ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதி...!

Trending

Breaking News
Loading...

ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதி...!

ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதி...!


தமிழகத்தில் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில்
, ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது.
 
அதன்படி வரும் 19-ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து தற்போது ஜூலை 31-ஆம் தேதி வரை மேலும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
 
அதன்படி, தொழிற் பயிற்சி பெறும் மாணவர்களின் வேலைவாய்ப்பினைக் கருத்தில் கொண்டு அனைத்து தொழிற் பயிற்சி நிலையங்கள் (ITIS) பயிற்சி and Industrial நிலையங்கள் Schools), தட்டச்சு-சுருக்கெழுத்து ஒரு நேரத்தில் 50 சதவிகித மாணவர்களுடன், சுழற்சி முறையில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.
 
மேலும், பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை, புத்தக விநியோகம் பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து நிர்வாகப் பணிகளும் தொய்வின்றி நடைபெறுவதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள். 

0 Response to "ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதி...!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel