தாய் மகனுக்கு எழுதிய டைரிக் குறிப்பு

Trending

Breaking News
Loading...

தாய் மகனுக்கு எழுதிய டைரிக் குறிப்பு

தாய் மகனுக்கு  எழுதிய டைரிக் குறிப்பு

 



தலைக்கு மேல் ,

நான் தூக்கி கொஞ்சிய ,

என் தங்க மகன்,

என் தலைக்கு மேல் ,

வளர்ந்து நிற்கிறான் ,

ஒரு பயம் எனக்கு ,

எப்போதாவது ஒருநாள் ,

என் விசயத்தில் தலையிடாதே ,

என்று சொல்லிவிடுவானோ என்று ,

மகனே மறந்தும்,

அப்படி சொல்லிவிடாதே ,

மரணித்து போய்விடுவேன் ,

சின்ன வயதில்,

நீ அடிக்கடி கேள்விகேட்ப்பாய் ,

நான் சலிக்காமல் பதில் சொல்வேன் ,

என் வயதான காலத்தில்,

நானும் உன்னிடம் குழந்தை போல்,

வினா எழுப்பக்கூடும் ,

கத்தாதே வாயை மூடு ,

என்று சொல்லிவிடாதே ,

வலி தாங்க முடியாத பாவி நான் ,

வீடெல்லாம் நீ இறைத்து வைத்த ,

சோற்றுப் பருக்கையை ,

என் விரல்களால் கூட்டி அள்ளுவேன்

என் முதிர் வயதில் ,

என் வாய்க்கொண்டு செல்லும்,

உணவு தட்டி தரையில் விழக்கூடும் ,

தவறியும் என்னை திட்டாதே ,

தாங்க முடியாது என்னால் ,

என் சிறுநீர் பை ,

பலம் இழந்திருக்கக்கூடும் ,

சில இடங்களில் ,

சிறுநீர் சிந்தியிருக்க கூடும் ,

இச்.......சீ என்று முகம் சுழிக்காதே ,

என் முந்தானையில் ,

உன் சிறுநீர் வாசம் ,

இன்னும் மறையவேயில்லை,

மயானம் நடந்து போக,

திராணி இருக்கும்போதே,

நான் இறந்துவிடவேண்டும் ,

மறந்தும் முதியோர் இல்லத்தில் ,

என்னை மூழ்கடித்துவிடாதே ,

ஒரு வருடம் ,

உனக்கு ரத்ததானம் செய்தவள் நான்

என் ரத்தத்தை,

பாலாக்கி பருக செய்தவள் நான்,

பரதேசியாய்

என்னை பரிதவிக்க விட்டுவிடாதே ,

நான் இறப்பதற்குள் ,

ஒரு முறையாவது ,

உன் மடியில் என்னை உறங்க வை ,

என் உயிர் பிரியும் நேரம் ,

நீ என் பக்கத்தில் இரு ,

கரம் கூப்பி கேட்கிறேன்

இதை நான் எழுதுவது ஏன் தெரியுமா ?

இதை படித்து என் எண்ணம் அறிவாய்

என்னை அறிவாய்

என்னை நேசிப்பாய்

என்ற நம்பிக்கையில் அல்ல

ஒவ்வொரு தாயின்,

உணர்வும் இதுதான்,

என்பதை நீ உணர வேண்டும் ,

பெண்மையை நீ மதிக்க வேண்டும்,

இதை படித்து நீ அழுவாய் ,

என்று எனக்குத் தெரியும் ,

அழாதே பெண்மையை மதி ,

அதுபோதும் நன்றி மகனே,

 

************************************

0 Response to "தாய் மகனுக்கு எழுதிய டைரிக் குறிப்பு"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel