தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தனியார் நர்சரி, பிரைமரி பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஜூலை 12 ஆம் தேதி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களை முற்றுகையிடுவோம் என தனியார் சுயநிதி பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
அதில், கொரோனா காரணமாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நர்சரி, பிரைமரி பள்ளிகள் மூடப்பட்டன. தமிழகத்தில் மொத்தமாக 2500 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதில் லட்சக்கணக்கில் பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர். கொரோனா காரணமாக 2019-2020, 2020-2021, 2021-2022 கல்வியாண்டிற்கான கல்வி கட்டணத்தை பெற்றோர்களிடம் இருந்து எங்களால் முறைப்படி பெற முடியவில்லை. இதனால் ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாக உள்ளது.
0 Response to "தமிழகம் முழுவதும் விரைவில் பள்ளிகள் திறப்பு – சுயநிதி பள்ளிகள் சங்கம் கோரிக்கை! "
Post a Comment