10 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 4 - கவிதைப்பேழை - நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் - குலசேகராழ்வார்

Trending

Breaking News
Loading...

10 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 4 - கவிதைப்பேழை - நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் - குலசேகராழ்வார்

10  ஆம்  வகுப்பு - தமிழ் - இயல்  4 - கவிதைப்பேழை - நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் - குலசேகராழ்வார்


நுழையும் முன்:

தமிழர், அறிவியலை வாழ்வியலோடு இணைத்தே கவிதை எழுதியிருக்கின்றனர். சங்க இலக்கியத்தில் அறிவியல் கருத்துகள் நிறைந்துள்ளன. அதற்கு இணையாகப் பக்தி இலக்கியங்களிலும் அறிவியல் கருத்துகள் செறிந்திருக்கின்றன என்பதற்கு ஒரு சோற்றுப் பதமாய் நாலாயிரத் திவ்யப் பிரபந்தமும் விளங்குகிறது.

 

நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்

 

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்

மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்

மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா! நீ

ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே.


பாடல் பொருள்

 

மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணை கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரிடம் அன்போடு பழகுவார். அதுபோன்று வித்துவக் கோட்டம்மா நீ உனது மாயையால் நீங்காத துன்பத்தை எனக்குத் தந்தாலும் உன் அடியவனாகிய நான் உன் அருளையே எப்போதும் எதிர்பார்த்து வாழ்கின்றேன்.

 

சொல்லும்  பொருளும்

சுடினும் – சுட்டாலும், துயர் – துன்பம்

இலக்கணக் குறிப்பு

மீளாத்துயர் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

நூல் வெளி :

நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது பெருமாள் திருமொழி. இதில்105 பாடல்கள் உள்ளன. இவற்றைப் பாடியவர் குலசேகராழ்வார். இவரின் காலம் எட்டாம் நூற்றாண்டு.

நாலாயிரத் திவ்யப்பிரபந்த முதலாயிரத்தில் 691ஆவது பாடல் பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பாடல் தரவு கொச்சகக் கலிப்பா வகையைச் சேர்ந்தது.

 

0 Response to "10 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 4 - கவிதைப்பேழை - நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் - குலசேகராழ்வார்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel