தமிழக அங்கன்வாடியில் 49,000 காலிப்பணியிடங்கள் நிரப்புதல் – அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!

Trending

Breaking News
Loading...

தமிழக அங்கன்வாடியில் 49,000 காலிப்பணியிடங்கள் நிரப்புதல் – அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!

தமிழக அங்கன்வாடியில் 49,000 காலிப்பணியிடங்கள் நிரப்புதல் – அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!

 


தமிழகத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் உள்ள 49,000 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.
 
அமைச்சரின் அறிவிப்பு:
 
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அதிக வாக்குகள் பெற்று ஆட்சியை பிடித்தது. தேர்தல் பற்றிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து அரசு பணியாளர்கள் நியமனம் மற்றும் நலத்திட்ட பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது. திமுக தலைவர் முக ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். அவரது தலைமையில் 33 எம்.எல்.ஏ.,க்கள் தமிழக அரசின் முக்கிய துறை அமைச்சர்களாக பதவியேற்றனர்.
 
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்ததில் இருந்து பல அதிரடி மாற்றங்கள் நடந்து வருகிறது. தமிழக அரசின் துறைகளின் பெயர்கள் மற்றும் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தமிழக அரசின் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பணிகளும் நடந்து வருகின்றது. கடந்த ஆட்சி காலத்தில் நிலுவையில் வைக்கப்பட்டுள்ள பணியிடங்களை நிரப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
 
இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் உள்ள 49,000 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த ஆட்சியில் நிலுவையில் உள்ள திட்டங்களை நிறைவேற்ற ரூ.3,000 கோடி தேவை என்றும் அமைச்சர் அவர்கள் கூறியுள்ளார்.

0 Response to "தமிழக அங்கன்வாடியில் 49,000 காலிப்பணியிடங்கள் நிரப்புதல் – அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு! "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel