9ம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு ரூ.12,000 மானியம்! அரசு அதிரடி அறிவிப்பு!

Trending

Breaking News
Loading...

9ம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு ரூ.12,000 மானியம்! அரசு அதிரடி அறிவிப்பு!

9ம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு ரூ.12,000 மானியம்! அரசு அதிரடி அறிவிப்பு!

 


இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் வாகனங்கள் அதிகரித்து வருவதால் காற்று மாசு ஏற்படுகிறது. இதனால்
, இயற்கை மற்றும் மனித வளங்களுக்கு மிக பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் தற்போது எலெக்ட்ரிக் பைக்குகளையே விரும்புகின்றனர்.
 
மேலும், காலநிலை மாற்றம் இந்தியாவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், மத்திய அரசும் எலெக்ட்ரிக் பைக்குகளை ஊக்குவிப்பதற்கான நடைமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், அனைத்து முன்னணி இருசக்கர வாகன நிறுவனங்களும் மின்சார மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளன.
 
இந்நிலையில், சுற்றுச்சூழலை காக்கும் பொருட்டு மின்சார வாகன விற்பனை மேம்பட, மாநில அரசுகள் இப்போது தனிப்பட்ட மானியங்களை அறிவிக்கின்றன. மத்திய அரசின் FAME II கொள்கையில் திருத்தப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலங்கள் பரவலான நன்மைகளை அறிவிக்க விரைவாக உள்ளன. குறிப்பாக, மின்சார வாகன கொள்முதல் சம்பந்தப்பட்டது. அத்தகைய மின்சார வாகன திட்டத்தை அறிவிப்பது. சமீபத்திய குஜராத் அரசு தனது மாநில மக்களுக்கு ஒரு அதிரடி திட்டத்தை அறிவித்துள்ளது.
 
அதன்படி, மாநிலத்தில் சுற்றுச்சூழல் காக்க வேண்டும் எனவும், விற்பனையை அதிகரிக்க உதவுவதோடு, மற்ற மாநிலங்களிடையே சுற்றுச்சூழல் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக. ஜாய் இ-பைக்(Joy e-bike) 2021-22 மானிய திட்டத்திற்கான ஒப்புதலை குஜராத் எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, குஜராத்தில் ஜாய்-பைக் மின்சார இரு சக்கர வாகனங்களின் எக்ஸ்-ஷ் விலையில் ஒன்பதாம் வகுப்பு முதல் கல்லூரிகளில் உள்ள மாணவர்கள் ரூ.12 ஆயிரம் வரை மானியம் வழங்குகின்றன.
 
மாநில அரசு ஏற்கெனவே மின்சார வாகன கொள்கை 2021ஐ அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அடுத்த நான்கு ஆண்டுகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மின்சார வாகனங்களை சாலை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என முதல்வர் விஜய் ரூபானி ஏற்கெனவே அறிவித்தார். இது குறித்த கொள்கையை அறிவித்த குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, குஜராத் மாநிலத்தை மாசு இல்லாத மாநிலமாக மாற்ற அரசாங்கம் முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். மின்சார வாகனக் கொள்கை அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும். இந்த கொள்கையின்படி, மாநிலத்தில் மின்சார வாகன உற்பத்தியை மேற்கொள்ள அரசு செயல்படும்.
 
மின்சார பிரிவில், முக்கியமாக இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், இ-பைக்குகள் மற்றும் ரிக்‌ஷாக்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும். மாநிலத்தில் கார்பன் டை ஆக்சைடு அளவை சுமார் 6 மில்லியன் டன்களாக குறைக்கும் திட்டங்களும் உள்ளன என்று மாநில முதல்வர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

0 Response to "9ம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு ரூ.12,000 மானியம்! அரசு அதிரடி அறிவிப்பு!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel