*1️⃣🔷🔶சென்னை: சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சபாநாயகர் அப்பாவு சந்தித்துள்ளார். 21-ம் தேதி சட்டமன்றத்தில் உரையாற்ற முறைப்படி ஆளுநருக்கு சபாநாயகர் அப்பாவு அழைப்பு விடுத்துள்ளார்.*
*2️⃣🔷🔶சென்னை: தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பது
தொடர்பாக நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது. நாளை காலை 11 மணிக்கு அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
நடத்த உள்ளார். மேலும் தளர்வுகள் வழங்குவது குறித்து நிபுணர்களின் கருத்தை
முதலமைச்சர் கேட்கிறார்.*
*3️⃣🔷🔶சென்னை: சட்டப்பேரவை நிகழ்வை நேரலையாக
ஒளிபரப்புவது குறித்து பரிசீலித்து முடிவு செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு
கூறியுள்ளார். சட்டப்பேரவையில் உரையாற்ற மரபுப்படி ஆளுநருக்கு அழைப்பு விடுத்தேன்*
*4️⃣🔷🔶கோவை: அன்னூர் அருகே பேக்கரி வேலைக்கு சென்ற
இளம் பெண்ணை 3 பேர்
சேர்ந்து வன்கொடுமை செய்துள்ளனர். பேக்கரி உரிமையாளர்கள் சமீர், சிகாபுதீன் கைதான
நிலையில் மற்றோரு உரிமையாளர் மொய்தீனை போலீசார் தேடி வருகின்றனர்.*
*5️⃣🔷🔶டெல்லி: தமிழ்நாட்டு மக்களுக்கு வளமான
மற்றும் வலுவான தமிழகத்தை உருவாக்க திமுக-வுடன் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்று
ராகுல்காந்தி கூறியுள்ளார். தானும் தனது தாயார் சோனியா காந்தியும் முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது துணைவியாரை சந்தித்தது மகிழ்ச்சி என அவர்
தெரிவித்துள்ளார்.*
*6️⃣🔷🔶டெல்லி: நாடு முழுவதும் ஒரு லட்சம் முன்கள
பணியாளர்களுக்கு குறுகியகால சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டம்
தொடங்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக சிறப்பு பயிற்சி
திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.*
*7️⃣🔷🔶சென்னை: பப்ஜி மதன் ஆபாசமாக பேசி சம்பாதித்த
பணத்தில் வாங்கிய 2 ஆடி கார்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மனைவி கிருத்திகா
வங்கிக்கணக்கில் ரூ.4 கோடி இருப்பதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.*
*8️⃣🔷🔶டெல்லி: எம்.டி., எம்.எஸ் மருத்துவ
படிப்புகளுக்கான இறுதியாண்டு தேர்வை ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
தெரிவித்துள்ளது. 29 மருத்துவர்கள் சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த
நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, எம்.ஆர்.ஷா உத்தரவிட்டுள்ளனர்.*
*9️⃣🔷🔶சென்னை: அதிமுக ஆட்சியில் தான்
தமிழ்நாட்டுக்குள் நீட் தேர்வு நுழைந்தது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் தான் அரசு பள்ளிகளில் நீட் தேர்வுக்கான பயிற்சி
தொடங்கப்பட்டது. மேலும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாடு விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.*
*1️⃣0️⃣🔷🔶சென்னை: ரூ.4 கோடி உள்ள பப்ஜி
மதன்-மனைவி கிருத்திகாவின் வங்கி கணக்கை சைபர் கிரைம் போலீசார் முடக்கியுள்ளனர்.
காலையில் பப்ஜி மதனை கைது செய்த நிலையில் வங்கிக் கணக்கை சென்னை மத்திய
குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளதாக கூறப்படுகிறது*
*1️⃣1️⃣🔷🔶சென்னை: நல
வாரியத்தில் பதிவு செய்யாத 3-ம் பாலினத்தவருக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்
என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்
போது தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. குடும்ப அட்டை இல்லாத 3-ம் பாலினத்தவருக்கு
நிவாரணம் வழங்கக் கோரி கிராஸ்பானு என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார்.*
*1️⃣2️⃣🔷🔶சென்னை: நீலகிரி, கோவை மாவட்டங்களில்
இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தெரிவித்துள்ளது. மேல் பவானியில் 22, அவலஞ்சியில் 13, சின்னக்கல்லார், பந்தலூரில் தலா 6 செ.மீ மழை பதிவு
உள்ளதாக கூறப்பட்டுள்ளது.*
*🔷🔶BREAKING: இந்தியா - நியூசி., ஆட்டம் ரத்து - சற்றுமுன் அறிவிப்பு*
*🇮🇳இந்தியா - 🇳🇿நியூசிலாந்து மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.*
0 Response to "18.06.2021 மாலை முக்கிய செய்திகள்"
Post a Comment