கொரானாவின் நோய்த்தொற்று கோலோச்சத்தின் உச்சத்தில் உலகமே
விழிபிதுங்கி இருக்கின்றது. பலவற்றை அடித்து நொறுக்கிய மனித சாகசம் அடங்கிக்
கிடக்கின்றது. என்ன செய்வது என்று தெரியாமலேயே மருத்துவத்துறை முதற்கொண்டு
ஸ்தம்பித்து,
தினம் ஒரு சோதனை என்று இந்நோய்க்கான மருந்து கண்டறிதலில் கவனம்
செலுத்திக் கொண்டே வருகின்றது.
இந்தச்சூழலில்
தொழில்நுட்ப அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய
உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அதன்படி இதர அலுவலக ஊழியர்கள் முதற்கொண்டு அனைவரும்
தன்னுடைய பணியைச் செய்து கொண்டு வருகின்றனர். இப்படியே பலத்துறைகளின்
செயல்பாடுகளும் உள்ளன. பள்ளிகளும் கல்வி நிறுவனங்களும் எப்போது திறப்பது என்று
இன்னும் முடிவு செய்யப்படாமலேயே நாட்கள் நகர்கின்றன.
இத்தகையச் சூழலில்
என்ன செய்வது என்று திக்குமுக்காடிய
காலகட்டத்தில் பல்வேறு செயலிகளின்
வழியாக இலக்கியக் கூட்டங்கள்,
கருத்தரங்கங்கள் என்று முதலில் ஆரம்பிக்கப்பட்டன. அதன் இன்னொரு
பகுதியாக இணைய வழித் திறனறிதல் போட்டியும் நடத்தப்பட்டன. நடத்தப்பட்டு கொண்டு
வருகின்றன. பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள், பாலிடெக்னிக் என்று பலரும் இவற்றில்
ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பல்வேறு கல்லூரி பல்கலைக்கழகங்கள் கல்வி
நிறுவனங்கள் நடத்திய இணையவழிக் கருத்தரங்கங்கள் திறனறிதல் தேர்வு எனப் பலவற்றில்
நானும் என் துணைவியாரும் ஆர்வத்துடன்
கலந்துகொண்டோம். பள்ளி, கல்லூரி,
பல்கலைக்கழக நாட்களில் படித்த பாடங்களை இத்தகைய கருத்தரங்கங்கள் ,
திறனறிதல் தேர்வுகள்
மீட்டுருவாக்கம் செய்தன.
இவ்வற்றில்
கலந்துகொண்டதன் விளைவாக பல்வேறு சான்றிதழைப் பெற்றோம். அந்த வகையில் நான் மட்டுமே இதுவரை 225 சான்றிதழ்களைப் பெற்றேன். இத்தகு பயணத்தைத் தொடங்கிய அனைத்து
கல்வி நிறுவனங்களுக்கு நன்றி. இதனை
உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி வணக்கம்.
மனமார்ந்த வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி நண்பரே
DeleteSuper
ReplyDelete