தமிழகத்தில் கல்வி
மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர மிகவும்
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு புதிய இட ஒதுக்கீடு முறையை அறிவித்து தமிழக அரசு ஆணை
வெளியிட்டுள்ளது.
தமிழக
அரசு ஆணை:
தமிழகத்தில்
அரசு கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில்
ஆட்சேர்ப்பு போன்றவற்றிற்கு குறிப்பிட்ட அளவிற்கு அனைத்து வகுப்பினருக்கும்
இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே தமிழகத்தில்
அனைத்து நியமனங்களும் நடக்கிறது. இந்நிலையில், கடந்த 26ம் தேதி முதல் அரசின் இட
ஒதுக்கீட்டில் மாற்றங்கள் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
முன்னதாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சீர்மரபினருக்கு அரசு மொத்தமாக 20% இடங்களை ஒதுக்கி இருந்தது.
இதில் சிறப்பு ஒதுக்கீடு வழங்குவதற்காக தமிழக அரசு புதிய சட்டத்தை இயற்றியது.
புதிய முறையில் சிறப்பு ஒதுக்கீடு அமைக்க சட்ட வல்லுநர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட
துறை அலுவலர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தி தான் முடிவெடுக்க உள்ளதாக முதல்வர் முக
ஸ்டாலின் அறிவித்தார். தற்போது இந்த சிறப்பு இட ஒதுக்கீட்டிற்கான புதிய ஆணையை 26.2.2021 முதல் செயல்படுத்துவதற்கான தமிழக அரசின் ஆணையை முதல்வர்
இன்று வெளியிட்டுள்ளார்.
அதன்படி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கான இட
ஒதுக்கீட்டில் வன்னியர் 10.5%, சீர்மரபினர் 7%, இதர மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 2.5% என்ற புதிய சிறப்பு ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த புதிய சிறப்பு
ஒதுக்கீடு திட்டம் நடப்பு ஆண்டு முதல் அமலுக்கு வருவதாகவும், அதன்படியே, கல்வி மற்றும்
வேலைவாய்ப்புகளில் அரசு நியமனம் இருக்கும் என்றும் அரசின் ஆணையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Response to "வன்னியர்கள், சீர்மரபினர் சிறப்பு ஒதுக்கீடு – தமிழக அரசு ஆணை வெளியீடு!!"
Post a Comment