அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5% உள்ஒதுக்கீடுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!
தமிழகத்தில்
மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு
எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி
செய்துள்ளது.நீட் தேர்வு வந்த பிறகு அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில்
சேருவது வெகுவாக குறைந்தது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் கூட கட் ஆப்
மதிப்பெண் காரணமாக மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலை இருந்தது. இதனால் நீட்
தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5
சதவித உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
ஆனால் இந்த
சட்டத்திற்கு எதிராக தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தங்களுக்கும் இதே
உள் ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என பல கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள்
தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில்
அரசு தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், 7.5சதவீத
உள்ஒதுக்கீடுக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் மேற்கண்ட மனு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் நாகேஸ்வராவ் மற்றும் அனுருத்தா போஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மட்டும் மருத்துவப் படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்குவது என்பது மாநில அரசின் கொள்கை சார்ந்தது. ஆகவே இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. அதனால் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்கிறோம்,என்று தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ரிட் மனுவை விசாரித்த நீதிபதிகள், முதலில் உயர்நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும் எனக்கூறி வழக்கை முடித்து வைத்துனர்.
0 Response to "அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5% உள்ஒதுக்கீடுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்! "
Post a Comment