தலைக்கு மேல் ,
நான் தூக்கி கொஞ்சிய ,
என் தங்க மகன்,
என் தலைக்கு மேல் ,
வளர்ந்து நிற்கிறான் ,
ஒரு பயம் எனக்கு ,
எப்போதாவது ஒருநாள் ,
என் விசயத்தில் தலையிடாதே ,
என்று சொல்லிவிடுவானோ என்று ,
மகனே மறந்தும்,
அப்படி சொல்லிவிடாதே ,
மரணித்து போய்விடுவேன் ,
சின்ன வயதில்,
நீ அடிக்கடி கேள்விகேட்ப்பாய் ,
நான் சலிக்காமல் பதில் சொல்வேன் ,
என் வயதான காலத்தில்,
நானும் உன்னிடம் குழந்தை போல்,
வினா எழுப்பக்கூடும் ,
கத்தாதே வாயை மூடு ,
என்று சொல்லிவிடாதே ,
வலி தாங்க முடியாத பாவி நான் ,
வீடெல்லாம் நீ இறைத்து வைத்த ,
சோற்றுப் பருக்கையை ,
என் விரல்களால் கூட்டி அள்ளுவேன்
என் முதிர் வயதில் ,
என் வாய்க்கொண்டு செல்லும்,
உணவு தட்டி தரையில் விழக்கூடும் ,
தவறியும் என்னை திட்டாதே ,
தாங்க முடியாது என்னால் ,
என் சிறுநீர் பை ,
பலம் இழந்திருக்கக்கூடும் ,
சில இடங்களில் ,
சிறுநீர் சிந்தியிருக்க கூடும் ,
இச்.......சீ என்று முகம் சுழிக்காதே ,
என் முந்தானையில் ,
உன் சிறுநீர் வாசம் ,
இன்னும் மறையவேயில்லை,
மயானம் நடந்து போக,
திராணி இருக்கும்போதே,
நான் இறந்துவிடவேண்டும் ,
மறந்தும் முதியோர் இல்லத்தில் ,
என்னை மூழ்கடித்துவிடாதே ,
ஒரு வருடம் ,
உனக்கு ரத்ததானம் செய்தவள் நான்
என் ரத்தத்தை,
பாலாக்கி பருக செய்தவள் நான்,
பரதேசியாய்
என்னை பரிதவிக்க விட்டுவிடாதே ,
நான் இறப்பதற்குள் ,
ஒரு முறையாவது ,
உன் மடியில் என்னை உறங்க வை ,
என் உயிர் பிரியும் நேரம் ,
நீ என் பக்கத்தில் இரு ,
கரம் கூப்பி கேட்கிறேன்
இதை நான் எழுதுவது ஏன் தெரியுமா ?
இதை படித்து என் எண்ணம் அறிவாய்
என்னை அறிவாய்
என்னை நேசிப்பாய்
என்ற நம்பிக்கையில் அல்ல
ஒவ்வொரு தாயின்,
உணர்வும் இதுதான்,
என்பதை நீ உணர வேண்டும் ,
பெண்மையை நீ மதிக்க வேண்டும்,
இதை படித்து நீ அழுவாய் ,
என்று எனக்குத் தெரியும் ,
அழாதே பெண்மையை மதி ,
அதுபோதும் நன்றி மகனே,
0 Response to "தாய் மகனுக்கு எழுதிய டைரிக் குறிப்பு"
Post a Comment