JEE முதன்மைத் தேர்வு தேதி அறிவிப்பு.

ஜேஇஇ முதன்மை ( அட்வான்ஸ்ட் ) தேர்வு நடைபெறவுள்ள
தேதியை மத்திய அரசு திங்கள்கிழமை
அறிவித் தது . இதுதொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சுட்டுரையில்
வெளியிட்ட பதிவில் , “ இந்திய தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களில் ( ஐஐடி ) சேர்க்கை
பெறுவதற்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வு அக்டோபர் 3 - ஆம் தேதி நடைபெறும் . கரோனா பரவல்
தடுப்பு விதிமுறைகள் அனைத்தையும் பின்பற்றி தேர்வு நடத்தப்படும் ” என்று தெரிவித்தார் .
முன்னதாக ஜூலை 3 - ஆம் தேதி நடைபெறவிருந்த ஜேஇஇ முதன்மைத் தேர்வு கரோனா தொற்று
காரணமாக ஒத்திவைக்கப் பட்டது . நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை
பெறுவதற்கு ஜேஇஇ முதல்நிலை ( மெயின்ஸ் ) தேர்வு நடத்தப்படுகி றது . அந்தத் தேர்வு ஜேஇஇ
முதன்மைத் தேர்வை எழுதுவதற்கான தகுதித் தேர்வாகவும் கருதப்படுகிறது
0 Response to "ஜேஇஇ முதன்மைத் தேர்வு தேதி அறிவிப்பு."
Post a Comment