தமிழகத்தில் மெல்ல குறையும் கொரோனா தொற்று பாதிப்பு – இன்று 1,797 பேருக்கு உறுதி!

Trending

Breaking News
Loading...

தமிழகத்தில் மெல்ல குறையும் கொரோனா தொற்று பாதிப்பு – இன்று 1,797 பேருக்கு உறுதி!

தமிழகத்தில் மெல்ல குறையும் கொரோனா தொற்று பாதிப்பு – இன்று 1,797 பேருக்கு உறுதி!

 


தமிழகத்தில் கடந்த நாட்களை விட இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளதாக சுகாதாரத்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கொரோனா தொற்று:
 
தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு மிக அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தொற்று பாதிப்பை குறைப்பதற்காக தமிழகம் முழுவதும் அதிக கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக அரசு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளித்து வருகிறது. இன்று கடந்த நாட்களை விட தமிழகத்தின் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது சுகாதாரத்துறையின் அறிக்கையின் மூலம் தெரிகிறது.
 
 
அரசின் அதிகாரபூர்வ அறிக்கையின் படி, தமிழகத்தில் இன்று புதிதாக 1,797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 25,94,233 ஆக அதிகரித்துள்ளது. இன்று மாநிலத்தின் 23 மாவட்டங்களில் கொரோனா தொற்றினால் உயிரிழப்புகள் பதிவாகவில்லை. இருப்பினும், 31 பேர் தொற்று பாதிப்பினால் மற்ற மாவட்டங்களில் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 34,610 ஆக உயர்ந்துள்ளது.
 
 
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 1,908 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 25,39,540 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, 20,083 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் தமிழகத்தில் 1,57,339 மாதிரிகள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில் இன்று 198 பேர் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

0 Response to "தமிழகத்தில் மெல்ல குறையும் கொரோனா தொற்று பாதிப்பு – இன்று 1,797 பேருக்கு உறுதி!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel