
இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் அதற்கு மேல் தடுப்பூசிகள்
செலுத்தி கொள்ள கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசிகள் :
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியாக நாடு
முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
கோவாக்சின், கோவிட்ஷீல்டு போன்ற
கொரோனா தடுப்பூசிகள் 18 வயதுக்கு
மேற்பட்டோருக்கு 2 டோஸ்
செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசிகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை
அதிகப்படுத்தி தொற்றிலிருந்து நம்மை காக்கிறது என்று மருத்துவ ஆராய்ச்சிகள்
தெரிவிக்கிறது. எனவே மக்கள் அலட்சியம் காட்டாமல் தேவையற்ற வதந்திகளை நம்பால்
உடனடியாக தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை
அறிவுறுத்தி வருகிறது.
சில நாடுகளில் 2 வெவ்வேறு நிறுவன
தடுப்பூசிகளை போட்டதில் நல்ல பலன் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தது.
ஆனால் கொரோனாவுக்காக 2 தடுப்பூசிகளை
போட்டுக் கொள்ளலாம் என்று கூறுவது சரியான நடவடிக்கை அல்ல, இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டால் ஆபத்து நேரிடலாம் என உலக
சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இந்நிலையில் சௌதியில் பணிபுரியும் கேரளாவை
சேர்ந்த நபர் இரண்டு டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டுள்ளார்.
இந்த வகை தடுப்பூசி நாட்டில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனவே கோவிடஷீல்டு
தடுப்பூசிகளை மறுபடி செலுத்தி கொள்ளலாமா என்று கேள்வி எழுப்பி கேரள
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது 2 தவணை தடுப்பூசிகளை செலுத்தி கொண்டவர்கள் மீண்டும் தடுப்பூசிகள்
செலுத்திக்கொள்ள கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
0 Response to "2 டோஸுக்கு மேல் தடுப்பூசி எடுத்துக் கொள்ள கூடாது – மத்திய அரசு!"
Post a Comment