
இந்தியாவில் கிரேடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி பணம்
செலுத்தியும் முறையில் ரிசர்வ் வங்கி புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இந்த
நடைமுறையில் கார்டு விவரங்கள் பாதுகாக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி
தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி :
தற்போதைய நவீன தொழில்நுட்ப காலத்தில் பணம் பரிமாற்றம் பெருமளவு ஆன்லைன்
மூலம் நடைபெற்று வருகிறது. ஏடிஎம் அல்லது கிரெடிட் கார்டு பயன்படுத்தி பணம்
செலுத்துகின்றனர். பேடிஎம், கூகுள் பே, போன்பே உள்ளிட்ட செயலிகள் உங்களுடைய கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு
ஆகியவற்றின் விவரங்களை சேமித்து வைத்துக் கொள்ளலாம். அதன் மூலம் பணம் செலுத்தும்
போது சிவிவி எண் மற்றும் ஓடிபி ஆகியவற்றை கொடுத்தால் எளிதாக உங்களுடைய பணத்தை
செலுத்தி விடலாம்.
தற்போது இந்த நடைமுறையில் ரிசர்வ் வங்கி புதிய நடைமுறைகளை
அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இனிமேல் பேடிஎம்,கூகுள் பே, போன் பே, நெட்ஃபிளிக்ஸ் உள்ளிட்ட எந்த
தளத்திலும் உங்களுடைய கிரெடிட் அல்லது டெபிட் கார்டு விவரங்களை ஸ்டோர் செய்து
வைக்க முடியாது. ஆகவே ஒவ்வொரு முறை நீங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு
ஆகியவற்றை பயன்படுத்தும் போது உங்களுடைய கார்டின் 16 இலக்க எண், செல்லுபடியாகும் கடைசி வருடம் மற்றும்
மாதம் ஆகிய விவரத்தை தர வேண்டும்.
அதன் பின்னர் மீண்டும் சிவிவி எண் மற்றும் ஓடிபி ஆகியவற்றை கொடுத்து பணத்தை
செலுத்த வேண்டும். இந்த முறையின் மூலம் உங்களுடைய கார்டு விவரங்கள்
பாதுகாக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் இந்த நடைமுறை
அனைத்து இ-சேவை நிறுவன செயலிகளுக்கு பொருந்தும் வகையில் இருக்கும். டெபிட் கார்டு
எண்கள் 16 இலக்கத்தில் இருக்கும். அதேபோல் சிவிவி எண் 3 இலக்கத்தில் இருக்கும். சிவிவி எண்ணை
நம்மால் எளிதில் நியாபகத்தில் வைத்து கொள்ள முடியும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Response to "ஆன்லைன் ஷாப்பிங் செய்வோர் கவனத்திற்கு – RBI முக்கிய அறிவிப்பு! "
Post a Comment