உயர் நீதிமன்ற உத்தரவினால் பெறப்படும் அபராத /பங்களிப்புத் தொகை - அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு சீரமைக்க உத்தரவு.

Trending

Breaking News
Loading...

உயர் நீதிமன்ற உத்தரவினால் பெறப்படும் அபராத /பங்களிப்புத் தொகை - அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு சீரமைக்க உத்தரவு.

உயர் நீதிமன்ற உத்தரவினால் பெறப்படும் அபராத /பங்களிப்புத் தொகை - அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு சீரமைக்க உத்தரவு.



பள்ளிக் கல்வி – உயர் நீதிமன்ற உத்தரவினால் பெறப்படும் அபராத /பங்களிப்புத் தொகை  - அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு சீரமைக்க ஆணை பிறப்பித்தல் – அத்தொகையின்  செலவினம் சார்பாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!
 
 
பல்வேறு குற்ற / பிற வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரைக் கிளை ஆணைகளில் பள்ளிகளின் சீரமைப்பு பணிகளுக்காக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் வங்கிக் கணக்கிற்கு மனுதாரர்களின் அபராத / பங்களிப்பு தொகை செலுத்த ஆணைகள் வழங்கப்பட்டு மேற்சொன்ன தொகைகள் தொடர்புடைய முதன்மைக் கல்வி அலுவலரின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. அவ்வாறு பெறப்படும் தொகையை கொண்டு கீழ்காணுமாறு அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு மிக மிக அவசியமான பணிகளுக்கு செலவிட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. 
 
மிகவும் பழுதடைந்த அல்லது பெண்கள் கழிப்பிடம் இல்லாத பள்ளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும். 
 
கழிவறைகளை சீர்படுத்த மற்றும் தூய்மை படுத்த முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்.
 
இன்றியமையாத குடிநீர் குழாய் இணைப்பு வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்.
 
கழிவுநீர் இணைப்பு சரிசெய்தல் , மிக குறைந்த செலவினம் உள்ள மின்சாரம் , கட்டடம் , வளாக தூய்மைப்பணிகள் மற்றும் சுற்றுச்சுவர்களின் ஏற்படும் பழுது மற்றும் பராமரிப்பு செலவுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்.

0 Response to "உயர் நீதிமன்ற உத்தரவினால் பெறப்படும் அபராத /பங்களிப்புத் தொகை - அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு சீரமைக்க உத்தரவு."

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel