
தற்போதுள்ள கொரோனா சூழலுக்கு மத்தியிலும் இந்தியாவின் சில முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் (IT) வழக்கமான புதிய பணியமர்த்தலை மேற்கொண்டு வருகிறது. அதிலும் படித்து முடித்துள்ள புதியவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.
புதிய வேலைவாய்ப்புகள்
தற்போதுள்ள சூழலில் அனுபவம் வாய்ந்த திறமைகள் விலை உயர்ந்தவர்களாகவும், மூத்த ஊழியர்களிடையே எப்போதும் இல்லாத அளவிற்கு உத்வேகம் அதிகமாக இருப்பதால், IT நிறுவனங்கள் முன்பை விட புதிய பணியமர்த்தலை அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டில் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் அதன் வளாகங்களில் இருந்து சாதனை எண்ணிக்கையிலான புதியவர்களை பணியமர்த்துகின்றன.
இந்த பணிகள் ஏற்கனவே 90% துவங்கியுள்ள நிலையில், விப்ரோ, இன்போசிஸ், HCL, மற்றும் காக்னிசன்ட் உள்ளிட்ட உயர்மட்ட IT சேவை நிறுவனங்கள் இந்த நிதியாண்டில் சுமார் 150,000 புதியவர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளன. அதன் கீழ் TCS நிறுவனம் சுமார் 40,000 புதியவர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ள நிலையில், இன்போசிஸ் சுமார் 35,000 பேரை வேலைக்கு அமர்த்த எதிர்பார்த்துள்ளது.
மேலும் இந்த நிதியாண்டில் 30,000 ஊழியர்களை அதன் வளாகத்திற்கு பணியமர்த்த விப்ரோ திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் காக்னிசன்ட் 30,000 புதிய பணியாளர்களை எதிர்பார்த்துள்ளது. தவிர அக்சென்ச்சர் மற்றும் கேப்ஜெமினி போன்ற உலகளாவிய IT நிறுவனங்களும் இந்த ஆண்டு 2 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய வேலை வாய்ப்புகளை அறிவிக்கும் என தொழில்துறை மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளும் இந்த புதிய பணியமர்த்தல் ஏற்றத்தால் பயனடைகிறது.
மேலும் 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் 30,000 புதிய பட்டதாரிகளுக்கு 45,000 வேலை வாய்ப்பு சலுகைகளை வழங்கும்போது, 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் 45,000 புதிய பட்டதாரிகளுக்கு வாய்ப்புகளை வழங்குவதாக தகவல் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசன்ட் கூறியுள்ளது. அதன் கீழ் மாணவர்களுக்கு எங்களுடன் ஒரு தொழிலை உருவாக்குவதற்கான வாய்ப்பை அளிக்க கல்வி வளாகங்கள் உதவுவதாக காக்னிசன்ட் நிறுவனத்தின் மனிதவள மூத்த துணைத் தலைவர் சாந்தனு ஜா கூறியுள்ளார்.
வெல்ஸ் பார்கோ நிறுவனம் இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் உள்ள வளாகங்களில்
கடந்த ஆண்டை விட புதிய ஆட்சேர்ப்புகளை இரண்டு மடங்காக
அதிகரித்துள்ளது. இது இந்தியா
முழுவதிலும் உள்ள பொறியியல் கல்லூரிகள் மற்றும்
வணிகப் பள்ளிகளில் இருந்து ஆட்களை
பணியமர்த்துவதாக HR தள தலைவர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
0 Response to " TCS, Wipro, Infosys & HCL நிறுவனங்களில் 1,50,000 பேருக்கு வேலைவாய்ப்பு – முழு விபரம் இதோ!"
Post a Comment