18.06.2021 வரலாற்றில் இன்று , சில தகவல்கள்

Trending

Breaking News
Loading...

18.06.2021 வரலாற்றில் இன்று , சில தகவல்கள்

 18.06.2021  வரலாற்றில் இன்று , சில தகவல்கள்
 

முக்கிய நிகழ்வுகள் - 
  18.06.21  வெள்ளிக்கிழமை
*_நிகழ்வுகள்_*
    
618 – லீ யுவான் சீனாவின் பேரரசராக முடிசூடினார். அவரது தாங் வம்சம் அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்கு சீனாவை ஆண்டது.
 
656 – அலீ ராசிதீன் கலீபாக்களின் கலீபா ஆனார்.
 
1429 – பிரெஞ்சுப் படையினர் ஜோன் ஆஃப் ஆர்க் தலைமையில் பாட்டேய் சமரில் ஆங்கிலேயப் படையினரத் தோற்கடித்தனர். நூறாண்டுப் போர் உச்சக்கட்டத்தை அடைந்தது.
 
1633 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு இசுக்கொட்லாந்தின் மன்னராக எடின்பரோவில் முடிசூடினார்.
 
1767 – ஆங்கிலேயக் கடற்படைத் தலைவர் சாமுவேல் வால்லிசு தாகித்தியை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்.
 
1778 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியப் படையினர் பிலடெல்பியாவைக் கைவிட்டு வெளியேறினர்.
 
1812 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அமெரிக்கக் காங்கிரசு பிரித்தானியா, கனடா, அயர்லாந்து மீது போரை அறிவித்தது.
 
1815 – நெப்போலியப் போர்கள்: வாட்டர்லூ சமரில் நெப்போலியன் பொனபார்ட் வெல்லிங்டன் பிரபுவினால் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து நெப்போலியன் பிரான்சின் அரசாட்சியை இரண்டாம் தடவையாகவும், இறுதியாகவும் இழந்தான்.
 
1830 – பிரான்சு அல்சீரியாவை ஊடுருவியது.
 
1858 – சார்லஸ் டார்வின் தனது படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய முடிவுகளுக்கு ஒப்பான ஆய்வு அறிக்கைகளை ஆல்ஃவிரடு அரசல் வாலேசுவிடம் இருந்து பெற்றார். இதனை அடுத்து டார்வின் தனது ஆய்வு அறிக்கைகளை வெளியிட வேண்டி வந்தது.
 
1869 – இந்திய ரூபாய் அதன் வெள்ளியில் குறிக்கப்பட்ட துணை அலகுகளுடன் இலங்கையின் சட்டப்படியான நாணயமாக அறிவிக்கப்பட்டது.
 
1887 – வேற்று நாடு ஒன்று தமது நாடுகளுடன் போரில் ஈடுபட்டால் இரு நாடுகளும் நடுநிலை வகிப்பதென்ற ஒப்பந்தத்தில் செருமனியும், உருசியாவும் கையெழுத்திட்டன.
 
1900 – வெளிநாட்டுத் தூதுவர்கள், அவர்களது குடும்பத்தினர் உட்பட சீனாவில் உள்ள அனைத்து வெளிநாட்டவரும் கொல்லப்பட வேண்டும் என சீனாவின் பேரரசி டோவாகர் சிக்சி ஆணை பிறப்பித்தார்.
 
1908 – சப்பானியர்கள் 781 பேர் பிரேசிலின் சான்டோசு கரையை அடைந்ததுடன் சப்பானியக் குடியேற்றம் அங்கு ஆரம்பித்தது.
 
1908 – பிலிப்பைன்சு பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
 
1928 – வானோடி அமேலியா ஏர்ஃகாட் அத்திலாந்திக்குப் பெருங்கடலை விமானத்தில் கடந்த முதல் பெண் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
 
1946 – சமூகவுடைமைவாதி ராம் மனோகர் லோகியா போத்துக்கீசருக்கு எதிராக கோவாவில் நேரடி நடவடிக்கை எடுக்கக் கோரினார்.
 
1948 – கொலொம்பியா ரெக்கார்ட்சு நிறுவனம் நீண்ட நேரம் ஒலிக்கும் இசைத்தட்டை நியூயார்க்கில் வெளியிட்டது.
 
1953 – 1952 எகிப்தியப் புரட்சி முடிவுக்கு வந்தது. முகமது அலி வம்சம் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு எகிப்து குடியரசாக அறிவிக்கப்பட்டது.
 
1953 – ஐக்கிய அமெரிக்க வான்படையைச் சேர்ந்த சி-24 விமானம் சப்பான், தச்சிக்காவா என்ற இடத்தில் மோதி வெடித்ததில் 129 பேர் கொல்லப்பட்டனர்.
 
1954 – அடையாறு புற்றுநோய் மையம் அமைக்கப்பட்டது.
 
1965 – வியட்நாம் போர்: அமெரிக்கா பி-52 குண்டு வீச்சு விமானங்கள் மூலம் தெற்கு வியட்நாமில் தேசிய விடுதலை முன்னணி கரந்தடி வீரகளைத் தாக்கியது.
 
1972 – பிரித்தானிய பயணிகள் விமானம் ஒன்று இலண்டன் ஈத்ரோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இரண்டு நிமிடங்களில் தரையில் மோதி வெடித்ததில் 118 பேர் உயிரிழந்தனர்.
 
1979 – போர்த்தந்திர படைக்கலக் கட்டுப்பாட்டு உடன்பாட்டில் அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் கையெழுத்திட்டன.
 
1981 – அமெரிக்காவில் மசாசுசெட்ஸ் மாநில நாடாளுமன்றத்தில் தமிழ் ஈழத்தை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
1981 – கரவுத் தொழினுட்பத்தைக் கொண்டு தயாரான வானூர்தி லொக்கீட் எப்-117 நைட்கோக் தனது முதலாவது பயணத்தை மேற்கொண்டது.
 
1983 – சாலஞ்சர் விண்ணோடம்: சாலி றைட் விண்ணுக்குச் சென்ற முதல் அமெரிக்கப் பெண் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
 
1983 – பகாய் சமயத்தைப் பின்பற்றியமைக்காக 10 பகாய் பெண்கள் ஈரான் சீராசு நகரில் தூக்கிலிடப்பட்டனர்.
 
1985 – விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைப் படையினருக்கும் இடையில் முதலாவது போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டது.
 
1994 – வட அயர்லாந்தில் இரவு விடுதி ஒன்றில் 1994 கால்பந்து உலகக்கோப்பை போட்டிகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மீது அல்ஸ்டர் படையினர் சுட்டதில் ஆறு கத்தோலிக்கப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர், ஐந்து பேர் காயமடைந்தனர்.
 
2006 – கசக்ஸ்தானின் முதலாவது செயற்கைக்கோள், காஸ்சாட் ஏவப்பட்டது.
 
2018 – சப்பான், வடக்கு ஒசாக்காவில் 5.6 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் நால்வர் உயிரிழந்தனர்.
 
*_பிறப்புகள்_*
 
1799 – வில்லியம் இலாசல், ஆங்கிலேய வானியலாளர், வணிகர் (இ. 1880)
 
1816 – ஜங் பகதூர் ராணா, நேப்பாள மன்னர் (இ. 1877)
 
1882 – கியார்கி திமித்ரோவ், பல்கேரியாவின் 32வது பிரதமர் (இ. 1949)
 
1908 – கக்கன், தமிழக அரசியல்வாதி (இ. 1981)
 
1918 – உபைதுல்லா, மலேசியத் தமிழ் அரசியல்வாதி (இ. 2009)
 
1920 – சின்ன அண்ணாமலை, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி (இ. 1980)
 
1924 – கோபுலு, தமிழக ஓவியர் (இ. 2015)
 
1926 – ஆலன் சாந்தேகு, அமெரிக்க வானியலாளர், அண்டவியலாளர் (இ. 2010)
 
1941 – பஞ்சு அருணாசலம், தமிழகத் திரைப்பட இயக்குநர், பாடலாசிரியர் (இ. 2016)
 
1942 – தாபோ உம்பெக்கி, தென்னாப்பிரிக்காவின் 23வது அரசுத்தலைவர்
 
1948 – ஹரிலால் காந்தி, இந்திய அரசியல்வாதி, மகாத்மா காந்தியின் மூத்த மகன் (பி. 1888)
 
1949 – லேக் காச்சின்ஸ்கி, போலந்தின் 4வது அரசுத்தலைவர் (இ. 2010)
 
1959 – கெயில் வாசு ஒக்சலேட், கனடிய நிதி எழுத்தாளர், ஊடகவியலாளர்
 
1960 – தியாகராஜா மகேஸ்வரன், இலங்கை அரசியல்வாதி (இ. 2008)
 
1962 – இலிசா ராண்டால், அமெரிக்க இயற்பியலாளர்
 
1965 – த. சதீஷ்குமார், தமிழக எழுத்தாளர்.
 
