ஏற்றி வந்த லாரி மீது பைக் மோதி தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். ஆண்டகளூர்கேட் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பைக் தீப்பிடித்து எரிந்ததில் இளைஞர் ஒருவா் உயிரிழந்தார். கயிறு லாரியில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வாகனத்தில் வீரர்கள் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்*
 
 
*3️🔷🔶மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 72.16 அடியிலிரந்து 71.97 அடியாக அதிகரித்துள்ளது. காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 5,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.*
 
*4️🔷🔶தர்மபுரி: ஒகனேக்கல்லுக்கு வரும் காவிரி நீரின் அளவு வினாடிக்கு 5,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 3,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீர் அதிகரிப்பால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளது.*
 
 
*5️🔷🔶ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டத்தில் போதையில் ஒருவரின் காலில் விழுந்த தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். காட்டுப்பாக்கம் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் புவியரசனை சஸ்பெண்ட் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளாா்.*
 
 
*6️🔷🔶டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக அமைக்கப்பட்டுள்ள கிராமத்தில் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ள நிலையில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள அதிகாரி தனிமைப்படுத்திக் கொண்டார்*
 
 
*7️🔷🔶டெல்லி: வடமேற்கு வங்கக்கடலில் வரும் 21-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியில் கேரளா, கர்நாடகாவில் கனமழை பெய்யும் எனவும் கூறியுள்ளது*
 
 
*8️🔷🔶சென்னை: சிபிசிஐடி சம்மன் கொடுக்க சென்ற போது சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளி ஆசிரியைகள் தப்பியோடியதாக கூறப்படுகிறது. கேளம்பாக்கம் பழனி கார்டனில் உள்ள ஆசிரியைகள் 5 பேரின் இல்லங்களில் சம்மன் ஒட்டப்பட்டுள்ளது. பள்ளி மாவணவிகளுக்கு சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை தர உதவியதாக பள்ளி ஆசிரியைகள் 5 பேர் மீது புகார் அளிக்கப்பட்டது.*
 
 
*9️🔷🔶சென்னை: சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் சோமாலியாவைச் சேர்ந்தவரிடம் ரூ.3 லட்சம் பணம் பறித்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவளத்தில் பதுங்கியிருந்த ஈரான் நாட்டைச் சேர்ந்த 4 பேரை ஆயிரம் விளக்கு போலீஸ் கைது செய்தது*
 
 
*1️0️🔷🔶மதுரை: ஈவு விடுப்புக்கேட்டு சமூகவலைத்தளங்களில் கருத்து பதிவிட்ட மதுரை ஆயுதப்படை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். காவலர் அப்துல்காதர் இஸ்மாயிலை சஸ்பெண்ட் செய்து மாநகர காவல் ஆணையர் பிரேம்ஆனந்த் சின்ஹா ஆணையிட்டுள்ளார்*
 
 
*1️1️🔷🔶டெல்லி: வரும் டிசம்பர் மாதம் வரை 65.5 கோடி கொரோனா தடுப்பூசிகளை பெற மத்திய அரசு ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளது. சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறவனங்களுடன் புதிய ஒப்பந்தங்களை மத்திய அரசு இறுதி செய்துள்ளது.*
 
 
 பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை🔶🔷*
 
 
*📌🧿📌மயிலாடுதுறை:* மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த கோரி 10,000 மீனவர்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனர். பூம்புகார், மடவாமேடு, சந்திரபாடி, பழையாறு உள்ளிட்ட 13 கிராம மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். மீனவர்களின் போராட்டத்தால் 750 விசைப்படகு, 5,000 பைபர் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன
 
 
*📌🧿📌நாமக்கல்* ராசிபுரம் அருகே மேம்பாலத்தில் கயிறு ஏற்றி வந்த லாரி மீது பைக் மோதி தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். ஆண்டகளூர்கேட் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பைக் தீப்பிடித்து எரிந்ததில் இளைஞர் ஒருவா் உயிரிழந்தார். கயிறு லாரியில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வாகனத்தில் வீரர்கள் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்
 
 
*📌🧿📌ராணிப்பேட்டை மாவட்டத்தில்* ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டத்தில் போதையில் ஒருவரின் காலில் விழுந்த தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். காட்டுப்பாக்கம் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் புவியரசனை சஸ்பெண்ட் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளாா்.
 
