
ஹரியானா மாநிலத்தில் உள்ள அரசு பணியாளர்கள் மற்றும்
ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஒன்றரை வருடங்களாக அகவிலைப்படி உயர்வினை நிறுத்தி
வைத்துள்ள நிலையில், தற்போது அது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை அரசு
வெளியிட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
மத்திய அரசின் 52 லட்சம் ஊழியர்கள் மற்றும் 65
லட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியம் பெறுவோர்களுக்கு கடந்த 2020 ஜனவரி மாதம் முதல்
3 தவணைகளாக அவர்களின் சலுகைகள் அனைத்தும் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த
சலுகைகள் அனைத்தும் வரும் ஜூலை 1ம் தேதி முதல் ஊழியர்களுக்கு செலுத்தப்படும் என்று
மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த
ஊரடங்கினால் ஏற்பட்ட பொருளாதார சரிவினாலும், நோய்த்தொற்று பரவலை
சமாளிக்க அரசு மேற்கொண்ட செலவுகளினாலும் இந்த தொகை நிலுவையில் இருந்தது.
மத்திய அரசின் இந்த முடிவை அனைத்து மாநில அரசுகளும் பின்பற்றியது.
தற்போது, மத்திய அரசு DA மற்றும் DR உயர்வு ஜூலை முதல்
வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில அரசுகளும்
தங்களது ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வினை வழங்க முடிவு செய்துள்ளது. அந்த
வகையில் ஹரியானா மாநில அரசு ஜனவரி 1, 2020, ஜூலை 1, 2020 மற்றும் ஜனவரி 1, 2021 வரை
ஊழியர்களுக்கு செலுத்த வேண்டிய DA உயர்வை ஜூலை 1 முதல் அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது.
பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான DA உயர்வு 17ல் இருந்து
28 ஆக உயர்த்தப்படுவதாக மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் இன்று
அறிவித்துள்ளார். இதனால், சுமார் 2.85 லட்சம் அரசு ஊழியர்களுக்கும், மாநிலத்தின் 2.62
லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலனடைவார்கள். மேலும், இதனால் மாநில
அரசுக்கு மாதம் சுமார் 210 கோடி ரூபாய் கூடுதல் செலவுகள் அதிகரிக்கும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Response to "ஹரியானா மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 28% DA உயர்வு – அறிவிப்பு வெளியீடு!"
Post a Comment