
பிளஸ்-2 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி 99 சதவீதம் நிறைவு பெற்றுவிட்டதாகவும், முதல்-அமைச்சரின் உத்தரவுக்காக கல்வித்துறை காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அதன்படி, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 50 சதவீதம், பிளஸ்-1 பொதுத்தேர்வில் 20 சதவீதம், பிளஸ்-2 செய்முறைத்தேர்வில் 30 சதவீதம் என்ற அடிப்படையில் 100 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.
இந்த உத்தரவின்படி, அரசு தேர்வுத்துறை பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் தயாரிக்கும் பணிகளில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகிறது. சி.பி.எஸ்.இ. இந்த மாதம் இறுதிக்குள் மதிப்பெண் முடிவுகளை அறிவிக்க இருக்கிறது. அதற்கேற்றாற்போல் தமிழக அரசும் பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் என்று பேசப்படும் நிலையில், மாணவர்களுக்கான மதிப்பெண் தயாரிக்கும் பணிகள் 99.99 சதவீதம் நிறைவு பெற்றுவிட்டதாகவும், முதல்-அமைச்சரின் உத்தரவுக்காக அரசு தேர்வுத்துறையும், கல்வித்துறையும் காத்திருப்பதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அந்தவகையில் பார்க்கும்போது, பிளஸ்-2 மாணவர்களுக்கான மதிப்பெண் எப்போது வேண்டுமானாலும் வெளியிடப்பட வாய்ப்பு இருப்பதாக கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
0 Response to "பிளஸ்-2 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி 99 சதவீதம் நிறைவு "
Post a Comment