 
*📌🧿📌சென்னை:* சிபிசிஐடி சம்மன் கொடுக்க சென்ற போது சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளி ஆசிரியைகள் தப்பியோடியதாக கூறப்படுகிறது. கேளம்பாக்கம் பழனி கார்டனில் உள்ள ஆசிரியைகள் 5 பேரின் இல்லங்களில் சம்மன் ஒட்டப்பட்டுள்ளது. பள்ளி மாவணவிகளுக்கு சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை தர உதவியதாக பள்ளி ஆசிரியைகள் 5 பேர் மீது புகார் அளிக்கப்பட்டது.
 
 
*📌🧿📌சென்னை* ஆயிரம்விளக்கு பகுதியில் சோமாலியாவைச் சேர்ந்தவரிடம் ரூ.3 லட்சம் பணம் பறித்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவளத்தில் பதுங்கியிருந்த ஈரான் நாட்டைச் சேர்ந்த 4 பேரை ஆயிரம் விளக்கு போலீஸ் கைது செய்தது
 
 
*📌🧿📌மதுரை:* ஈவு விடுப்புக்கேட்டு சமூகவலைத்தளங்களில் கருத்து பதிவிட்ட மதுரை ஆயுதப்படை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். காவலர் அப்துல்காதர் இஸ்மாயிலை சஸ்பெண்ட் செய்து மாநகர காவல் ஆணையர் பிரேம்ஆனந்த் சின்ஹா ஆணையிட்டுள்ளார்
 
 
*📌🧿📌அரியலூர்*  பெரியார் நகரில் 7 ஆயிரம் மரக்கன்று நடும் திட்டத்தை தொடக்கி வைத்தார் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
 
 
*📌🧿📌தென்காசி:* குற்றாலம், செங்கோட்டை, குண்டாறு பகுதியில் தனியார் நீர்விழ்ச்சிகளை மூட ஆட்சியர் உத்தவிட்டுள்ளார். குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிப்பால் தனியார் நீர்விழ்ச்சிகளில் மக்கள் குவிவதால் ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
 
 
*📌🧿📌சிவகங்கை:* கீழடியில் 7-ம் கட்ட அகழ் ஆய்வில் சுடுமண்ணால் ஆன மேலும் ஒரு தொட்டி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. 2 அடி 4 அடி சுற்றளவு கொண்ட கீழ் உறைகிணறு தென்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கீழடியில் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்கனவே பல அடுக்கு கொண்ட உறைகிணறு கண்டுப்பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
*📌🧿📌நீலகிரி மாவட்டத்தில்* வாழைத்தோட்டம் பகுதியில் கூண்டில் அடைத்த ரிவால்டோ யானையை வனப்பகுதியில் விட உத்தரவிடப்பட்டுள்ளது. ரிவால்டோ யானையை சாஃப்ட் ரிலீஸ் முறையில்  வனப்பகுதியில் விட முடிவு செய்துள்ளனர்.
 
 
*🔷🔶நீட் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை நடத்துவது தொற்றுப்பரவலுக்கு வழிவகுக்கும், முடிவை மறுபரிசீலனை செய்க : பிரதமரிடம் ஸ்டாலின் வேண்டுகோள்*
 
 
 
*🔷🔶ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்கள் மனநோய்க்கு ஆளாகின்றனர். எனவே, உடனடியாக பள்ளிகளை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.*
 
*அனைத்து தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு  நிர்வாகிகள், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, ரூ.1 கோடியே 2 லட்சம் நிவாரண நிதியை வழங்கினர்.
 
பின்னர் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் பி.டி.அரசகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் சார்பாக கொரோனா பேரிடர் காலத்தில் அயராது உழைக்கும் முதல்வருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
 
மேலும், தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக முதல்வரை சந்தித்து ரூ.1 கோடியே 2 லட்சம் நிதி வழங்கப்பட்டது. தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் மற்ற பள்ளிகளில் சேர்ப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். 2 ஆண்டுகளாக மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருப்பதால் மனநோய்க்கு ஆளாகியுள்ளனர். எனவே, படிப்படியாக பகுதி நேரமாக பள்ளிகளை திறக்க ஆவன செய்ய வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசின் அங்கீகாரம் பெற்று நடைபெறும் பழைய பள்ளிகளுக்கு பாடம் நடத்த அங்கீகாரம் வழங்க வேண்டும்.
 
மேலும், தனியார் பள்ளிகளில் நடைபெறும் கட்டண முறைகேடுகளை சீர்செய்ய முதல்வர் நடவடிக்கை வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளி கல்வி கட்டணங்களை முறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 
 *1️🔷🔶புதுடெல்லி,*
*கொரோனா 2வது அலையில் நாட்டில் பாதிப்புகள் திடீர் உச்சம் அடைந்தது. இதனை தொடர்ந்து, கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும் எண்ணிக்கை உயர தொடங்கியநிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது*
 
*2️🔷🔶கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே கோவில் குளத்தில் மூழ்கி பலியான 5 பேர் குடும்பத்திற்கு தமிழக அரசின் நிவாரண உதவி தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது*
 
 
 *3️🔷🔶திருப்பதி,*
*திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 12,415 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர் என்றும் ஒரே நாளில் ரூ.2.20 கோடி காணிக்கையாக பெறப்பட்டுள்ளது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.*
 
 
  *4️🔷🔶புதுடெல்லி*
*இந்தியாவில் ஜனவரி 16-ம் தேதி முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுவருகிறது. கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டுவருகின்றன*
 
 
 *5️🔷🔶டோக்கியோ,*
*கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகள், கொரோனா பரவல் காரணமாகக் ஒத்தி போடப்பட்டன. இறுதியாக இன்னும் சில தினங்களில் ஜப்பானின் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவிருக்கின்றன*
 
 
   *6️🔷🔶மேகதாது அணை விவகாரம்; மத்திய நீர்வளத்துறை அமைச்சருடனான சந்திப்பு நம்பிக்கை அளிக்கிறது: திருமாவளவன்*
 
 
   *7️🔷🔶ஒப்பந்தங்கள் கோரும்போது நேரடியாக முன்வைப்பு தொகை பெறுவது கூடாது என்ற ஆணையை மீறிய செயற்பொறியாளர் கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளார்*
 
   *8️🔷🔶கோவிட் தடுப்பூசி; கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம்: சென்னை மாநகராட்சி*
 
 
   *9️🔷🔶மதுரை: ஈவு விடுப்புக்கேட்டு சமூகவலைத்தளங்களில் கருத்து பதிவிட்ட மதுரை ஆயுதப்படை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். காவலர் அப்துல்காதர் இஸ்மாயிலை சஸ்பெண்ட் செய்து மாநகர காவல் ஆணையர் பிரேம்ஆனந்த் சின்ஹா ஆணையிட்டுள்ளார்.*
 
 
   *1️0️🔷🔶மேட்டூர் காவிரியில் ஆடி 1 இல் நீராடும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பியதால் வெறிச்சோடியது காவிரிகரை*
 
 
   *1️1️🔷🔶சீர்காழி: சுருக்குமடி பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்ய அனுமதி, 21 வகையான மீன்பிடி ஒழுங்குமுறை சட்டங்களை அமல்படுத்த கோரி திருமுல்லைவாசலில் 20 மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.*
 
 
   *1️2️🔷🔶சென்னையில் 500 குளங்களில் மழைநீரை சேமித்து, நிலத்தடி நீர்வளத்தை பெருக்க திட்டம் - அமைச்சர் கே.என்.நேரு*
 
   *1️3️🔷🔶தமிழ்நாட்டில் டிசம்பர் இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்*
 
 
   *1️4️🔷🔶ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்குத்தள்ளிய ஸியோமிஉலகளாவிய வர்த்தகத்தில் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது.*
 
 
   *1️5️🔷🔶கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா ராஜிநாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.*
 
 
   *1️6️🔷🔶நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் கூட்டம் நாளை (ஜூலை 18) நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.*
 
 
   *1️7️🔷🔶வலிமை படத்தின் டீசரும் அப்படத்தின் முதல் பாடலும் வரும் ஆகஸ்ட் மாதம்வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.*
 
   *1️8️🔷🔶வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி அசத்தல்*
 
 
 
   *1️9️🔷🔶சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் 65 கோடி தடுப்பூசிகள் பெற மத்திய அரசு ஒப்பந்தம்*
 
 
 *2️0️🔷🔶புதுடெல்லி*
*மாநிலங்களவை எம்.பியும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத்பவார் இன்று புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.*
 
 
  *2️1️🔷🔶கோவையில் பெண் வழக்கறிஞருக்கு வாட்ஸ் அப்பில் தொடர்ந்து ஆபாச புகைப்படங்களை அனுப்பிய நபரை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர்*
  
 
   *2️2️🔷🔶தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது*
 
 
   *2️3️🔷🔶ரூ.16,600 கோடி ஐபிஓ.. பங்குச்சந்தையை கலக்க வரும் பேடிஎம்..!*
 
 
 
*1️🔷🔶19ந் தேதி பிளஸ் 2 ரிசல்ட்: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு*
 
*வரும் 19ந் தேதி காலை 11 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும்*
www.tnresults.nic.in,
 www.dge1.tn.nic.in,
 www.dge2.tn.nic.in,
 www.dge.tn.gov.in
 
 *இணையதளங்களில் பிளஸ் 2 முடிவுகளை பார்க்கலாம்*
 
*மாணவர்கள் பள்ளியில் வழங்கியுள்ள செல்போன் எண்ணுக்கும் மதிப்பெண் விவரங்கள் எஸ்எம்எஸ் ஆக அனுப்பி வைக்கப்படும்*
www.dge.tn.gov.in,
 www.dge.tn.nic.in
 
*இணையதளங்கள் மூலம் மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்*
 
*️22ந் தேதி காலை 11 மணி முதல் மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.*
 
 
*2️🔷🔶அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், அரசின் கொள்கை ரீதியான முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.*
 
 
*3️🔷🔶நீட் தேர்வு என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு*
*நாம் மத்திய அரசின் கீழ் இயங்கும் ஓர் அரசாங்கம், அதனால் இங்கு தேர்வு உண்டு*
*புதுச்சேரி கல்வியமைச்சர் நமச்சிவாயம்*
 
 
*4️🔷🔶நீட் தேர்வு வேண்டாம் என்ற தடைச் சட்டத்தைத் தமிழக அரசு கொண்டுவர வேண்டும்*
*விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை*
 
 
*5️🔷🔶50% மாணவர்களுடன் ஐ.டி.ஐ  திறக்க அனுமதி*
 
 
*6️🔷🔶தொடக்கக் கல்வி - சிறைச்சாலையில் உள்ள பெண் கைதிகளின் குழந்தைகளின் கல்வி நிலை குறித்து விவரங்கள் கோரி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.*
 
 
*7️🔷🔶கட்டணமில்லாமல் எம்.ஃபில். படிப்பு; இலவச விடுதி: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு - விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டிய கடைசி நாள்- 16.08.2021*
 
 
*8️🔷🔶புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளுக்கும் ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும் - புதுச்சேரி பல்கலை சுற்றறிக்கை.*
 
 
*9️🔷🔶ஜூலை 19ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – சண்டிகர் அரசு உத்தரவு*
 
 
*1️0️🔷🔶ஆசிரியர்கள், காப்பாளர்கள் முன் அனுமதி பெறாமல் இயக்குநரகத்துக்கு வரக் கூடாது ஆதி திராவிடர் நலத்துறை இயக்குநர்.*
 
 
*1️1️🔷🔶சென்னை உயர்நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்ததை எதிர்த்து நடிகர் விஜய் மேல்முறையீடு மனுதாக்கல்.*
 
*1️2️🔷🔶சென்னையில் மாஸ்க் அணிபவர்களின் எண்ணிக்கை உயர்வு.*
 
*திறந்த வெளியில்லகுடிசை பகுதியில் 41 % , குடிசை அல்லாத பகுதியில்ல 47 % பேர்  மாஸ்க் அணிகின்றனர்.*
 
*முழுவதும் அடைக்கப்பட்ட இடங்களில் குடிசை பகுதியில் 24%,  குடிசை அல்லா பகுதியில் 33 % பேர் மாஸ்க் அணிகின்றனர்.*
 
 
*1️3️🔷🔶திமுக துணை அமைப்புச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள அன்பகம் கலையை அண்ணா அறிவாலயத்தில் அவரது இருக்கையில் அமர வைத்தார் ஸ்டாலின்.*
 
 
*1️4️🔷🔶கொரோனா 3-வது அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம் என  உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை.*
 
 
*1️5️🔷🔶முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலை திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது.*
*நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எழுப்பப்பட வேண்டிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை.*
 
 
*1️6️🔷🔶கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழகம் உட்பட 6 மாநில முதலமைச்சர்களுடன்  பிரதமர் மோடி நேற்று  ஆலோசனை நடத்தினார்.*
 
 
*1️7️🔷🔶டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழ்நாடு வீரர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.*
 
 
*1️8️🔷🔶பரிசோதனை-பின் தொடர்தல்-சிகிச்சை-தடுப்பூசி' அணுகுமுறையை மையமாகக் கொண்டு நாம் செல்ல வேண்டும் - பிரதமர் மோடி*
 
 
*1️9️🔷🔶தமிழக சட்டமன்ற கட்சி பிரதிநிதிகள் குழுவை தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் வரும் 18ம் தேதி டெல்லி செல்கிறார்.*
*பிரதமரை சந்தித்து மேகதாது விவகாரம் தொடர்பாக வலியுறுத்த உள்ளார்.*
 
*2️0️🔷🔶ஏற்கனவே கோரி  இருந்த ஒரு கோடி கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்*
- *முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்*
 
 
*2️1️🔷🔶தமிழ்நாட்டில் தடுப்பூசிக்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளது.*
*ஆனால் மற்ற  மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டிற்கு தடுப்பூசி ஒதுக்கீடு மிகவும் குறைவாகவே உள்ளது*
- *முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்*
 
 
*2️2️🔷🔶தமிழகத்தில், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் காலியாக உள்ள தலைவர் மற்றும் உறுப்பினர் பணியிடங்களை 4 மாதத்திற்குள் நிரப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு*
 
 
*2️3️🔷🔶மேகதாது அணையை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கூறினார் - டெல்லியில் அமைச்சர் துரைமுருகன் பேட்டி*
 
 
*2️4️🔷🔶தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்திற்கு உறுப்பினர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் அதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.*
 
 
*2️5️🔷🔶கடைக்கோடியில் இருக்கும் ஒரு மனிதருக்கு பாஜக கொடுக்கும் அங்கீகாரம் தான் உண்மையான சமூகநீதி.*
- *தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை*
 
 
*2️6️🔷🔶தடுப்பூசியின் ஒரு டோஸ் உயிரிழப்பு விகிதத்தை 82% குறைக்க முடிந்தது*
*கொரோனா 2 ஆம் அலையின்  போது  95% உயிரிழப்புகளை தடுப்பதில் 2 டோஸ்களும்  வெற்றிகரமாக இருந்தது*
- *சுகாதார உறுப்பினர் டாக்டர் வி.கே. பால்*
 
 
*2️7️🔷🔶’’கொங்குநாடு’’ எனக்குறிப்பிட்டது தட்டச்சுப் பிழையே: சர்ச்சைக்கு எல்.முருகன் முற்றுப்புள்ளி.*                                          
 
*2️8️🔷🔶சுமார் 45 நிமிடத்திற்கும் மேலாக மத்திய அமைச்சருடன் பேசினோம்.*
*மேகதாது அணை - மத்திய அரசு* *துணைபோக கூடாது என வலியுறுத்தினோம்*
*டெல்லியில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர் சந்திப்பு.*
 
 
*2️9️🔷🔶டி-20 உலககோப்பை கிரிக்கெட்*
*ஒரே பிரிவில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன.*
*குரூப்-1ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடம்பெற்றுள்ளன.*
 
*குரூப்-2ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன.*
 
 
*3️0️🔷🔶ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதலில் இறந்த இந்திய புகைப்பட கலைஞர் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.*
*வன்முறை, தீவிரவாதத்தை நாம் எதிர்க்க வேண்டும் என்ற செய்தியை அவரது மரணம் நமக்கு உணர்த்துகிறது என அவர் தெரிவித்துள்ளார்*
 
 
*3️1️🔷🔶காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணைக்கு அனுமதி வழங்கப்படாது: மத்திய அரசு.*
*காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணைக்கு அனுமதி வழங்கப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.*
*தமிழக அனைத்துக்கட்சி குழுவினரிடம் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் உறுதி அளித்துள்ளார்.*
 
 
*3️2️🔷🔶இன்று மேட்டூர் காவிரியாற்றில் பொதுமக்கள் நீராட அனுமதியில்லை.: பொதுப்பணித்துறை*
 
*இன்று ஆடி மாதம் பிறப்பதையொட்டி மேட்டூர் காவிரியாற்றில் பொதுமக்கள் நீராட அனுமதியில்லை என்று பொதுப்பணித்துறை கூறியுள்ளது.*
 
*மேட்டூர் அணை பூங்காவில் சுற்றுலாப்பயணிகளுக்கு இன்றும்,நாளையும் அனுமதியில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.*
 
 
*3️3️🔷🔶தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 19ஆம் தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க உள்ளார்.*
*டெல்லி செல்லும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 19ஆம் தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க உள்ளார்.*
*முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசுகிறார்.*
 
 
*3️4️🔷🔶உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் கோரிக்கை மனு அளித்தவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமாக பயனாளிகளுக்கான உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.*
 
*3️5️🔷🔶குழந்தைகளுக்கு நிமோனியா காய்ச்சலுக்கான தடுப்பூசி தமிழகம் முழுவதும் 23ம் தேதி போடப்படும்*
*நியூமோகோக்கல் தடுப்பூசி*
*பிறந்தவுடன் குழந்தைகளுக்கு 1 மாதம், 3 மாதம் மற்றும் 9 மாதங்களில் 3 தவணையாக அந்த தடுப்பூசி வழங்கப்பட இருக்கிறது.*
*தனியார் மருத்துவமனைகளில் 3 தவணைகள் செலுத்த அதற்கு ரூ.12 ஆயிரம் வரை செலவாகும்.*
*அதனை தற்போது அரசு இலவசமாக வழங்க இருக்கிறது.*
*வரும் 23ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.*
 
 
*3️6️🔷🔶மேகதாது அணை விவகாரத்தில் தமிழகம் சரியான பாதையில் செல்லும் என்ற நம்பிக்கை உள்ளது*
*முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.*
 
 
*3️7️🔷🔶மெரினா கடற்கரையை சுத்தமாக பராமரிப்பதற்கு ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான குழுவை ஏன் அமைக்கக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.*
 
 
*3️8️🔷🔶சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான அரசின் பாதுகாப்பு வழிமுறைகள் தீவிரமாக செயல்படுத்தப்படும் - பெருநகர சென்னை மாநகராட்சி செய்தி வெளியீடு.*
 
 
*3️9️🔷🔶1998 முதல் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு பென்சன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.*
*இந்த திட்டம் 01.04.2003 பின்பு கைவிடப்பட்டு, அந்த தேதிக்கு பின் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு CPS திட்டம் அமல்படுத்தப்பட்டது.*
*மேற்கண்ட கடிதத்தின்படி, கழக பென்சன் ட்ரஸ்ட் நிர்வாகி அவர்களை, கழக பணியாளர்களுக்கு மீண்டும் 1998 பென்சன் திட்டத்தை அனைவருக்கும் (2003 க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கும்) நடைமுறைப்படுத்திட தேவையான முன்மொழிவை அனுப்பிவைக்க போக்குவரத்து துறை துணைசச்செயலாளர் அவர்கள் கேட்டுள்ளார்கள்.*
 
 
*4️0️🔷🔶சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒரு மணி நேரம் நீட்டிப்பு; நாளை முதல் ஞாயிற்றுக் கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படவுள்ளது.*
 
 
   *டெல்லி: நாடு முழுவதும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் கல்லூரி மாணவர் சேர்க்கையை முடித்து வகுப்புகளை தொடங்க வேண்டும் என்று பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனிலோ, ஆஃப்லைனிலோ நடத்தி முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.*
 
 
   *தென்காசி: குற்றாலம், செங்கோட்டை, குண்டாறு பகுதியில் தனியார் நீர்விழ்ச்சிகளை மூட ஆட்சியர் உத்தவிட்டுள்ளார். குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிப்பால் தனியார் நீர்விழ்ச்சிகளில் மக்கள் குவிவதால் ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.*
 
   *அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் காலாவதியான சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை மியாவாக்கி முறையில் குறுங்காடாகப்படும். சுண்ணாம்புக்கல் வெட்டி முடிக்கப்பட்ட 1,000 சுரங்கத்தை மியாவாக்கி காடாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் கூறினார். பெரியார் நகரில் 7 ஆயிரம் மரக்கன்று நடும் திட்டத்தை தொடக்கி வைத்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தகவல் அளித்துள்ளார்.*
 
   *கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரை மத்தியத் தொகுதியில் ஒரு வாக்குச் சாவடியில் உடலுக்கு முடியாமல் ஆம்புலன்ஸில் படுத்த படுக்கையாக வந்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய 86 வயது மூதாட்டியை நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று குடும்பத்தோடு சென்று நலம் விசாரித்து, பாராட்டு தெரிவித்துள்ளார்*

0 Response to "17.07.2021 மாலை - முக்கிய செய்திகள் மற்றும் சுவாரசியமான தகவல்கள் ஒரே பதிவில் "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel