தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு? – விரைவில் முதல்வர் அறிவிப்பு!

Trending

Breaking News
Loading...

தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு? – விரைவில் முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு? – விரைவில் முதல்வர் அறிவிப்பு!


தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில்
, பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த கல்வி ஆண்டு முழுவதும் பள்ளிகள் திறக்க வில்லை. மாணவர்கள் ஆன்லைன் முறையில் மட்டுமே பாடங்களை கற்றனர். தற்போது இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து அரசு பல்வேறு தளர்வுகளையும் அறிவித்து வருகிறது. இருப்பினும், கல்வி நிலையங்கள் திறப்பு குறித்து அரசு இன்னும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.

தொடர்ந்து தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கு ஆசிரியர் சங்கங்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் போன்ற பல தரப்புகளில் இருந்தும் அரசுக்கு கோரிக்கை வந்த வண்ணம் உள்ளது. தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களும் பள்ளிகள் திறப்பு குறித்து தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறார். இந்நிலையில், தஞ்சாவூர் அருகே பெரம்பூர் பகுதியின் செங்கழுநீர் ஏரியை தூர்வாரும் பணிகளை மேற்படுவதற்காக நேரில் சென்றார். அப்போது அவரிடம் பள்ளிகள் திறப்பு குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு, தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் போது எந்த அளவு கவனம் தேவையோ, அதேபோல் தான் தற்போது பள்ளிகள் திறப்பு குறித்த முடிவை எடுக்கும் போதும் கவனம் வேண்டும். இதனால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பை தமிழக முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்று அவர் கூறியுள்ளார்.

0 Response to "தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு? – விரைவில் முதல்வர் அறிவிப்பு!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel