கோபுர தரிசனம்
இன்று ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி.
அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோவில்.
தல விருட்சம்: – மருதமரம்
பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்
சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டது என்பதைக் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது.
மூலவா் கற்பகவிநாயகா் 6 அடி உயரத்தில் வலம்புரி நிலையில் காணப்படுகிறார்.
இங்கு 3 லிங்கங்கள் – திருவீசா், மருதீசா் மற்றும் செஞ்சதீஸ்வரா், 3 பெண் தெய்வங்கள் – சிவகாமி அம்மன், வடமலா் மங்கையம்மன், சௌந்திரநாயகி அம்மன் ஒரு சேர அமா்ந்து பக்தா்களுக்கு தரிசனம் கொடுக்கின்றனா். இது வேறு எந்த கோவிலும் இல்லாத சிறப்பு அம்சமாகும்.
முருகனுக்கு இருப்பதை போல் விநாயகருக்கும் ஆறுபடை வீடுகள் உள்ளது. இதில் பிள்ளையார்பட்டி ஐந்தாம் படை வீடாக கருதப்படுகிறது.
பிள்ளையார்பட்டி.
சிவகங்கை மாவட்டம்.
0 Response to "கோபுர தரிசனம் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோவில்"
Post a Comment