
தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும்
திட்டத்தில் அர்ச்சகர்கள் நியமனம் குறித்து தமிழக அறநிலையத்துறையினர்
உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளனர்.
தமிழக அரசின் பதில்:
தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம்
அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு
கருத்துக்கள் எழுந்து வருகின்றது. ஒரு புறம் அரசின் இந்த திட்டத்திற்கு ஆதரவும், மறு புறம்
எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இந்நிலையில், சென்னை உயர்நீதி
மன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று
வருகிறது.
ஆகம விதிகள் படித்த அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்று உச்ச
நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தமிழக அரசு குறிப்பிட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்தில்
அர்ச்சகர்களை நியமிப்பதில் எந்த மாறுதலும் இன்றி தற்போதைய நிலையே தொடர வேண்டும் என
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பான தமிழக அறநிலையத்துறையின் பதிலை
ஆகஸ்ட் 25ம் தேதிக்குள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்க
உத்தரவிடப்பட்டிருந்தது.
இன்று அறநிலையத்துறை தனது பதிலை இன்று நீதிமன்றத்தில்
சமர்ப்பித்தது. அதில், காலியிடங்களை நிரப்ப வேண்டுமென்ற உயர்
நீதிமன்ற உத்தரவினை பின்பற்றியே நியமன நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது. அர்ச்சகர்களை
நியமிப்பதற்கான தகுதிகள் குறித்து உயர்மட்ட குழு பரிந்துரை அடிப்படையிலேயே
அடிப்படை கல்வித் தகுதியுடன் ஒரு வருட பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என
விளம்பரம் செய்யப்பட்டுள்ளது என்று தனது பதிலை தெரிவித்துள்ளது. இந்நிலையில், வழக்கு
விசாரணை 4 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
0 Response to "தமிழகத்தில் நீதிமன்ற உத்தரவின் படியே அர்ச்சகர்கள் நியமனம் – அறநிலையத்துறை தகவல்! "
Post a Comment