21.08.2021 தமிழகத்தில் - 1,652 பேருக்கு கொரோனா உறுதி – தமிழக அரசு அறிவிப்பு!

Trending

Breaking News
Loading...

21.08.2021 தமிழகத்தில் - 1,652 பேருக்கு கொரோனா உறுதி – தமிழக அரசு அறிவிப்பு!

21.08.2021 தமிழகத்தில்  - 1,652 பேருக்கு கொரோனா உறுதி – தமிழக அரசு அறிவிப்பு!

 


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று மட்டும்
1652 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது. இன்றைய மொத்த பாதிப்பு நிலவரம் குறித்து பதிவில் காண்போம்.
 
கொரோனா பாதிப்பு:
 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மெல்ல குறைந்து வருகிறது. இருப்பினும், தொடர்ந்து 1,500 க்கும் மேற்பட்டவர்கள் தினசரி பாதிக்கப்படுவதால் ஆகஸ்ட் 23ம் தேதியுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை செப்டம்பர் 6ம் தேதி காலை 6 மணி வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் மேலும், தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
அதன்படி, மட்டும் தமிழகத்தில் 1,652 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் 25லட்சத்து 99 ஆயிரத்து 255 பேர் கொரோனவால் பாதிக்கப்ட்டுள்ளனர். 21.08.2021 பாதிப்பில், 968 பேர் ஆண்கள், 684 பேர் பெண்கள் என்று அறிக்கை நிலவரம் தெரிவிக்கிறது. இன்று தமிழகத்தில் மொத்தம் 234 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை தொற்றினால் பலியானவர்களின் எண்ணிக்கை 34,686 ஆக அதிகரித்துள்ளது.
 
தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் 19,391 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 21.08.2021 மட்டும் 1859 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,45,178 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Response to "21.08.2021 தமிழகத்தில் - 1,652 பேருக்கு கொரோனா உறுதி – தமிழக அரசு அறிவிப்பு!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel