அரசு ஊழியர் மருத்துவக் காப்பீட்டுத்திட்ட அரசாணையில் திருத்தம் செய்திட வேண்டும்: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முதல்வருக்கு கோரிக்கை
அரசு ஊழியர் மருத்துவக் காப்பீட்டுத்திட்ட அரசாணையில் திருத்தம் செய்திட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
அதன்பின்பு 2016-2020ஆம் ஆண்டில் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அரசாணை எண்.202 நிதித்துறை நாள்.30.6.2016-ன் படி யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் ஒரு ஊழியருக்கு ரூ.180 வீதம் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்ததுடன் தமிழக அரசின் பங்களிப்பு ஏதுமின்றி ஆசிரியர் – அரசு ஊழியர்களின் பிரிமியத் தொகையிலிருந்தே ரூ.4 லட்சத்திற்கான மருத்துவக்காப்பீடு மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட சில அறுவைச்சிகிச்சைகளுக்கு ரூ.7½ லட்சம் எனவும் உச்சவரம்பு நிர்ணயித்து ஆணையிடப்பட்டது.
அத்துடன் அரியவகை நோய் மற்றும் விதிவிலக்கான சூழ்நிலைகள் தொடர்பாக அதிக செலவுகளை சந்திப்பதற்காக கார்பஸ் நிதியை உருவாக்க ரூ.300 பிரிமியத் தொகையிலிருந்து ரூ.5 பிடித்தம் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது.
மேலும், அரசு ஊழியர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற எங்களது கோரிக்கை ஏற்கப்படாததும் மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இருப்பினும், தமிழ்நாடு அரசு அரசாணை எண்.160 நாள்.29.06.2021-ன் படி புதிய மருத்துவக்காப்பீட்டுத்திட்டம்-2021 ல் கீழ்க்கண்ட ஆசிரியர், அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகளை சேர்த்து முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் உயரிய நோக்கத்தினை நிறைவேற்றும் வகையில் ஆசிரியர்-அரசு ஊழியர்கள் பயன்பெறும் வகையில் திருத்திய புதிய அரசாணை வெளியிட வேண்டுகின்றோம்.
மருத்துவச்சிகிச்சையின் போது ஏற்படும் மருத்துவச் செலவுகள் முழுவதையும் காப்பீட்டு நிறுவனம் வழங்கி பேக்கேஜ் என்று இல்லாமல் தமிழ்நாடு அரசின் உன்னத நோக்கமான 100 விழுக்காடு ‘கட்டணமில்லா சிகிச்சை” என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
காப்பீட்டுத்திட்டம் தொடர்பாக மாவட்ட மாநில அளவில் ஆசிரியர்-அரசு ஊழியர்களின் குறைதீர் கூட்டத்தினை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூட்ட வேண்டும். அக்கூட்டம் நடத்தப்படுவது தொடர்பாக பத்திரிக்கை வாயிலாக ஆசிரியர்-அரசு ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். அத்துடன் குறைதீர் கூட்டங்களுக்கு ஆசிரியர்-அரசு ஊழியர் சங்கப்பிரதிநிதிகள் அழைக்கப்பட வேண்டும்.
0 Response to "அரசு ஊழியர் மருத்துவக் காப்பீட்டுத்திட்ட அரசாணையில் திருத்தம் செய்திட வேண்டும்: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முதல்வருக்கு கோரிக்கை"
Post a Comment