சென்னை: சென்னை கலெக்டர் விஜயராணி
வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்
(தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியருக்கு
குறுகிய கால (1 முதல் 6 மாதம்) திறன் மேம்பாட்டு பயிற்சிகள் கட்டணமில்லாமல் அளிக்கப்படவுள்ளது.
மாணவர்களின் தகுதிக்கேற்ப ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல மாணவ, மாணவியர்கள்
தங்களுக்கு தேவைப்படும் தொழில் நுட்ப பயிற்சியினை மேற்கொள்ள, தாட்கோவின் http://training.tahdco.com என்ற இணையதளத்தின் வழியே பதிவேற்றம் செய்து தாங்கள் விரும்பும் பயிற்சியினை
கட்டணமின்றி பயிலலாம். பயிற்சி பெறும் மாணவ, மாணவியர்களுக்கு
போக்குவரத்து படிகள் வழங்கப்படும்.
இப்பயிற்சியின் முடிவில் தேர்ச்சி
பெற்ற மாணவர்களுக்கு எஸ்.சி.வி.டி,
எஸ்.எஸ்.சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டு பல்வேறு தனியார்
நிறுவனங்களில் வேலை வாய்ப்பிற்கும் வழிவகை செய்யப்படும். மேலும், தாட்கோ மூலம்
திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்கள் தாங்கள்
பயின்ற பயிற்சி தொடர்பாக சுயதொழில் தொடங்கிட, http://application.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினைப் பதிவு செய்து தொழில்முனைவோர் திட்டம்
மற்றும் இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் பயன்
பெறலாம். அரசு மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்க ஆவன செய்யப்படும். சென்னை
மாவட்ட ஆதிதிராவிட, பழங்குடியினர் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Response to "ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு பயிற்சி: சென்னை கலெக்டர் தகவல்..!"
Post a Comment