தமிழ்நாட்டில் நேற்று முதல் மீண்டும் ஆம்னி பேருந்து சேவை!

Trending

Breaking News
Loading...

தமிழ்நாட்டில் நேற்று முதல் மீண்டும் ஆம்னி பேருந்து சேவை!

தமிழ்நாட்டில் நேற்று முதல் மீண்டும் ஆம்னி பேருந்து சேவை!

 

 


தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலையை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து
, அரசு, தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
 
அதன்படி, கொரோனா தொற்று குறைவாக உள்ள சென்னை, காஞ்சிபுரம், தென் மாவட்டங்கள் உள்பட மொத்தம் 27 மாவட்டங்களில் போக்குவரத்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று முதல் பொதுப் போக்குவரத்து மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
 
சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் தொலைதூர அரசு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. அதேபோல் பிற மாவட்டங்களிலிருந்தும் சென்னைக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், தமிழகத்தில் செயல்பட்டு வரும் 4,000க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளன.
 
அரசுப் பேருந்துகளை தவிர சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கும், பிற ஊர்களில் இருந்து சென்னைக்கும் ஏராளமான தனியார் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட்டு வரும் நிலையில், சில காரணங்களை அவை இயக்கப்படாமல் இருந்தன.

0 Response to "தமிழ்நாட்டில் நேற்று முதல் மீண்டும் ஆம்னி பேருந்து சேவை!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel