2021-2022 ஆம் ஆண்டுக்கான மத்திய திட்ட ஏற்பளிப்புக் குழு கூட்ட
நடவடிக்கை ஒப்புதலின் படி , அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8
ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு புத்தகமில்லா தினம் என்ற செயல்பாட்டினை நடத்த அனுமதித்து
, அதற்காக மாணவர் ஒருவருக்கு ரூபாய் 10 / - வீதம் 1263550 மாணவர்களுக்கு மொத்தம் ரூ
.126.355 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இச்செயல்பாட்டின் முக்கிய நோக்கம்
:
இத்திட்டத்தின்
முக்கிய குறிக்கோள் மாணவர்களின் மன அழுத்தத்தை நீக்குவதும் , மகிழ்ச்சியான சூழலை
ஏற்படுத்தி மாணவர்களின் ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படையான உடல் நலம் மற்றும்
மனவளத்தினை மேம்படுத்துவதும் ஆகும் . மாணவர்கள் தங்கள் தனித்திறன்களை முழு
சுதந்திரத்துடன் வெளிப்படுத்தவும் , மன அழுத்தமில்லாத சூழ்நிலையில் அனுபவங்களின்
மூலம் கற்றுக் கொள்வதற்கும் , உடல் , மனம் மற்றும் அறிவுசார் திறன்களை
வளர்ப்பதற்கான வாய்ப்பாகவும் இது அமையும் . அனைத்து அரசு / அரசு உதவி பெறும்
பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் புத்தகங்களை எடுத்துச்
செல்லும் சுமையை குறைத்து , வாழ்க்கைக்கான கல்வியை அனுபவங்களின் மூலம் மாணவர்கள்
பெற்றிடும் வகையிலான செயல்பாடுகளை பள்ளிகளில் மேற்கொள்வதே இதன் நோக்கமாகும்.
பாரம்பரிய
கலைகளை பற்றிய அறிவினை மாணவர்களிடையே புகுத்துவதன் மூலம் அழிந்து வரும் பாரம்பரிய
கலைகளை இன்னும் பல நூற்றாண்டுகள் பாதுகாக்க முடியும் . மேலும் விவசாயம் சார்ந்த
அறிவுடன் , மூலிகைத் தாவரங்கள் வளர்ப்பதன் அவசியத்தையும் , மாடித் தோட்டங்களின்
தேவைகளையும் மாணவர்கள் அறிய செய்தல் இன்றைய காலத்தின் அவசியமாக உள்ளது.
0 Response to "அரசுப் பள்ளிகளில் புத்தகம் இல்லா தினம் கொண்டாட உத்தரவு."
Post a Comment