18.06.2021 முக்கிய செய்திகள்

Trending

Breaking News
Loading...

18.06.2021 முக்கிய செய்திகள்

18.06.2021 முக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்
 
   *1️🔷🔶டெல்லி: ஜூலையில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசியை பரிசோதிக்க சீரம் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது நாடு முழுவதும் 18 வயது மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.*
 
   *2️🔷🔶சென்னை: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் சட்டத்தின் குறைபாடுகளை ஆராய நிபுணர்குழு அமைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தற்போதைய சூழலில் இது முக்கியமான வழக்கு என்பதால் மனுதாரர் கூடுதல் தகவல்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 32 மாவட்டங்களில் உள்ளூர் புகார் குழு அமைக்கப்பட்டுள்ள அவை முறையாக செயல்படாமல் உள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.*
 
   *3️🔷🔶திருமயம்: உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய புகாரில் ஹெச்.ராஜா மீது திருமயம் நீதிமன்றத்தில் அரசு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. குற்றப்பத்திரிக்கையின் நகலை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 29-க்கு ஒத்திவைத்தனர். 2018-ல் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது ஐகோர்ட் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக ஹெச்.ராஜா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.*
 
   *4️🔷🔶சென்னை: சென்னையில் பண மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி மதன் வாழ்ந்து வந்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018-ல் ஹோட்டல் நடத்துவதாக கூறி பணம் வாங்கி மதன் ஏமாற்றியதாக அம்பத்தூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது. ரூ.5 லட்சம் வரை பணமோசடியில் ஈடுபட்ட மதன் தனது முகத்தை காட்டாமலே யூடியூபில் வீடியோ பதிவிட்டுள்ளார்.*
 
   *5️🔷🔶திருச்சி: திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, மயிலாடுதுறையில் 8 பாலியல் புகார்கள் வந்துள்ளதாக மத்திய மண்டல ஐ.ஜி. கூறியுள்ளார். மயிலாடுதுறையில் மட்டும் பள்ளி ஆசிரியர்கள் இரண்டு பேர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாலியல் தொல்லை தொடர்பாக புகார் அளிக்க எண்கள் அறிவிக்கப்பட்ட ஒரு வாரத்தில் 8 புகார்கள் வந்துள்ளதாக ஐ.ஜி.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.*
 
   *6️🔷🔶சென்னை: பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபாவை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கைதான சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி முன்னாள் மாணவிகள் அளித்த பாலியல் புகாரில் சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி கைது செய்தது.*
 
   *7️🔷🔶டெல்லி: நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளோம் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும். செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பிரதமரிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்*
 
   *8️🔷🔶டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினேன் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். ஜி.எஸ்.டி. வரியில் தமிழ்நாட்டுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும். உலகின் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை ஒன்றிய அரசு அமைக்க வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பிரதமரிடம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.*
 
   *9️🔷🔶தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவையை விரும்பும் பொதுமக்கள் அந்தப் பகுதியில் உள்ள அரசு கேபிள் டிவி சேவையை வழங்கும் ஆபரேட்டரிடம் கேட்டுப் பெறலாம். அவ்வாறு பொதுமக்களுக்கு அரசின் சேவையை கேபிள் ஆபரேட்டர் வழங்கவில்லை என்றால் கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் புகார் அளிக்கலாம் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்*
 
   *1️0️🔷🔶முழுமையான தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாக புதுச்சேரி மாறும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்*
 
*1️1️🔷🔶விளைநிலங்களுக்கே சென்று நெல் கொள்முதல் செய்யும் வகையில் நடமாடும் கொள்முதல் நிலையங்களை அமைக்க திட்டமிட்டிருப்பதாகத் தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.*
 
   *1️2️🔷🔶மதுரைக்கு தமிழக அரசு அண்ணா நூற்றாண்டு நூலகம் போல் அறிவித்த கருணாநிதி நினைவு நூலகம் அமைப்பதற்காக இன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 6 இடங்களை ஆய்வு செய்தார். நூலகம் அமைய உள்ள இடத்தை முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்வார் எனத் தெரிவித்தார்.*
 
   *1️3️🔷🔶கனமழையால், பில்லூர் அணை நிரம்பியதைத் தொடர்ந்து, அணையிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டது. இதனால், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது*
 
   *1️4️🔷🔶கரோனா சிகிச்சைக்கு அதிகக் கட்டணம் வசூலித்ததாகக் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மீது இதுவரை 50 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்*
 
   *1️5️🔷🔶ஓசூரில் தந்தையின்றி தாயின் அரவணைப்பில் வளர்ந்து வந்த 5 பிள்ளைகளும், கரோனாவுக்குத் தாயைப் பறிகொடுத்துவிட்டு ஆதரவற்றுத் தவிக்கும் நிலையில் தமிழக அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.*
 
   *1️6️🔷🔶புதுச்சேரி, காரைக்கால் ஜிப்மர் மையங்களில் மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை 1-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன.*
 
   *1️7️🔷🔶சசிகலாவுடன் பேசுகிறவர்களை கட்சியை விட்டு நீக்க வேண்டும்: ஆர்.பி.உதயகுமார் தலைமையிலான மதுரை அதிமுக கூட்டத்தில் தீர்மானம்*
 
   *1️8️🔷🔶டெல்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். 25 நிமிடம் நடந்த இச்சந்திப்பில் தமிழகத்துக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசி மனு ஒன்றையும் அளித்தார்*
 
   *1️9️🔷🔶கூடலூரில் காயத்துடன் பிடிபட்ட காட்டு யானை, முதுமலை, அபயரணத்தில் கட்டப்பட்ட கரால் எனப்படும் மரக்கூண்டில் அடைக்கப்பட்டது.*
 
*2️0️🔷🔶திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஏரியில் குளிக்க சென்ற 2 மாணவர்கள் சேற்றில் சிக்கி பலி*
 
*எடப்பாளையம் ஏரியில் குளிக்க சென்ற 5ஆம் வகுப்பு மாணவர்கள் கோகுல், மோகன் இருவர் சேற்றில் சிக்கி பலி*
 
*2️1️🔷🔶சட்டப் பேரவை கூட்டம் நடைபெற உள்ள கலைவாணர் அரங்கில் பொதுப்பணித்துறை சார்பில் நடைபெற்றுவரும் முன்னேற்பாடு பணிகளை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு*
 
*2️2️🔷🔶தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை அளவினை ஆய்ந்து பரிந்துரை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி திரு.த.முருகேசன் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைத்து அரசாணை வெளியீடு!!!_* 
*தலைமறைவாக இருந்த 'பப்ஜி' மதன் கைது*
 
யூடியூப் சேனில் ஆபாசமாக பேசி சம்பாதித்து தலைமறைவாக இருந்த பப்ஜி மதனை போலீஸார் கைது செய்தனர்.
 
ஆபாசமாக பேசி பப்ஜி விளையாட்டை ஒளிப்பரப்பி வந்த மதன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறைக்கு புகார் வந்தது. பெண்கள் குறித்து ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் மதன் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். மதன் மீது ஆன்லைன் மூலமாக 159 புகார்கள் வந்துள்ளன. விபிஎன் சர்வரை பயன்படுத்தும் மதன், தனது இருப்பிடத்தை கண்டுபிடிக்கமுடியாமல் செய்யும்நிலையில், பெருங்களத்தூர், சேலம் போன்ற பகுதிகளில் உள்ள பப்ஜி மதனின் வீட்டை சோதனை செய்து அவரது மனைவி கிருத்திகா, தந்தை மாணிக்கம் ஆகியோரை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
 
விசாரணையில் மதன் தொடங்கிய 3 யூடியூப் சேனலுக்கும் மனைவி கிருத்திகா அட்மினாக இருந்து வருவது தெரியவந்தது. வெளியிட்ட பப்ஜி வீடியோக்கள் மூலம் கிடைத்த வருமானத்தில் 3 சொகுசு கார்கள், 2 பங்களாக்களை மதன் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. மதனுக்கு உடந்தையாக இருந்ததாக அவரது மனைவி கைது செய்யப்பட்டு 30 ஆம்தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
இந்நிலையில் கைதுக்கு பயந்து தருமபுரியில் தலைமறைவாக இருந்த மதனை போலீஸார் இன்று கைது செய்தனர்.
 

*WTC Finals: இந்தியா Vs நியூசிலாந்து முதல் நாளில் ஆட்டம் காட்ட காத்திருக்கும் மழை*
 
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறும் சவுத்தாம்டன் நகரில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், வில்லியம்சன் தலைமயிலான நியூசிலாந்து அணியும் இன்று களம் காண்கிறது. முதல் முறையாக ஐசிசி நடத்தும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பதால் இதனை கிரிக்கெட் ரசிகர்களை அனைவரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். ஆனால் முதல் நாள் ஆட்டம் மழையால் தடைப்படும் சூழல் உருவாகியிருக்கிறது. சவுத்தாம்டனில் கடந்த சில நாள்களாக நல்ல வெயில் காய்ந்த சூழலில் அடுத்த 5 நாள்களுக்கு மழை இருக்கும் என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
 
அதற்கு ஏற்றார்போல சவுத்தாம்டன் நகரில் இன்று காலை 6 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டி நடைபெறும் சவுத்தாம்டன் நகரின் சில பகுதிகளில் 40 மில்லி மீட்டர் மழை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சனிக்கிழமையில் இருந்து மழை படிப்படியாக குறையும் என்று இங்கிலாந்து வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
 
மேலும் போட்டி நடைபெறும் முதல் நாளான இன்று மழைக்கு 80 சதவித வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் இந்தியா - நியூசிலாந்து அணிகள் டாஸ் போடும் நிகழ்வு நடக்குமா? போட்டி குறிப்பிட்ட நேரத்தில் தொடங்குமா? என்று பல்வேறு கேள்விகளுடன் காத்திருக்கிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள்.
 
 
*பெட்ரோல் விலை உயர்வு: 7 மாநிலத்தில் 100ஐ தொட்டு சாதனை.. அப்போ தமிழ்நாடு..?*
 
சர்வதசே கச்சா எண்ணெய் சந்தையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் தேவை அதிகரித்துள்ள காரணத்தால் கடந்த சில நாட்களாகக் கச்சா எண்ணெய் விலை 75 டாலர் வரையில் அதிகரித்தது. இதன் வாயிலாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
 
ஆனால் தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்தும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் கவலை அளித்துள்ளது. இதேபோல் நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வர்த்தகம் மற்றும் உற்பத்தி சந்தைகள் வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் சுமையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
புதிய உச்சத்தைத் தொட்ட பெட்ரோல் விலை.. மக்கள் தலையில் விழும் விலைவாசி உயர்வு..!
 
பெட்ரோல், டீசல் விலை
 
இன்று கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் மூலம் இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 26 முதல் 27 பைசா வரையிலும், ஒரு லிட்டர் டீசல் விலை 28-30 பைசா வரையிலும் உயர்ந்துள்ளது. இதன் மூலம் நாட்டின் பல பகுதிகளில் பெடரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தைத் தொட்டு உள்ளது.
 
5 மாநில தேர்தல் முடிவு
 
மேலும் 5 மாநில தேர்தல் முடிவுக்குப் பின்பு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் நாட்டின் பொருளாதாரம், விலைவாசி, வர்த்தகச் சூழ்நிலைகள் குறித்து எவ்விதமான புரிதலும் இல்லாமல் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது.
 
மே 4ஆம் தேதிக்குப் பின்
 
இதன்படி மே 4ஆம் தேதிக்குப் பின் செய்யப்பட்ட விலை உயர்வின் வாயிலாக மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 ரூபாயும், டீசல் விலை 7 ரூபாயும் உயர்த்தியுள்ளது.
 
100 ரூபாய் அளவை தாண்டிய 7 மாநிலங்கள்
 
இந்த விலை உயர்வின் மூலம் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, லடாக், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டியுள்ளது.
 
கேரளா, தமிழ்நாடு
 
தென்னிந்தியப் பகுதிகளில் கேரளா, தமிழ்நாடு தவிரப் பிற 3 மாநிலங்களிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தொட்டுள்ளது. இதோடு மும்பையில் இன்றைய விலை உயர்வின் மூலம் பெட்ரோல் விலை 103.8 ரூபாய் அளவில் உயர்ந்துள்ளது.
 
பெட்ரோல் விலை உயர்வு
 
இன்றைய பெட்ரோல் விலை நிலவரம்
 
டீசல் விலை உயர்வு
 
இன்றைய டீசல் விலை நிலவரம்
 
கச்சா எண்ணெய் விலை
 
இதேவேளையில் சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 75 டாலர் அளவீட்டில் இருந்து 72.51 டாலராகக் குறைந்துள்ளது. இதேபோல் அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலை 70.51 டாலர் வரையில் சரிந்துள்ளது. ஆனாலும் இந்தியாவில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது.
 
 
*விம்பிள்டன், ஒலிம்பிக்ஸ் போட்டிகளிலிருந்து நடால் விலகல்*
 
இந்த வருடம் நடைபெறுகிற விம்பிள்டன் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து விலகுவதாக பிரபல வீரர் நடால் அறிவித்துள்ளார்.
 
சமீபத்தில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் அரையிறுதிச் சுற்றில் ஜோகோவிச்சிடம் வீழ்ந்தார் நடால். கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை 20 முறையும் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை மட்டும் 13 முறையும் வென்ற நடால், ஜோகோவிச்சை வீழ்த்துவார் என்றே பெரும்பாலான ரசிகர்கள் எண்ணினார்கள். ஆனால் ஆட்ட முடிவு ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
 
இந்நிலையில் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளார் நடால். இந்த வருடம் நடைபெறுகிற விம்பிள்டன் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
 
விம்பிள்டன் போட்டி ஜூன் 28 முதல் ஜூலை 11 வரை நடைபெறுகிறது. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டி ஜூலை 23 அன்று தொடங்குகிறது.
 
என்னுடைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவை எடுப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. என்னுடைய குழுவினருடன் ஆலோசித்து இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன் என்று இதுபற்றி நடால் கூறியுள்ளார்.
 

0 Response to "18.06.2021 முக்கிய செய்திகள்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel