அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வாங்குவதற்கும், மூன்றாவது அலையை எதிர்கொள்ள
முன்னேற்பாடு நடவடிக்கைகளுக்கு 100 கோடி நிதி ஒதுக்கீடு - தமிழக முதலமைச்சர்
அறிவிப்பு - செய்தி வெளியீடு எண்: 344 - நாள்: 29.06.2021
முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து, கொரோனா நோய்
சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்குத் தேவைப்படும் திரவ மருத்துவ ஆக்சிஜனை
வாங்குவதற்காகவும், இந்தத் தொற்றின் மூன்றாம் அலை தொடர்பான முன்னேற்பாடு
நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆணை
மக்கள் கை அனைவரும் தமிழக அரசின் கொரோனா தடுப்பு
கொடுக்கின்ற வகையில் நிதி வழங்க வேண்டுமென்று ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள்
முயற்சிகளுக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. விடுத்ததற்கிணங்க, இன்று (29-6-2021)
வரை 353 கோடி ரூபாய் நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளது.
தமிழக மாண்புமிகு பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும்
நன்கொடைகள், கொரோனா
நிவாரணப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என உறுதியளித்தவாறே. இதுவரை
பெறப்பட்டுள்ள நிதியிலிருந்து, ரெம்டெசிவிர் போன்ற உயிர் காக்கும் மருந்துகளை அரசு
மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்காகவும், மற்ற மாநிலங்களிலிருந்து திரவ ஆக்சிஜனை
இரயில் போக்குவரத்து மூலமாக கொண்டு வருவதற்குத் தேவையான கண்டெய்னர்களை
வாங்குவதற்காகவும், முதற்கட்டமாக 50 முதலமைச்சர் கோடி ரூபாயை வழங்கிடவும், இரண்டாவது கட்டமாக
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள்
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாள்தோறும் 1.6 இலட்சம் அளவிற்கு மேற்கொள்ளப்பட்டு
வருவதைக் கருத்தில்கொண்டு, இப்பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஆர்.டி.பி.சி.ஆர்.
கிட்களை வாங்குவதற்கு 50 கோடி ரூபாயை வழங்கிடவும் மாண்புமிகு முதலமைச்சர் திரு.
மு.க. ஸ்டாலின் அவர்கள் ஏற்கெனவே ஆணையிட்டிருந்தார்கள்.
பிற அயல்நாடுகளிலிருந்து ஆக்சிஜன் உருளைகள், ஆக்சிஜன்
செறிவூட்டிகள் மற்றும் இதர மருத்துவக் கருவிகளை வாங்குவதற்கு 41.40 கோடி
ரூபாயினையும், கருப்புப்
பூஞ்சை நோய் சிகிச்சைக்காக தேவைப்படும் ஆம்போடெரிசின் உள்ளிட்ட அனைத்து உயிர்
காக்கும் மருந்துகளை வாங்குவதற்கு 25 கோடி ரூபாயினையும் முதலமைச்சர் பொது நிவாரண
நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்தும் ஆணையிட்டிருந்தார்கள்.
இதனையடுத்து, சிப்காட் நிறுவனம் மூலம், சிங்கப்பூர் மற்றும்
தற்போது முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து, கொரோனா நோய்
சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்குத் தேவைப்படும் திரவ மருத்துவ ஆக்சிஜனை
வாங்குவதற்காகவும், இந்தத் தொற்றின் மூன்றாம் அலை தொடர்பான முன்னேற்பாடு
நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள்
தொடர்புத்துறை,
சென்னை
- 9
0 Response to "அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வாங்குவதற்கும், மூன்றாவது அலையை எதிர்கொள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகளுக்கு 100 கோடி நிதி ஒதுக்கீடு - தமிழக முதலமைச்சர் அறிவிப்பு "
Post a Comment