முக்கிய செய்திகள்
*2️⃣🔷🔶மதுரை: மதுரையில் பைக்ரா பகுதியில் அனுமதியை புதுப்பிக்காமல் இயங்கி வந்த மேலும் ஒரு முதியோர் காப்பகம் மூடப்பட்டுள்ளது. மேலும், மூடப்பட்ட காப்பகத்தில் இருந்த 22 முதியவர்களை வேறு காப்பகத்திற்கு மற்றம் செய்த நிலையில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல், எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி செயல்பட்டு வந்ததால் மூடப்பட்டுள்ளது.*
*3️⃣🔷🔶டெல்லி: ரஃபேல் விமான கொள்முதல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை சந்திக்க மோடி அரசு மறுப்பது ஏன்? என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ஜே.பி.சி. விசாரணையை மோடி அரசு சந்திக்க மறுப்பதற்கான பல்வேறு கேள்விகளை எழுப்பி ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார்.*
*4️⃣🔷🔶டெல்லி: ஆப்பிரிக்கா நாட்டில் மக்கள் தொகையில் 1.1% பேருக்கே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதால் 3வது அலையில் சிக்கியுள்ளது. மேலும், இந்தாண்டு இறுதிக்குள்ளாகவே ஆப்பிரிக்கா கொரோனாவின் 4வது அலையைக் சந்திக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆப்பிரிக்க கண்டத்தில் 3வது அலை தாக்குதலால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. மேலும், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.*
*5️⃣🔷🔶டேராடூன்: உத்தரகாண்ட் புதிய முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமிக்கு எதிராக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனையடுத்து, 35 எம்.எல்.ஏ.க்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். உத்தரகண்ட் மாநில பாஜக சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்வான புஷ்கர் சிங் தாமி இன்று பதவியேற்றார்.*
*6️⃣🔷🔶கரூர்: கரூர் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய பரமத்தி ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளரான அதிமுக நிர்வாகி வசந்தகுமார் என்பவரை கைது செய்து போலீஸ் விசாரணையில் ஈடுபடுத்தியுள்ளது. கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வந்த தகவலின் அடிப்படையில் போலீஸ் வசந்தகுமார் வீட்டில் சோதனை நடத்திய நிலையில் கைது செய்யப்பட்டார்.*
*7️⃣🔷🔶தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அதிமுக முன்னாள் அமைச்சர் அய்யாறு வாண்டையார்(90) உடல்நலக்குறைவால் காலமானார். சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அய்யாறு வாண்டையார் உயிரிழந்தார். 2001ல் திருவையாறு அதிமுக எம்எல்ஏவான அய்யாறு வாண்டையார் அறநிலையத்துறை அமைச்சராக இருந்துள்ளார்.*
*1️⃣1️⃣🔷🔶ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரதோஷம், அமாவாசை தினத்தை ஒட்டி சதுரகிரி மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜூலை 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை 4 நாள்களுக்கு மகாலிங்கம் மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.*
*1️⃣2️⃣🔷🔶திருவனந்தபுரம்: கேரளத்தின் குருவாயூர் கோயிலின் மூத்த யானையான வலிய மாதவன்குட்டி(61) உடல்நலக் குறைவால் மரணம் அடைந்துள்ளது. குருவாயூர் கேசவன் யானையுடன் வலிய மாதவன்குட்டி பல ஆண்டுகளுக்கு முன் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது. கம்பீரமான தோற்றம் கொண்ட மாதவன்குட்டி யானை பலமுறை குருவாயூர் கிருஷ்ணன் சிலையை சுமந்து சென்றுள்ளது.*
*🏵️❀❀••┈┈•C®️K•┈┈••❀❀🏵️*
*1️⃣3️⃣🔷🔶டெங்கு கொசு பரவல்; தண்ணீர் தேங்கும் பொருட்களை அகற்றவும்: சென்னை மாநகராட்சி வேண்டுகோள்*
*1️⃣4️⃣🔷🔶ஸ்டாலின் சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வார்: அமைச்சர் செந்தில்பாலாஜி பெருமிதம்*
*1️⃣5️⃣🔷🔶கரோனா ஒழியாவிட்டாலும் தளர்வுகளை அறிவித்துள்ளோம்; பொதுமக்கள் கட்டுப்பாட்டுடன் இருந்தால் எந்த அலையும் வராது: முதல்வர் ஸ்டாலின் பேச்சு*
*1️⃣6️⃣🔷🔶எடியூரப்பா விரிக்கும் வலை, அழைப்பை நம்பி பேசாதீர்கள்: முதல்வர் ஸ்டாலினுக்கு ராமதாஸ் வேண்டுகோள்*
*1️⃣7️⃣🔷🔶சுதந்திரக் காற்றைச் சுவாசித்த சங்கர் யானை: 141 நாட்களுக்குப் பின்னர் கூண்டிலிருந்து விடுதலை*
*1️⃣8️⃣🔷🔶தீபாவளிக்கு 1.5 டன் ஆவின் இனிப்புகளை வீட்டுக்கு எடுத்துச் சென்ற ராஜேந்திர பாலாஜி: அமைச்சர் நாசர் பேட்டி*
*1️⃣9️⃣🔷🔶உடுமலை அருகே பல கோடி ரூபாய் மதிப்புடைய 300 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறை தயக்கம்*
*4️⃣🔷🔶கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4,300 லிட்டர் சாராய ஊரல், 431 லிட்டர் சாராயம், 45 மது பாட்டில்களை பறிமுதல் செய்து சம்பவ இடத்திலேயே போலீசார் கொட்டி அழித்தனர்.*
*6️⃣🔷🔶பெரம்பலூர்: பெரம்பலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஓசூர் மற்றும் சூளகிரி சுற்றுவட்டார இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் சுற்றுவட்டார இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரமாக மிதமான மழை பெய்து வருகிறது.*
