தமிழ்நாடு பாடத்திட்ட வடிவமைப்பு ஆலோசனைக் குழு உறுப்பினராக சுப.வீரபாண்டியன் நியமனம் - தமிழ்நாடு அரசு உத்தரவு.

Trending

Breaking News
Loading...

தமிழ்நாடு பாடத்திட்ட வடிவமைப்பு ஆலோசனைக் குழு உறுப்பினராக சுப.வீரபாண்டியன் நியமனம் - தமிழ்நாடு அரசு உத்தரவு.

தமிழ்நாடு பாடத்திட்ட வடிவமைப்பு ஆலோசனைக் குழு உறுப்பினராக சுப.வீரபாண்டியன் நியமனம் - தமிழ்நாடு அரசு உத்தரவு.


முன்னதாக
 தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் லியோனியை நியமித்தது தமிழக அரசு. அதனை தொடர்ந்து தற்போது  தமிழ்நாடு பாடத்திட்ட வடிவமைப்பு ஆலோசனைக் குழு( Advisory Board Member) உறுப்பினராக சுப.வீரபாண்டியனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சுப.வீரபாண்டியனை யார்தெரிந்து கொள்வோம்.

சுபவீ என்று சுருக்கமாய் அழைக்கப்படும் சுப. வீரபாண்டியன்  சிறு வயது தொடங்கி, திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, தாய்மொழிப் பற்று, பெண் விடுதலை, பகுத்தறிவு முதலான கருத்துகளைத் தமிழகமெங்கும் பரப்பி வருபவர். பெரியார், அம்பேத்கர் பற்றாளர். இறைமறுப்பாளர். ஈழ விடுதலை ஆதரவாளர். கடந்த கால் நூற்றாண்டிற்கும் கூடுதலாகப் பொதுவாழ்வினர். சென்னைக் கல்லூரியொன்றில் 21 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிவிட்டுத் தன் 45ஆம் வயதில் விருப்ப ஓய்வு பெற்றவர். ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம் என்னும் மூல முழக்கத்தை முன்வைத்து, 2007ஆம் ஆண்டு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்னும் இயக்கத்தை நிறுவியவர்.

 

இன்றுவரை அவ்வமைப்பின் பொதுச்செயலாளர். ' கருஞ்சட்டைத் தமிழர் ' என்னும் மாதமிருமுறை இதழின் ஆசிரியர். இலக்கிய ஆர்வலர். அரசியல், வரலாறு, இலக்கியம் எனப் பல்வேறு துறைகளில் 18 நூல்களை எழுதியுள்ளார். கடந்த 40 ஆண்டுகளாகத் தமிழகத்தின் தலைநகரில் வாழ்ந்து வருகின்றார்.

 

0 Response to "தமிழ்நாடு பாடத்திட்ட வடிவமைப்பு ஆலோசனைக் குழு உறுப்பினராக சுப.வீரபாண்டியன் நியமனம் - தமிழ்நாடு அரசு உத்தரவு."

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel