கொரோனா காலத்தில் இப்படியும் ஒரு நல்லது நடந்துக்கிட்டிருக்கு!

Trending

Breaking News
Loading...

கொரோனா காலத்தில் இப்படியும் ஒரு நல்லது நடந்துக்கிட்டிருக்கு!

கொரோனா காலத்தில் இப்படியும் ஒரு நல்லது நடந்துக்கிட்டிருக்கு!


 


தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 1,864 பள்ளிகள் உள்ளன. இவற்றில் அரசு பள்ளிகள் 712
, அரசு உதவி பெறும் பள்ளிகள் 862 மற்றும் 252 தனியார் பள்ளிகள். கடந்த கல்வி ஆண்டு வரை தனியார் பள்ளியில் மாணவ, மாணவியர் சேர்க்கை அதிகரித்து வந்தத இந்த நிலையில் இந்த கல்வி ஆண்டில் கொரோனா தொற்று, தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 14 வகையான நலத்திட்ட உதவிகள், நீட் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கியத்துவம் என்று அரசு அளித்து வருகிறது.
 
இதுபோன்ற காரணத்தால் அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.‌ தனியார் பள்ளிகளில் இருந்து 19 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ, மாணவியர் அரசு பள்ளியில் புதிதாக சேர்ந்துள்ளனர்.
 
நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் வெறும் 16 சதவீதம் மாணவர்களே சேர்ந்துள்ளனர். கொரோனா தொற்றால் வருவாய் இழந்துள்ள மக்கள் அரசுப் பள்ளிகளைத் தேடி வருகின்றனர்.
 
இந்த மாணவர்களை தக்கவைத்துக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞான கௌரி தெரிவித்துள்ளார.

0 Response to "கொரோனா காலத்தில் இப்படியும் ஒரு நல்லது நடந்துக்கிட்டிருக்கு!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel