சென்னை : பிளஸ் 2 மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி துவங்கியது.
தமிழகத்தில்,
கடந்த கல்வி
ஆண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக,
10ம்
வகுப்பு, பிளஸ் 1 பொது தேர்வு மற்றும் பிளஸ் 2
செய்முறை
தேர்வு அடிப்படையில், மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல்,
கடந்த 19ம் தேதி வெளியிடப்பட்டது.
மாணவர்களின் மொபைல் போன் எண்ணுக்கு மதிப்பெண் விபரம் அனுப்பப்பட்டது. தற்காலிக
மதிப்பெண் சான்றிதழை, 22ம் தேதி முதல் ஆன்லைனில்
பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது .
இந்நிலையில்,
ஆன்லைனில்
பதிவிறக்கம் செய்யாத மாணவர்களுக்கு, அவர்கள் படித்த பள்ளிகளில்,
நேற்று முதல்
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி துவங்கியது. ஒவ்வொரு பள்ளியிலும்,
மாணவர்களின்
மதிப்பெண் சான்றிதழுடன், பள்ளி மாற்று சான்றிதழான,
டி.சி.,யும், நன்னடத்தை சான்றிதழும் வழங்கப்பட்டன.

0 Response to "பிளஸ் 2 மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி"
Post a Comment