போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித் தகுதித் தேர்வினை எழுதுவதிலிருந்து மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு விலக்களித்து அரசாணை வெளியீடு.

ஆணை :
மேலே படிக்கப்பட்ட அரசாணை ( நிலை ) எண் .133 , மனிதவள மேலாண்மை ( எம்
) துறை , நாள் 01.12.2021 - ல் அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும்
தமிழக இளைஞர்கள் பெருமளவில் நியமனம் பெற ஏதுவாக , மாநிலத்தின் தெரிவு முகமைகளால்
நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி தகுதித்தாள்
கட்டாயமாக்கப்பட்டு ஆணைகள் வெளியிடப்பட்டன.
அவ்வரசாணைக்கிணங்க , தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ,
போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித் தாளினை கட்டாயத்தாளாக இணைத்து , அதற்கேற்ப
அறிவிக்கைகளை வெளியிட்டு தெரிவு நடவடிக்கையினை மேற்கொண்டுவருகிறது.
0 Response to "போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித் தகுதித் தேர்வினை எழுதுவதிலிருந்து மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு விலக்களித்து அரசாணை வெளியீடு. "
Post a Comment