
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மிக குறைந்த தொகையில் தனது வாடிக்கையாளர்களுக்கு
டேட்டா ஆட் ஆன் பேக்கில் 28 ஜிபி டேட்டாவை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
டேட்டா ஆட் ஆன் பேக்:
கொரோனா தொற்று பரவல் காரணமாக பல மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்
அமலில் உள்ளது. இதனால் மக்கள் வெளி இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் சூழ்நிலை உள்ளது. இதனால் இணையத்தின் தேவை
அதிகரித்துள்ளது. மேலும், ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளவும் தொலைபேசி இணைப்பு அவசியமாகியுள்ளது.
மக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்களும் இணையத்தின் மூலம் அதிகரித்துள்ளது.
இதற்காக ரீசார்ஜ் திட்டங்கள் பல உள்ள போதிலும், அவற்றில் நமது இணையம் முடிந்து விட்டால் கூடுதலான டேட்டாவை பெறுவதற்கு பல
ஆட் ஆன் பேக்குகள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜியோவின் ரூ.102 திட்டத்தில் வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு பெறுகிறார்கள். இது தவிர பல சிறப்பு திட்டங்களை ஜியோ
அறிமுகப்படுத்தி உள்ளது. ரூ.127 திட்டத்தில் அன்லிமிடெட் கால்கள் மற்றும் 12 ஜிபி டேட்டா உடன் 15 நாட்கள் வேலிடிட்டியில் கிடைக்கிறது.
ரூ.247 திட்டத்தில்
அன்லிமிடெட் கால்கள் மற்றும் 25 ஜிபி டேட்டா 30 நாட்களுக்கு
வழங்கப்படுகிறது. இந்த டேட்டாவிற்கு குறிப்பிட்ட எந்த வரம்பும் இல்லை. மேலும், ரூ.447 திட்டத்தில்
அன்லிமிடெட் கால்கள் மற்றும் 50 ஜிபி டேட்டா 60 நாட்களுக்கு உண்டான
வேலிடிட்டியில் கிடைக்கிறது. ரூ.597 திட்டத்தில் அன்லிமிடெட் கால்கள் மற்றும் 75 ஜிபி டேட்டா 90 நாட்களுக்கு
கிடைக்கிறது. ரூ.2397 திட்டத்தில்
அன்லிமிடெட் கால்கள் மற்றும் 365 ஜிபி டேட்டாஉடன் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Response to "ரூ.102 க்கு 28 நாட்களுக்கு 28 ஜிபி டேட்டா – ஜியோவின் அதிரடி ஆஃபர்!"
Post a Comment