சம்பளம் பெறும் ஊழியர்கள் இறக்க நேர்ந்தால் வருங்காலத்தில் பிஎப் பணம் பெற ஒரு நாமினியை நியமனம் செய்ய வேண்டும். தற்போது ஆன்லைன் மூலம் நாமினியை தேர்வு நியமனம் செய்யும் புதிய வழிமுறையை வருங்கால வைப்பு நிதி வெளியிட்டுள்ளது.
பிஎப் தொகை:
பணிபுரியும் ஊழியர்களின் மாத சம்பளத்தில் இருந்து 12 சதவீதம் வரை பிடித்தம் செய்யப்படுகிறது. அவை வருங்கால வைப்பு நிதியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதனுடன் நிறுவனங்களும் குறிப்பிட்ட தொகையை வரவு வைத்து மொத்த தொகையை அவர்கள் ஓய்வு பெறும் போது வழங்கபடுகிறது. இந்த தொகை ஊழியர்களின் ஓய்வு காலத்தில் பேருதவியாக இருக்கிறது. வயது முதிர்ந்த காலத்தில் மற்றவர்களின் உதவி இன்றி தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது.
சம்பளம் பெறும்நபர் இறந்தால், வருங்கால வைப்பு நிதி பணம் அவரின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது. இதற்காக, சம்பளதாரர் குடும்பத்தில் ஒருவரை ஒரு நாமினியாக நியமனம் செய்ய வேண்டும். அப்போது தான் சம்பளதாரர் இறந்த பிறகு பிஎப் தொகை எளிதில் கிடைக்கும். தற்போது ஆன்லைன் மூலம் நாமினியை தேர்வு நியமனம் செய்யும் புதிய வருங்கால வைப்பு நிதி வெளியிட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் நாமினி நியமனம் செய்யும் முறைகள் :
- EPFO என்ற இணையப்பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில் உங்களுக்கான PASSWORD டை உள்ளீட்டு உள் செல்ல வேண்டும்.
- முகப்பு திரையில் இ-நியமனம் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
- அதில் உங்கள் விவரங்கள் மற்றும் நாமினியின் விவரங்கை பதிவிட்டு SAVE கொடுக்கவும். ஒன்றுக்கு மேற்பட்ட நாமினியை நியமனம் செய்யலாம்.
- நாமினியை நியமனம் என்பதை கிளிக் செய்து, OTP ஐ உருவாக்க இ-சைன் என்பதைக் கிளிக் செய்யவும்.
- அதன் பிறகு மொபைல் எண்ணில் OTP வரும். அதை உள்ளீடு செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
0 Response to "EPFO பயனர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மூலம் நாமினி நியமனம்! வழிமுறைகள் இதோ! "
Post a Comment