*7️⃣🔷🔶டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39.93 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 3,993,035 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 184,546,101 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 168,893,022 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 77,790 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.*
*8️⃣🔷🔶பழனி: கோயிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பழனி மலைக் கோயிலில் பக்தர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். முன்பதிவு செய்தவர்களுக்கு தனி வழியும், செய்யாதவர்களுக்கு தனி வழியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.*
*9️⃣🔷🔶ஆற்காடு: ஆற்காடு தோப்புகானா பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 1.5 கி.கி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.*
*1️⃣0️⃣🔷🔶நியூயார்க்: அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்தில் வெயில் தாக்கத்திற்கு கடந்த ஒரு வாரத்தில் 95 பேர் மரணம் அடைந்துள்ளனர். அமெரிக்காவின் வடமேற்கு மற்றும் கனடா ஆகிய நாடுகளில் கடந்த வாரத்தில் சுட்டெரிக்கும் அனல் காற்றுக்கு 500க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் இதுவரை இல்லாத அளவில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இவற்றில், ஓரேகான் மாகாணத்தில் மட்டும் வெயில் பாதிப்புக்கு 95 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.*
*1️⃣2️⃣டிவி' நடிகர் கைது*
*மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த, 'டிவி' நடிகர் பிரச்சின் சவுகான், சமீபத்தில் ஒரு விருந்தில் பங்கேற்றபோது, தன்னிடம் அத்துமீறி நடந்ததாக பெண் ஒருவர் புகார் செய்தார்*.
- நமது நிருபர் -
கோயிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பழனி மலைக் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். முன்பதிவு செய்தவர்களுக்கு தனி வழியும், செய்யாதவர்களுக்கு தனி வழியும் ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பப்பட்டனர்.
ஆற்காடு தோப்புகானா பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 1.5 கி.கி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
*🏵️❀❀••┈┈•C®️K•┈┈••❀❀🏵️*
*திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிப்பதற்காக சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு இன்று பல்வேறு தரப்பு மக்களும் வந்ததால், ஆட்சியர் அலுவலகச் சாலை மக்கள் கூட்டத்தால் பரபரப்புடன் காணப்பட்டது*
*கரோனாவில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிதி; பாமக பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு*
*பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வைக் கண்டித்து கரூரில் தேமுதிக சார்பில் விறகு அடுப்பில் சமைத்து தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.*
*தமிழகத்துக்கு ஜுலை மாதத்துக்கான மத்திய அரசின் தொகுப்பில் இருந்து 71 லட்சம் தடுப்பூசிகளை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.*
*புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா தொற்றானது இரட்டை இலக்கமாகக் குறைக்கப்பட்டுள்ளது என மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.*
__________________
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் 71 நாட்களுக்கு பிறகு மீண்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி.
கொரோனா விதிகளைப் பின்பற்றி சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து தரிசனத்திற்கு அனுமதி. கோவிலில் பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு
__________________
__________________
__________________
__________________
__________________
__________________
பெண்ணாடம் அருகே வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சவுந்தரசோழபுரம் - அரியலூர் கோட்டைக்காடு பகுதியை இணைக்கும் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. கோடை மழையால் வெள்ளாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் தரைப்பாலம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது
__________________
கரூர் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பிச்சம்பட்டியில் பிரபு என்பவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து அங்கு பரபரப்பு நிலவுவதால் 50க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருக்கின்றனர்.
__________________
இதையடுத்து ஏனாதி மேல்பாக்கம் ஊராட்சியில், போலீசார் கண்காணித்தபோது ஏரியில் இருந்து டிராக்டரில் மணல் எடுத்துக் கொண்டிருக்கும்போது சிலரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.
__________________
__________________
__________________
__________________
__________________
__________________
__________________
__________________
__________________
__________________
__________________
0 Response to "06.07.2021 முக்கிய செய்திகள் மற்றும் சுவாரசியமான தகவல்கள் ஒரே பதிவில் "
Post a Comment