
கொரோனா தொற்றின் தாக்கம்
தமிழகத்தில் குறைந்து வருவதை முன்னிட்டு பல தளர்வுகளும் அளிக்கப்பட்டு வரும்
நிலையில், இன்று முதல் வண்டலூர்
உயிரியல் பூங்கா திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் உத்தரவு:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலையின் அதீத தாக்கம் காரணமாக கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஊரடங்கு காரணமாக அரசு பல தடைகளை அறிவித்தது.
பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்ல கூடாது. பொதுப்போக்குவரத்து இயங்க தடை
விதிக்கப்பட்டது. சுற்றுலா தளங்கள் அனைத்தும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டது. தீவிர
ஊரடங்கு காரணாமாக தொற்றின் பாதிப்பு மெல்ல குறைய தொடங்கியது.
பாதிப்பு குறைந்துள்ள பகுதிகளின்
நிலவரத்தைப் பொறுத்து கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் அரசு தளர்வுகளை படிப்படியாக
அறிவித்து வந்தது. தொடர்ந்து பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் மற்றும்
கட்டுப்பாட்டு மண்டலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் அதிகப்படுத்தியது.
தற்போது செப்டம்பர் 6ம் தேதி வரை
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தினசரி பாதிப்பு தமிழகத்தில் 1600 க்கும் கீழ் குறைந்துள்ளது.
இதனால் தமிழக அரசு தமிழகத்தில்
உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் திறக்கப்படும் என்று அறிவித்தது. இதனால்
தமிழகத்தின் மெரீனா கடற்கரை உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தளங்களும்
திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வண்டலூர் உயிரியல் பூங்கா திறப்பது குறித்து
தனிப்பட்ட அறிவிப்பு ஏதும் வழங்கவில்லை. இதனால் இன்று இணை இயக்குனர் காஞ்சனா
அவர்கள் வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் என்றும்
பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள், பார்வையாளர்கள் கொரோனா விதிமுறைகளை மீறாமல் நடந்து கொள்ள வேண்டும் என்றும்
அறிவித்துள்ளார்.
0 Response to "25.08.2021 இன்று முதல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறப்பு – அரசின் அதிகாரப்பூர்வ உத்தரவு!"
Post a Comment