1986 – ரிச்சர்ட் மேடன், இசுக்கொட்டிய நடிகர்
 
*_இறப்புகள்_*
 

1753 – கிளாடு பிரான்சுவா ஜெப்ராய், பிரான்சிய வேதியியலாளர் (பி. 1729)
 
1858 – ராணி லட்சுமிபாய் (ஜான்சிராணி), இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை (பி. 1835)
 
1922 – யாகோபசு காப்தேயன், டச்சு வானியலாளர் (பி. 1851)
 
1928 – ருவால் அமுன்சென், நோர்வே விமான ஓட்டி, நாடுகாண் பயணி (பி. 1872)
 
1936 – மாக்சிம் கார்க்கி, உருசிய புதின எழுத்தாளர் (பி. 1868)
 
1972 – மில்டன் இலாசெல் குமாசன், அமெரிக்க வானியலாளர் (பி. 1891)
 
1977 – பள்ளியகரம் நீ. கந்தசாமிப் புலவர், தமிழகப் புலவர் (பி. 1898)
 
1980 – சின்ன அண்ணாமலை, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி (பி. 1920)
 
2009 – அலி அக்பர் கான், இந்துத்தானி இசைக் கலைஞர் (பி. 1922)
 
2010 – ஜோசே சரமாகூ, நோபல் பரிசு பெற்ற போர்த்துக்கீச புதின எழுத்தாளர் (பி. 1922)
 
2011 – பிரெடிரிக் சிலுபா, சாம்பியாவின் 2வது அரசுத்தலைவர் (பி. 1943)
 
2014 – இஸ்டெபனி குவோலக், அமெரிக்க வேதியியலாளர், பொறியியலாளர் (பி. 1923)
 
சில தகவல்கள்
 
1.
மும்பை, பைகுலாவில் உள்ள மிருக காட்சி சாலையில் மலைப்பாம்புகள் இருக்கின்றன. பாம்புகள் படுத்துக்கிடக்க செயற்கை பாறைகளால் வசதி செய்யப்பட்டுள்ளது. அங்கு வரும் சுற்றுலா பயணிகள் காசுகளை பாம்பின் மீது காசுகளை வீசுவது தெரிந்தது. காசை மலைபாம்பு மீது எறிந்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும். வாழ்க்கை சூப்பராக இருக்கும் என்பதால் அப்படி செய்கிறார்களாம்.
 
2.
இதன் முடி வெள்ளையாக காணப்பட்டாலும் இதன் தோல் கருப்பாக இருக்கும். இது நீர் நாய்களை வேட்டையாடும் போது கடல் பணியை ஒரு தளமாக பயன்படுத்துகின்றது. இதற்கு 42 பற்கள் இருக்கும் மற்றும் பெண் கரடி ஆண் கரடியை விட பாதி எடை மட்டுமே இருக்கும். ஒரு சுவாரசியமான விஷயம் என்ன வென்றால் போலார் கரடிகளுக்கு அருமையான வாசனை சக்தி உள்ளது,
 
கிட்டத்தட்ட ஒன்றறை மைல் தூரத்தில் இருக்கும் கடல் நாய்களின் வாசனையை கண்டுபிடித்துவிடும். இதன் குட்டிகள் பிறக்கும்போது மனித குழந்தைகளை விட சிறியதாக இருக்கும் அதாவது ஒரு எலி அளவு மட்டுமே இருக்கும். அவைகளுக்கு உணவு நிறைய கிடைத்தால் அவை ஒரே ஆண்டில் முழு மனிதன் அளவு வளர முடியும்.
 
3.
வீரியம் மிக்க வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்துவதற்கும் மாரடைப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்று புதிய ஆய்வு கூறுகிறது. வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கொண்ட முதல் 30 நாட்களில் இந்த ஆபத்து அதிகமாக இருக்குமாம்.  சர்வதேச விஞ்ஞானிகள், 4 லட்சத்து 46 ஆயிரத்து 763 பேரிடம் இருந்து தகவல்களைச் சேகரித்து மாரடைப்பு எதனால் வருகிறது என ஆராய்ந்ததில், ஸ்டீராய்டு இல்லாத வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்வதால் மாரடைப்புக்கான ஆபத்துகள் அதிகமாக இருப்பதாகவும், குறிப்பாக, அதை உபயோகிக்கும் முதல் வாரத்தில்கூட அதிக ஆபத்துகள் வரக்கூடும் என்றும், அதிக ‘டோஸ் மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்களுக்கு முதல் மாதத்திலேயே ஆபத்துகள் வர வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
 
4.
கடல்கள் பூமியின் 71 சதவீத பரப்பை ஆக்கிரமித்துள்ளது மட்டுமல்லாமல், உயிர்களின் சுவாசத்திற்குத் தேவையான 70 சதவீத பிராண வாயுவையும் கடல்களே உற்பத்தி செய்கின்றன.  கடல்நீர் பசிபிக் , அட்லாண்டிக் , இந்தியப் , ஆர்டிக் , அண்டார்டிக் பெருங்கடல் என 5 வகைப்படும். பசிபிக் பெருங்கடல், உலக கடல்களில் எல்லாம் பெரியது. பூமியின் 30 சதவீத பரப்பை இது ஆக்கிரமித்துள்ளது.

0 Response to " 18.06.2021 வரலாற்றில் இன்று , சில தகவல்கள் "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel