
கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சாலையோர வியாபாரிகளுக்கு உரிய நிவாரணம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள 7 சதவீத வட்டி மற்றும் மானியத்துடன் கூடிய கடன் உதவியை வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இவர்கள் அனைவருக்கும் ரூ.10 ஆயிரம் கடனாக வழங்கப்பட்டு, அதை திரும்ப செலுத்துவதற்கு ஒரு ஆண்டு கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடனை முறையாக செலுத்தியவர்களுக்கு தவணை அடிப்படையில், 20 ஆயிரம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் கடனாக கொடுக்கப்படுவதோடு, ஒவ்வொரு காலாண்டிலும் 7 சதவீத வட்டி மானியம் வழங்கப்படுகிறது. மேலும் டிஜிட்டல் முறையில் பண பரிமாற்றத்தை வாடிக்கையாளர்கள் மத்தியில் ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் மாதந்தோறும் ரூ.100 வாடிக்கையாளர்களுக்கு திருப்பி அளிக்கப்படுகிறது.
0 Response to "சாலையோர வியாபாரிகளுக்கு 7% வட்டி மானியத்துடன் கடன் – மத்திய அரசு விளக்கம்! "
Post a Comment